என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Justice of the Supreme Court"

    • பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார்.
    • பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது.

    இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

    அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த சூர்யகாந்த், ஒரு சிறிய நகரத்தில் ஒரு வழக்கறிஞராக தொடங்கி நாட்டின் நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை எட்டியுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் ஒரு பகுதியாக சூர்யகாந்த் இருந்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில், பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார். காலனிய கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட பெருமையும் நீதிபதி சூர்யகாந்துக்கு உண்டு.

    1967 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தீர்ப்பை ரத்து செய்த ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் ஒரு பகுதியாக இருந்தார். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தது.

    நாட்டின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உளவு பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதி சூர்யகாந்தும் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் சட்டவிரோத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சைபர் நிபுணர்கள் குழுவை அமைத்தார்.

    அந்த வழக்கில், "பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது" என்று அவர் அங்கம் வகித்த அமர்வு தெரிவித்த கூற்று பிரபலமானது.

    2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த அமர்வில் காந்த் இருந்தார் .

    2020 ஆம் ஆண்டில், அவரது அமர்வு காலவரையற்ற இணைய இடைநிறுத்தம் அனுமதிக்கப்படாது என்றும் இணைய அணுகல் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும் தீர்ப்பளித்தது.

    2023 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பில் வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார்.

    டிசம்பர் 2023 இல், 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியதை உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் காந்த் ஒரு பகுதியாக இருந்தார்.

    முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தார்.

    2024 நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் முழு தேர்வையும் ரத்து செய்ய மறுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.

    கடைசியாக பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுமாறு நீதிபதி சூர்யகாந்த் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன் நவம்பர் 22 நிகழ்வில் பேசிய சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 90,000 வழக்குகளை குறைப்பதே தலைமை நீதிபதியாக இருக்கும் காலத்தில் தனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    • கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அவரின் அமர்வு தெரிவித்தது.

    உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    நேற்று கடைசி வேலை நாளின்போது நடந்த பிரிவு உபசார விழாவில், தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பி.ஆர்.கவாய் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.

    அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு செல்லும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்தது செல்லும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து, வக்பு சட்ட திருத்த சரத்துகள் சிலவற்றை நிறுத்தி வைத்த உத்தரவு, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை, புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்க தடை, நீண்டகாலம் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது, மராத்தா, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் பிஆர் கவாய் இடம் பெற்றிருந்தார்.

    கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • நீதிபதி பதவியை எப்போதும் சேவை வாய்ப்பாகவே பார்த்தேன்.
    • நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார் பி.ஆர்.கவாய். தனது இறுதி பணி நாளான இன்று உச்ச நீதிமன்றத்தில் உரையாற்றிய அவர், 

    "உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொள்கிறேன். 1985 ஆம் ஆண்டு சட்டத்துறை மாணவராகச் சேர்ந்தேன். இன்று பணி நிறைவின்போது நீதித்துறை மாணவனாக விலகுகிறேன். அரசியலமைப்பு நிலையானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது எப்போதும் பரிணாமம் அடையும். எனவே நீதிமன்றங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். 

    ஒரு வழக்கறிஞராகவும், பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதியாக, பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தபோதும் இதனை  அதிகாரப் பதவியாக பார்க்கவில்லை. மாறாக சமூகத்திற்கு சேவை செய்வதற்கான, தேசத்திற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு என்று நம்பியிருக்கிறேன்.

    அம்பேத்கரின் போதனைகளிலிருந்தும், அரசியலமைப்பு முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு 1949 நவம்பர் 25 ஆம் தேதி அவர் ஆற்றிய கடைசி உரையிலிருந்தும் தான் நான் உத்வேகம் பெறுவேன். டாக்டர் அம்பேத்கர் எப்போதும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக வாதிட்டார்.

    அடிப்படை உரிமைகளை, அரசின் கொள்கைகளுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் நீதியை நிலை நாட்ட, எப்போதும் முடிந்தவரை நான் முயற்சித்தேன். எளிமையான தீர்ப்புகளை எழுதுவதில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவை கடைக்கோடி மக்களுக்காக எழுதப்பட வேண்டும்" என தெரிவித்தார். 

    2010 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி கவாய் ஆவார். 6 மாதங்களாக பதவி வகித்த கவாய், புத்த மதத்தை சேர்ந்த முதல் தலைமை நீதிபதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மே 24, 2019 அன்று மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.

    • உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
    • கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியில் உள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.

    • உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
    • அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார்.

    உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய சீனியாரிட்டியின்படி, நீதிபதி சூர்யா காந்த் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

     நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.   

    • நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது வழக்கறிஞர் தனது காலணியை வீச முயன்றார்.
    • வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

    வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.

    இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை நீதிபதி, "வழக்கறிஞர் ஒருவர் தன் மீது காலணி வீசிய சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். ஆனால், அது ஒரு மறக்க வேண்டிய கடந்தகால நிகழ்வாகவே பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    • தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல்
    • வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

    வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி மீதான தாக்குதல் தனி நபர் மீதானது அல்ல, அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பேசிய கவாயின் தங்கை, "இது ஒரு நபரின் தனிப்பட்ட தாக்குதல் அல்ல, மாறாக ஒரு நச்சு சித்தாந்தத்தால் அரசியலமைப்பின் மீதான தாக்குதல். இந்த வகையான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலை நாம் நிறுத்த வேண்டும். அரசியலமைப்பிற்கு எதிராக யாராவது செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    • வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
    • தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

    வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.

    அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்ராவிடக்கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.

    இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், "சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்," என்று அந்த வழக்கறிஞரை பாராட்டி பதிவிட்டிருந்தார். இதன்பின் அந்த பதிவை பாஸ்கர் ராவ் நீக்கியும் உள்ளார். 

    இந்நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார். 

    • பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார்.
    • தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.

    இதனால் நான் காயப்பட்டேன்... நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை

    இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்" என்று தெரிவித்தார்

    முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். 

    • வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன்
    • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும்

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ''இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது'' என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உச்சநீதிமன்றத்

    தலைமை நீதியரசர்

    @JusticeBRGavai மீது

    அநாகரிகத்தை

    வீசமுயன்றது கண்டு

    அதிர்ந்துபோனேன்

    இது

    முறைசெய்யும் நீதித்துறையைக்

    கறைசெய்யும் களங்கமாகும்

    வரம்புமீறிய வழக்கறிஞரை

    வன்மையாகக் கண்டிக்கிறேன்

    பிற்போக்குத்தனம்தான்

    இந்த அவமானச் செயலுக்கு

    அடிப்படை என்று அறிகிறேன்

    தென்னிந்தியாவில்

    பிற்போக்குச் சக்திகளைப்

    பிடரிபிடித்துத் தடுத்து

    நிறுத்தியதைப்போல

    வடஇந்தியாவில்

    செய்யத் தவறிவிட்டார்கள்

    அந்தச் சாத்திரத்தின்

    ஆத்திரம்தான் இது

    காலில் அணியவேண்டியதைக்

    கையில் அணிந்தபோதே

    அவர் அறிவழிந்துபோனார் என்று

    அறிய முடிகிறது

    அதை

    மென்மையாகக் கையாண்ட

    நீதியரசரின் சான்றாண்மையைப்

    பெரிதும் போற்றிப்

    பெருமிதம் கொள்கிறோம்

    நீதியரசரின் மாண்பு

    அவரை மன்னித்துவிட்டது

    வீச முயன்ற பொருளும்

    அவரிடமே

    ஒப்படைக்கப்பட்டு விட்டது

    வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்

    அவர் பேசியபொருளை

    மறந்துவிட முடியாது

    அது

    நாட்டின் பெரும்பான்மை மக்களைக்

    காலங்காலமாய்க்

    கழுத்தில் மிதித்து

    அழுத்திக் கொண்டிருக்கும்

    பழைய பொருளாகும்

    பழையன கழிய வேண்டாமா?

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டார்.
    • கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

    இந்நிலையில் தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் ராகேஷ் கிஷோரின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுவதாக இந்தியா பார் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

    • 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
    • கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

    இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற செயல் முற்றிலும் கண்டிக்கத்தக்கது" என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி தனது கண்டனங்களை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி கூறுகையில், " உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது ஒவ்வொரு இந்தியரையும் கோபமடைய செய்துள்ளது.

    கடுமையான சூழ்நிலையை சந்தித்தும் நீதிபதி கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். கவாய் அமைதி காத்தது நீதியின் மதிப்புகள், நமது அரசியலமைப்பின் உணர்வை வலுப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு" என்றார்.

    ×