கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு
Published on

கீழ்பென்னாத்தூர்:

தீபாவளி முன்னிட்டு, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூரில் (வ)ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் சி.கே.அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசினை கீழ்பென்னாத்தூர் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், குப்புசாமி,தேவேந்திரன், மணிகண்டன், லோகநாதன், பேரூராட்சிதுணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, திமுக நகர நிர்வாகிகள் பழனி, இளங்கோ, ராஜேஷ், ராஜாராம், வினோத், சின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேபோல், கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம் இராசன்தாங்கலில் கீழ்பென்னாத்தூர் தெற்குஒன்றிய செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு, திமுக தெற்கு-ஒன்றிய நிர்வாகிகளுக்கு பட்டாசு, இனிப்பு வகைகள் கொண்ட தீபாவளி பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com