search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு
    X

    தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

    • நீட் தேர்வுக்கு எதிராக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்
    • ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ். ஞானவேலன் தலைமையில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கிய நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக தனது கையெழுத்திட்டு, நீட் க்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பொது மக்கள், மாணவர்கள், திமுக தொண்டர்கள் கையெழுத்திட்டனர்.

    பின்னர் மேற்கு ஒன்றிய செயலாளர் விஎஸ்.ஞானவேலன் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு, இனிப்பு மற்றும் பணமுடிப்பு என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அவைத் தலைவர் ராமநாதன், துணை செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், பொன்னம்பலம், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×