என் மலர்
நீங்கள் தேடியது "Ayodhya Deepotsav"
- சரயு ஆற்றின் கரையில் 26 லட்சத்துக்கு அதிகமான அகல் விளக்கு ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர்.
லக்னோ:
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை இன்று நடத்தியது. அப்போது வாணவேடிக்கையும் நடத்தப்பட்டது.
சரயு ஆற்றின் கரையில் 26,17,215 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.
இதனை பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து, உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கண்டுகளித்தார். இதேபோல், திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர். அப்போது தீபங்களை ஒன்றாக சுழற்றினர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார்.
அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், உலக அரங்கில் உத்தர பிரதேசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அடையாளம் ஒன்றை வடிவமைப்பதில் இந்த திருவிழா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமர் முன்பு முதல் விளக்கை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த கால அரசில் அயோத்தியின் ஆன்மீக முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டது. ராம பக்தர்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
- சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் ஆண்டு தீபோற்சவத்துக்காக சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
அயோத்தி மாவட்டத்தில் உள்ள ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலைக்கழக மாணவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை உலக சாதனை முயற்சியாக சுமார் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி முன்னிலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
- இந்த வரலாற்று நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், பார்வையிட்டனர்.
அயோத்தி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று 6-வது ஆண்டாக தீப உற்சவ திருவிழாவை பிரதமர் மோடி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதையொட்டி சரயு நதிக்கரை படித்துறையில் மொத்தம் 15 லட்சத்து 76 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. அப்போது ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் என்ற முழக்கம் அயோத்தி முழுவதும் எதிரொலித்தது.

அயோத்தியில் உள்ள அவத் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் இதில் பங்கேற்றனர். ஒரே நேரத்தில் இவ்வளவு விளக்கு ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனையை படைத்தது. பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள், நேரில் பார்த்தனர்.

புதிய கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை அந்நிறுவன அதிகாரிகள், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கினர். கடந்த ஆண்டு நடைபெற்ற அயோத்தி தீப உற்சவ திருவிழாவில் 9 லட்சத்து 41 ஆயிரம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முதல்முறையாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.






