search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world cup cricket 2019"

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

    உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

    கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மட்டுமே வரவில்லை. மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் எச்சரித்துள்ளார். #CWC2019 #WorldCup2019
    இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி இடம்பிடித்தது.

    அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ரஷித் கான் உள்ளார். ஐசிசி தரவரிசையில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் ரஷிகத் கான், உலகக்கோப்பையில் விளையாடும் முன்னணி அணிகளுக்கு எங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவது குறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவது அவசியமானது. உலகக்கோப்பையைில் சும்மா வந்து கலந்து கொண்டு பின்னர் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஒரு அணியாக சரியான திட்டமிடுதலுடன் இங்கிலாந்து செல்வோம்.



    உலகக்கோப்பை தொடரில் விளையாடும் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதால், உலகக்கோப்பைக்கு தயாராக ஐபிஎல் மிகச்சிறந்த தொடராகும். தலைசிறந்த பயிற்சியாளர்கள் நம்மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். இது எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. மிகவும் சந்தோசமாக ஐதராபாத் அணியில் விளையாடுகிறேன். ஏராளமான நேர்மறையான விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதை உலகக்கோப்பைக்கு எடுத்துச் செல்வேன்.
    சரியாக விளையாடாத வீரர்களுக்கு உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காது என பயிற்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WorldCup2019
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டது. அடுத்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

    ஐந்தாவது போட்டியில் இலங்கை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டிக்வெல்லா (95), சமரவிக்ரமா (54), சண்டிமல் (80), குசால் மெண்டிஸ் (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்தது.

    மழை பெய்ததால் இங்கிலாந்து அணிக்கு 26.1 ஓவரில் 352 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை எட்டுவது முடியாத காரியம் என்றாலும், இங்கிலாந்து சிறப்பாக விளையாடி கவுரவமான ஸ்கோரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் 219 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இதை இங்கிலாந்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடவில்லை.

    அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றாத இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை வெல்ல விரும்புகிறது. அதற்கேற்றபடி இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியும் விளையாடி வருகிறது.



    இந்நிலையில் இலங்கை அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசனையில் உள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான டிரெவர் பெய்லிஸ் ‘‘இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால், உலகக்கோப்பைக்கான அணியில் இருக்கமாட்டார்கள்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் மோர்கன், ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் குர்ரான், ரஷித், பிளங்கெட், பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், வுட், டேவிட் வில்லே போன்றோர் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×