என் மலர்
நீங்கள் தேடியது "Diwali gift"
- பட்டாசு வெடிக்கும்போது தளர்வான உடை வேண்டாம்! ஜீன்ஸ் போன்ற டைட்டான உடை அணிய வேண்டும்!
- சாதாரண பட்டாசுக்கும், பசுமை பட்டாசுக்கும் வித்தியாசம் என்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். அப்படி அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும்போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது. குறிப்பாக பெண்கள், தீபாவளிக்கு தாங்கள் வாங்கிய புத்தாடைகளை அணிந்துக்கொண்டு பட்டாசு வெடிக்கும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, தங்கள் உடை தளர்வாக இல்லாமல், இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பட்டாசு வெடிக்கும்போது, எப்படிப்பட்ட உடைகளை அணியலாம்? பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும்? பசுமை பட்டாசுகள் என்றால் என்ன? உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இதுபோன்ற பட்டாசுகளை வெடிக்கும்போது கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்!
பட்டாசு வெடிக்கும்போது...
* பட்டாசுகளை வீட்டுக்கு வெளியே தூரமாக வைத்து வெடிக்க வேண்டும்.
* ராக்கெட் போன்ற வாண வெடிகளை குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் வெடிக்க வேண்டும்.
* வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும்போது கண்டிப்பாக காலணி அணிய வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது அருகிலேயே ஒரு வாளியில் நீரை வைத்துக்கொள்ள வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பக்கத்தில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
* பெரியவர்களின் மேற்பார்வையில்தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
* பட்டாசு வெடித்து முடித்தவுடன் கட்டாயம் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
உடை விஷயத்தில் பெண்களுக்கு கவனம் தேவை!
* பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணியுமாறு தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
* பெண்கள் இறுக்கமான பருத்தி ஆடைகளையோ, ஜீன்ஸ் போன்ற ஆடைகளையோ அணிய வேண்டும். அவை எளிதில் காற்றில் பறந்து தீப்பிடிக்காது.
* காற்றில் பறக்கும் தளர்வான உடைகள், எளிதில் தீப்பற்றிவிடும் என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.
* பட்டு, நைலான் உள்ளிட்டவற்றால் ஆன உடைகள் மற்றும் சேலை, துப்பட்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

திறந்த வெளியில்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
தீப்பற்றினால்...!
* பட்டாசு வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக உடலில் தீப்பற்றினால் ஓடக்கூடாது.
* தீயை உடனே தண்ணீர் ஊற்றி அணைக்கலாம் அல்லது கீழே படுத்து உருளலாம்.
* தீப்புண்ணின் மீது உடனே தண்ணீர் ஊற்ற வேண்டும்.
* தீப்புண்ணுக்கு மருந்து போடுகிறேன் என்ற பெயரில், இங்க், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
* கண்ணில் தீப்பொறி பட்டுவிட்டால், உடனடியாக சுத்தமான நீரை ஊற்றிக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
சாதாரண பட்டாசு vs பசுமை பட்டாசு!
* காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, மாசுபாட்டை குறைக்க, பசுமை பட்டாசுகளை வெடிக்க, அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது.
* பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* சாதாரண பட்டாசுகளில், ஆர்சனிக், லித்தியம், பேரியம் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* பசுமை பட்டாசுகளில் இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
* பசுமை பட்டாசுகளில் அலுமினியம், ஈயம், கார்பன் ஆகியவை உள்ளன. இவை பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் புகையை குறைக்கும்.
* சாதாரண பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுவாக 160 டெசிபல் சத்தம் வெளிவரும்.
* பசுமை பட்டாசில் 110 முதல் 125 டெசிபல் சத்தம் மட்டுமே வெளிவரும்.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
தீபாவளி முன்னிட்டு, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூரில் (வ)ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.
ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசினை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், குப்புசாமி,தேவேந்திரன், மணிகண்டன், லோகநாதன், பேரூராட்சிதுணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, திமுக நகர நிர்வாகிகள் பழனி, இளங்கோ, ராஜேஷ், ராஜாராம், வினோத், சின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேபோல், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம் இராசன்தாங்கலில் கீழ்பென்னாத்தூர் தெற்குஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, திமுக தெற்கு-ஒன்றிய நிர்வாகிகளுக்கு பட்டாசு, இனிப்பு வகைகள் கொண்ட தீபாவளி பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- நீட் தேர்வுக்கு எதிராக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்
- ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனது கையெழுத்திட்டு, நீட் க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொது மக்கள், மாணவர்கள், திமுக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.
பின்னர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்.ஞானவேலன் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு மற்றும் பணமுடிப்பு என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அவைத் தலைவர் ராமநாதன், துணை செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பொன்னம்பலம், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம்:
தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டம்,மங்கலம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைபணியாளர்கள், தண்ணீர் திறப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளிபரிசை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களான முகமதுஇத்ரீஸ், ராதாநந்தகுமார்,ராஜாபரமேஸ்வரன்,ரபிதீன்,பால்ராஜ்,அர்ஜூனன்,மங்கலம் ஊராட்சி செயலாளர் நாகராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , மங்கலம் ஊராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது
- ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மொபைல் கடை நடத்தி வருபவர் ஹபிபுல்லா. சமூக ஆர்வலர்.
இவர் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு தன்னால் முடிந்த உதவியும், சமூக வலைதளம் மூலம் நண்பர்கள் உதவியுடன் சாலையோரம் வசிக்கும் எளியவர்களுக்கு உணவு, உடை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் ஹபிபுல்லா தீபாவ ளியை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கினார்.
கோவில் நிறுவனர் ஜெகதீ சன் நகர்மன்ற உறுப்பினர் தேவி சீராளன், சமூக செயற்பாட்டாளர் சீராளன் கோவில் அர்ச்சகர் அச்சிதராவ் உள்ளிட்டோர் ஹபிபுல்லாவிற்கு தீபாவளி வாழ்த்துகளை கூறி ஸ்ரீராகவேந்திரர் படத்தை வழங்கினர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய பெட்டகம்.
- தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அடங்கிய 'மதி தீபாவளி பரிசு பெட்டகம்' தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பரிசு பெட்டகத்தில் சிவப்பு அரிசி, கம்பு, சோளம், ராகி, தினை, கருப்புக் கவுனி, கருப்பு உளுந்து, நரிப்பயிர், சாமை, ஆவாரம் பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டு வகைகள், சாமை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் இடம் பெற்றுள்ளன.
இத்துடன் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப் புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பரிசு பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் இவற்றை மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ விரும்பும் வகையில் www.tncdw.org என்ற இணையதளம் மற்றும் 76038 99270 என்ற செல்போன் எண் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மொத்த விற்பனைக்கு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
இந்த விற்பனை வருகிற 23-ந்தேதி வரை நடை பெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்லடம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் நகராட்சி பணியாளர்கள் 350 பேருக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபாவளி பரிசை நகராட்சி தலைவர் கவிதா மணி ராஜேந்திரகுமார் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான் பிரபு,வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், மதிமுக. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் அருள்புரத்தில் உள்ள தி.மு.க. கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில். ஒன்றிய திமுக. செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் 126 கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கணபதிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், துணைத் தலைவர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாணவரணி சேகர்,திமுக. நிர்வாகிகள் மேனகா துரைசாமி, ஸ்ரீ சிவா, கந்தசாமி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதே போல பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியை சேர்ந்த கரடிவாவிபுதூர் ஏ.டி. காலனி, இந்திரா நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட் பகுதியில் வசிக்கும் 500 குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சத்து60 ஆயிரம் மதிப்பில் வேட்டி,சட்டை, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு தொகுப்பை கரடிவாவி ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் தனது சொந்த செலவில் வழங்கினார்.






