என் மலர்
நீங்கள் தேடியது "Guinness Record"
- கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது.
- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர்.
சென்னை:
ஜனவரியில் சென்னை ஹூப்பரில் இருந்து புறப்பட்ட மூன்று மாணவிகள் மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா (14) லண்டனில் உள்ள கின்னஸ் தலைமையகத்தை அடைந்தனர். இவர்களின் இலக்கு ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனைபடைப்பதாகும்.
சாதனை படைக்க களமிறங்கும் முன்பு வரை மூன்று மாணவிகளும் ஒருவித பயத்துடனே காணப்பட்டனர், எனினும் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அலுவலர்கள் முன்- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது. எனினும், இவர்கள் சவாலை மன உறுதியுடன் எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களை வழிநடத்தும் ஒரே சக்தி இதுவாகவே இருந்தது. மதிய வேளை துவங்க இருந்த சமயத்தில், அதிகாரப்பூர்வ பட்டமளிப்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் கிரேக் கிளெண்டே தலைமையில் நடைபெற்றது.
ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்திய மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா ஆகிய 3 பேரும் முதல் முயற்சியில் மொத்தம் 6 கின்னஸ் சாதனைகளை முறியடித்தனர்.
ஆனாலும், முயற்சியை கைவிடாத குழுவினர் மீண்டும் போட்டியில் பங்கேற்றனர். அப்போது, ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர். சாதனைபடைத்த மமதி, பாலசரணிதா பாலாஜி, ஜணனி ஆகிய 3 பேருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
- கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளார்.
- உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.
வாஷிங்டன் :
உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார்.
அதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார் எலான் மஸ்க்.
அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைகொண்டு வந்ததால் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்ததாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.
இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தநிலையில், தற்போது அது 137 பில்லியன் டாலராக (சுமார் ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) அவர் இழந்துள்ளார்.
உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.
- ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
- சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
ஏற்காடு:
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ்ராஜ் (வயது 36).
ஆசிரியர்
இவர் ஏற்காடு நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சேலம் ஏற்காடு தனியார் தங்கும் விடுதி கூட்ட அரங்கில் வேகமாக டை கட்டி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்க ளாக ஏற்காடு அரசு மருத்துவர்கள் தாம்சன் மற்றும் பிரியதர்சினி ஆகியோரும் நேரம் காப்பாளர்களாக தனியார் பள்ளி விளையாட்டு பயிற்சி யாளர்கள் பாண்டியன் மற்றும் ஜெயக்குமாரும் இருந்தனர்.
கின்னஸ் சாதனை
ஏற்கனவே 2017-ம் ஆண்டு நாக்பூரை சேர்ந்த தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் தனது கழுத்தில் டை காட்டியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சதீஷ்ராஜ் 11.55 வினாடிகளில் தனது கழுத்தில் டை கட்டி முடித்து தீபக் சர்மாவின் கின்னஸ் சாதனையை முறியடித்தார்.
பயிற்சி
இந்த சாதனை குறித்து சதீஷ் ராஜ் கூறுகையில், எனது மகன் பள்ளிக்கு செல்லும் போது அவருக்கு நான் தான் தினமும் டை கட்டிவிடுவேன். அப்போது அவருக்கு மிக வேகமாக டை கட்டிவிடுவதை கண்ட எனது மனைவி நீங்கள் வேகமாக டை கட்டுகிறீர்கள். இதையே ஒரு சாதனையாக செய்யலாம் என்று என்னிடம் கூறினார். அதனை தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வேகமாக டை கட்டும் பயிற்சியை மேற்கொண்டேன்.
இந்த பயிற்சியின் மூலம் தீபக் சர்மா என்பவர் 12.89 நொடிகளில் டை கட்டிய கின்னஸ் சாதனையை முறி யடித்து, 11.55 நொடிகளில் டை கட்டியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது மனைவி கூறிய அந்த வார்த்தை தான், இந்த சாதனைக்கு காரணம் என்றார்.
- 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- உலக யோகா தின விழா கொண்டாட்டம் மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது.
- மாணவர்கள் விருச்ச விருச்சாசாசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் அபயாம்பிகை யோகா பயிற்சி நிலையம் சார்பில் உலக யோகா தினவிழா மஹாதான தெருவில் உள்ள ஜெயின் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ரயில்வேதுறை ராமமூர்த்தி, பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துறையை சேர்ந்த மகாமணி வரவேற்றார்.
இதில் மாணவ மாணவிகள் விருச்ச விருச்சா ஆசனம், அர்த்த சக்ராசாசனம் போன்ற ஆசனங்களை செய்து காண்பித்தனர்.கின்னஸ் சாதனை, உலக சாதனை படைத்தவர்களை லயன்ஸ் மோகன்ராஜ், நகராட்சி கடை நலச் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ், ஜெயின் யுவா சங்க தலைவர் மஹாவீர் சந்த் ஜெயின், முத்துக்குமார், ஜெயந்தி கனேசன் வாழ்துரையும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்துக் கொன்டு யோகா மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியின் முடிவில் சுலோச்சனா நன்றி கூறினர்.
- ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்
- அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நாகை அவுரி திடலில் கின்னஸ் உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது விறுவிறுப்பான சினிமா பாடல்களுக்கு ஏற்ப உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் சிலம்பு சுற்றியது அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் ெமய்யநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சிலம்பம் கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் சிலம்பம் கலையை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பம் பயிற்றுநர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் .சிலம்ப கலையை ஊக்குவிக்கும் 100 ஆசாங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் ஏராளமான யானைகள் கோவில்களிலும், தனியாராலும் வளர்க்கப்பட்டு வருகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் யானை காப்பகங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இங்கும் பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் உள்ள கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்க அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். கேரளாவில் உள்ள மன்னர் குடும்பமான திருவிதாங்கூர் ராஜகுடும்பம் சார்பில் 1950-ம் ஆண்டு கோடநாடு யானை காப்பகத்தில் இருந்து ஒரு பெண் யானை குட்டி வாங்கப்பட்டது.

இந்த நிலையில் 88 வயது ஆன நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாட்சாயினி யானையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த யானை திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனம் கோடு மனமேல்குன்று பகுதியில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான யானை காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த யானைக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்பு காரணமாக தாட்சாயினி யானை நேற்று பிற்பகல் மரணம் அடைந்தது. இந்த தகவல் கிடைத்ததும் திருவிதாங்கூர் ராஜகுடும்ப பிரதிநிதி அங்கு சென்று தாட்சாயினி யானைக்கு அஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தாட்சாயினி யானை பிரசித்திபெற்ற பத்மநாபபுரம் பத்மநாபசுவாமி கோவில் சாமி ஊர்வலம் உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த சுவாமி ஊர்வலங்களில் பங்கேற்ற பெருமை பெற்றது.
கடந்த 2016-ம் ஆண்டு இந்த யானைக்கு ‘கஜராஜா’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் அதே ஆண்டு ஆசியாவிலேயே அதிக வயது உள்ள யானை என்ற சிறப்பையும் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் தாட்சாயினி யானை இடம்பெற்றது.
கேரள மக்களின் மனம் கவர்ந்த யானையாக வலம் வந்த தாட்சாயினின் மரணம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அந்த யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அந்த காப்பகத்திலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #Dakshayani
சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மாநில அரசு சார்பில் பெண்கள் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.
காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடக்க இடமான காசர்கோட்டில் கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவும், முடிவு இடமான திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தாகரத்தும் பங்கேற்றனர். ரீமா கல்லிங்கல் உள்பட நடிகைகள் பலரும் மனித சுவர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்கள் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட மனித சுவர் போராட்டத்தில் அதிக அளவு பெண்கள் திரண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். 620 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போராட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது. அதை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பாகுபாடு இல்லாமல் பெண்கள் கலந்துகொண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். சட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டமாக கருதுகிறோம்.
பெண்களுக்கு எதிராக செயல்படும் பழமைவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வழபாடுகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan