என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து-ஆஸ்திரேலியா"
- உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள்.
- மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியாவும், 4-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மெல்போர்னில் நடந்த முந்தைய டெஸ்டில் இரு நாளுக்குள் அடங்கியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான ஆஸ்திரேலியா சரிவில் இருந்து வலிமையாக மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். அத்துடன் மூத்த வீரர் உஸ்மான் கவாஜா இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவதால் அவரை வெற்றியோடு வழியனுப்ப தீவிரம் காட்டுவார்கள். ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாட் மர்பி களம் காண்கிறார்.
அதே சமயம் மெல்போர்ன் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் கூடுதல் உற்சாகமடைந்துள்ளனர். இந்த டெஸ்டிலும் வென்று தொடரை 2-3 என்ற கணக்கில் முடிக்க ஆர்வமாக உள்ளனர். எதிரணியின் பந்து வீச்சு எப்படி இருந்தாலும் தொடர்ந்து ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடிப்போம் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
மெல்போர்னில் 10 மில்லிமீட்டர் அளவுக்கு புற்களை வைத்ததால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு தாறுமாறாக கைகொடுத்ததுடன், மோசமான ஆடுகளம் என்று ஐ.சி.சி. முத்திரை குத்தியது. அதனால் சிட்னி ஆடுகளம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து சிட்னி ஆடுகள பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறுகையில், 'போட்டிக்கு 3 நாட்கள் இருக்கும் போது ஆடுகளம் பசுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். புற்கள் எதுவும் தென்படவில்லை என்றால் அது தான் கவலைக்குரிய விஷயம். இன்று (ேநற்று) காலை கொஞ்சம் வெயில் அடித்தது. நாளையும் (இன்று) வெயில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அது ஆடுகளத்தில் உள்ள பசுமையை நீக்கி விடும். தற்போதைக்கு ஆடுகளத்தன்மை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். போட்டி 5-வது நாள் வரை நீடிக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 2011-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்தது.
- 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் 82 ரன்கள் வித்தயாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிககு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது.
3வது டெஸ்டின் முதல் இன்னிங்சி் ஆஸ்திரேலியா 371 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலயா 349 ரன் எடுத்தது. 435 ரன் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 352 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
- இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
177 ரன்கள் பின்தாங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
65 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜேசன் ராய் 1 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 12 ரன்னிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 20 ரன்னிலும், ஜோ ரூட் 1 ரன்னிலும், மோர்கன் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது தத்தளித்தது. ஜோஸ் பட்லர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடினார். அடில் ரஷித்தை ஒருபக்கம் வைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடினார். சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், சதம் அடித்து கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 122 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.
அவரது பேட்டிங்கை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலியா கேப்டன், தற்போதைய நிலையில் டோனியை விட ஜோஸ் பட்லர்தான் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பட்லர் சிறந்தவர். மிகவும் சிறந்தவர். தற்போதைய நிலையில் ஒயிட் பால் போட்டியில் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்.
அவருக்கு போட்டியாக தற்போது ஏராளமான போட்டியாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. எம்எஸ் டோனி மிகவும் சிறந்த வீரர். ஆனால், தற்போதைய நிலையில் பட்லர் முன்னிலையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டியில் தனது பலன் என்ன என்பதை புரிந்து வைத்திருக்கிறார்’’ என்றார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ஒரு கட்டத்தில் 6.3 ஓவரில் 60 ரன்கள் என்றிருந்த நிலையில், மொயீன் அலியின் சுழல் பந்தில் சிக்சி 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. மொயீன் அலி 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த தொடரில் இருவரும் தலா 12 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன் ஸ்வான் 2010-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 11 விக்கெட்டுக்களும், 2013-ல் ட்ரெட்வெல் இந்தியாவிற்கு எதிராக 11 விக்கெடடுக்கள் வீழ்த்தியதுமே சாதனையாக இருந்தது.






