என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: சூர்யகாந்த் பெயரை பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்
    X

    அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி: சூர்யகாந்த் பெயரை பரிந்துரைத்த பி.ஆர்.கவாய்

    • உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
    • கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியில் உள்ளார்.

    நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.

    Next Story
    ×