என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலயா"

    • இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு.
    • ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் மிகவும் வருத்ததை ஏற்படுத்தியது. இந்தியா தனது விருந்தினர்களிடம் காட்டும் அக்கறை, அரவணைப்புக்கு பெயர் பெற்றது.

    இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை |விரைவாக கைது செய்த மத்திய பிரதேச போலீசாரை பாராட்டுகிறோம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்போம்" என்றார்.

    • டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.

    இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

    ×