என் மலர்
நீங்கள் தேடியது "தாய்ப்பால் தானம்"
- குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை.
- தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது.
குழந்தை பிறந்து, நஞ்சுக்கொடி பிரிந்த அடுத்த நிமிடம் தாயின் மார்பில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.
முதல் கர்ப்பம எனில், கர்ப்பம் உறுதியானது முதலே (அதாவது முதல் மூன்று மாதங்களிலேயே) தாயின் மார்பில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி தொடங்கிவிடும்.
அது போலவே ஒரு சுவாரசியமான விஷயம். என்னவென்றால் கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது பார்த்தால் குழந்தை "எப்படி தாயிடம் உறிஞ்சி குடிக்க வேண்டும்?!" என்பதை பயிற்சி செய்து கொண்டே இருக்கும்.
குட்டி போட்டு பாலூட்டும் மேமல்ஸ் என்று சொல்லப்படும் பாலூட்டிகள் பிரிவில் மனித குழந்தை தான் மிகவும் பாவமாக பார்க்கப்படுகிறது.
பிறந்தது முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை உணவை தேடிச் சென்று பெற முடியாத நகர முடியாத ஒரு ஜீவனாக இருப்பது மனித குழந்தைதான்.
எனவே அது தாய்ப்பாலையே நம்பி இருக்கிறது என்று கூறலாம்.
தாய்ப்பாலில் என்னென்ன சத்துகள் உள்ளன?
கார்போஹைட்ரேட்
புரோட்டின்
கொழுப்பு சத்து
விட்டமின்கள்
எதிர்ப்பு சக்தி மருந்துகள்
நீர்
நொதிகள், ஹார்மோன்கள்
நிறைந்தது தாய்ப்பால்.
குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை. குழந்தை வளர வளர தாய்ப்பாலில் உள்ள சத்துகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவு எவ்வளவு?
பிறந்த குழந்தையினுடைய தாய்ப்பால் தேவை ஒரு முறைக்கு 10 மில்லி அளவு தான்.
அது படிப்படியாக அதிகரித்து, ஒரு முறைக்கு 150-200 மிலி வரை தாய் பால் கொடுக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
எந்த நிலை தாய்ப்பால் கொடுக்க வசதியானது? சரியானது?
குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை தாய் சவுகரியமாக சாய்ந்து அமர்ந்து கொள்ளலாம். பிறகு தாயும் குழந்தையும் படுத்துக் கொள்ளலாம். தாய்க்கு ஏற்ற வசதியான சூழ்நிலை தான் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்றது. ஒருமுறை 20 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு நாளில் பத்து பதினைந்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு:
பால், பழச்சாறுகள், சூப்புகள் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும் ஏதாவது அருந்திவிட்டு பிறகு தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
அது தவிர உணவிலும் கடுமையான பத்திய முறைகளை விட்டு எல்லா காய்கறிகளையும் தாய்க்கு சேர்த்து நல்ல ஒரு சரிசமமான உணவை கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது ஏதாவது மாத்திரைகளை சாப்பிட வேண்டுமா? புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டுமா?
கால்சியம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தாயின் உடல் நலத்தை பாதுகாப்பதோடு குழந்தைக்கு தேவையான கால்சியத்தை தருவதற்கும் உதவும். டிஎச்ஏ உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தையினுடைய மூளை வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பிற்கும் சத்திற்கும் தேவையான புரோட்டின் மாவுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
பிரசவமானதும் முதலில் சுரக்கும் சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் நல்லதா? குழந்தைக்கு கொடுக்க வேண்டுமா? குழந்தை பிறந்ததும் தாய்க்கு முதலில் சுரக்கும் நீர் போன்ற திரவம் கொலஸ்ட்ரம் எனப்படுகிறது. இது ஏராளமான எதிர்ப்பு சக்தி இம்யுனோ குளோபுளின்களை கொண்டுள்ளது. அதனால் இதை கட்டாயம் குழந்தைக்கு புகட்ட வேண்டும். பல வீடுகளில் குழந்தைக்கு கொடுக்காமல் கீழே பிழிந்து விட்டு விடுவார்கள். அது மிகவும் தவறான பழக்கமாகும்.
தாய்ப்பால் சுரக்கா விட்டால் என்ன காரணம்?
தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது மிக மிக அரிதாகும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் வரை காத்திருக்கலாம். முதல் 10 நாட்கள் வரை கூட ஒரு சிலருக்கு பால் சுரக்க தாமதமாகலாம். அளவு குறைவாக இருக்கும். ஆனால் படிப்படியாக அதிகரித்து இரண்டு மாதங்கள் ஆகும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் அல்லது அதைவிட அதிகமான பால் சுரக்கும்.
கூடுதலான மன அழுத்தம் அல்லது கடினமான பிரசவம். பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உடல் சோர்வு அல்லது குழந்தை தாயின் அருகில் இல்லாமல் பச்சிளம் குழந்தை பிரிவு போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டிருப்பது, போன்றவற்றால் தாய்ப்பால் சுரப்பது ஒரு சிலருக்கு குறைவாக இருக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் காற்றோட்டமான தனிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதும் தாய்க்கு தாய்ப்பால் சுரப்பதிலும் கொடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.
தாய்ப்பால் போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
தாய்ப்பால் குடித்தவுடன் குழந்தை நன்றாக உறங்குவது, ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பது,
தாய்ப்பால் குடித்தவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுவது, இவற்றிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எப்போது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கலாம்?
முதல் நான்கு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. சில குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கூட தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்கு பிறகு மற்ற உணவுகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம்.
குறைந்தபட்சம் 9 மாதங்களில் இருந்து ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. உலக சுகாதார நிறுவனம் (WHO)பரிந்துரைப்பது இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதாகும்.

ஜெயஸ்ரீ சர்மா
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
பிரசவமான உடனே தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்பப்பை நன்றாக சுருங்கும். இரத்தப்போக்கின் அளவு குறையும். முக்கியமாக தாயின் எடை குறையும். அதிக எடை ஏறாது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் எளிதாக இருக்கும்.
குழந்தை நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை தாய்க்கு உண்டாகும். அத்துடன் செலவும் வேலையும் குறைவு. மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய முக்கிய காரணியாக தாய்ப்பால் கொடுப்பது விளங்குகிறது.
சிசுவுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு இறுகிய பந்தம்
உருவாகிறது. குழந்தைக்கு மிகுந்த பாதுகாப்பு உணர்வும் பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தையின் உடல் எடையும் சரியான அளவு இருக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு வேறு உணவுகள் எப்போது தேவைப்படும்? தண்ணீர் கொடுக்க வேண்டுமா?
ஒரு குழந்தைக்கு 4-6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த நேரத்தில் தண்ணீர் கூட குழந்தைக்கு தேவையில்லை. ஆனால் புட்டி பால, மற்ற உணவுகளை துவங்கும் பொழுது குழந்தைக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரை கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்கா விட்டால் என்ன செய்யலாம்?
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பச்சிளங்குழந்தை ஐந்து நாட்கள் வரை மலம் கழிக்காவிட்டாலும், ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், ஒரு நாளைக்கு பத்து முறை வரை மலம் கழிக்கலாம். அதுவும் நார்மல்.
தாயின் அழகு கெட்டுவிடுமா?
தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சிக்கு விலையேதும் இல்லை. குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து ஒரு தாயை காக்கிறது. தாய்ப்பால் நிறுத்திய பிறகு சரியான உடற்பயிற்சி செய்தால் அழகில் எந்த குறைபாடும் ஏற்படாது.
உலகின் சில ஐரோப்பிய நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 10% விட குறைவாக இருக்கிறது. அதாவது 100 -ல் 6 தாய் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் விருப்பமுடன் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து அயர்லாந்து கிரீஸ் நார்வே போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 60% ஆகும். ஆனால் பெரும்பாலான பணியிடங்களில் தாய்க்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடிய வசதிகள் இல்லை. அதை அரசு மேம்படுத்த வேண்டும்.
சிசுவின் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும் உடல் உறுதிக்கும் அஸ்திவாரமாகும்.
அதுபோலவே இன்று ஆரோக்கியமாக இருக்கும் நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டியது தன் ரத்தத்தை பாலாக்கி பரிந்தூட்டிய நம் அன்னைக்கு!
தாய் சேய் நலம் காப்போம்!
வாட்ஸ்அப்: 8925764148
- எனது மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன்.
- தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
கோவை:
தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது.
பிரசவத்துக்கு பின்னர், உடல் நல பாதிப்புகள் காரணமாக சில தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்காத நிலை ஏற்படுகிறது.
அதேபோல பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பதால் தனிமையில் வாடும் குழந்தைகள், ஆதரவின்றி மீட்கப்படும் தொட்டில் குழந்தைகள், குறைந்த எடை கொண்ட குழந்தைகள் ஆகியோருக்கும் தாய்ப்பால் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க அரசு சார்பில் தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி பலர் அறிந்திருந்தாலும், தாய்மார்கள் சிலர் தானம் அளிக்க முன்வருவதில்லை.
இந்நிலையில், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக கோவை வடவள்ளி அருகே உள்ள பி.என்.புதூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா(27) என்பவர் கடந்த 10 மாதங்களாக, அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்காக தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்.
எனது கணவர் பைரவன். எங்களுக்கு அசிந்தியா (4) என்ற மகனும், 10 மாதம் ஆன ப்ரக்ருதி என்ற மகளும் உள்ளனர்.
மூத்த மகன் பிறந்தபோதே, தாய்ப்பால் தானம் திட்டம் குறித்து அறிந்திருந்தேன். ஆனாலும் அப்போது என்னால் தானம் செய்ய முடியவில்லை.
அரசு மருத்துவமனைகளில் தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றனர்.
அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் குறைந்த எடையிலும், உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் பிறந்திருப்பர்.
இதுபோன்ற குழந்தைகளுக்கு அவர்களது தாயாரால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே.
எனவே, தாய்ப்பால் கிடைக்காத பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க தானம் அளிக்க முடிவு செய்தேன்.
திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, தாய்ப்பால் தானத்தை சமூக சேவை அடிப்படையில் நான் அளித்து வருகிறேன்.
எனது மகள் பிறந்த 5-வது நாளில் இருந்து தாய்ப்பால் தானம் கொடுக்கத் தொடங்கினேன்.
அதிலிருந்து 7 மாத காலத்தில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன். தற்போது 10 மாத காலத்தில் 135 லிட்டருக்கு மேல் தாய்ப்பால் தானம் செய்துள்ளேன்.
தினமும் எனது குழந்தைக்கு அளித்தது போக, மீதம் உள்ள தாய்ப்பாலை அதற்கு என பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பாக்கெட்டில் சேகரித்து விடுவேன். பின்னர் அதனை, குளிர்சாதன எந்திரத்தில் வைத்து விடுவோம். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை தன்னார்வலர்கள் வந்து சேகரித்து செல்வார்கள்.
அவர்கள் சேகரித்து செல்லும் தாய்ப்பாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அளித்து வருகின்றனர்.
அங்கு தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் 'கப்' மூலமாகவும், டியூப் மூலமாகவும் தேவையான குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தானத்துக்காக 'இந்தியன் புக் ஆப் அன்ட் ஆசியன் புக் ரெக்கார்ட்ஸ்' சார்பில் என்னை பாராட்டி, பாராட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 குழந்தைகளின் தாயான எலிசபெத், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார்.
- எலிசபெத் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற உதவுகிறார்.
அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.
2014-ம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார். அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
2 குழந்தைகளின் தாயான இவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 1,599.68 லிட்டர் ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
உண்மையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை என்கிறார் அவர்.
- மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது.
- தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.
புதுக்கோட்டை:
குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. 2 ஆண்டுகள் முழுமையாக தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் தாங்கள் உயிர் வாழும் காலம் வரை அதற்கு தேவையான ஆரோக்கிய அடிப்படையை தாய்ப்பால் வழங்குகிறது.
அதுமட்டுமல்லாமல் 40 வகையான புற்றுநோய்கள் நம்மை அண்டாமல் தாய்ப்பால் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு குறைந்த அளவு தாய்ப்பால் மட்டுமே சுரக்கிறது.
இந்த சூழலில் தாய்ப்பால் வங்கியில் இருக்கக்கூடிய தாய்ப்பாலை அந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்தெடுக்கிறார்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த பீர் முகமது (வயது 39). தனியார் பஸ் டிரைவரான அவர் ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் சம்சாத் பேகம் (30) என்பவருக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது. திருமணமான முதல் வருடத்தில் சம்சாத் கர்ப்பம் தரித்தார். அது குறுகிய காலத்தில் கலைந்து விட்டது.
அதன் பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை பெற்றார். அதன் விளைவாக மீண்டும் கடந்த ஆண்டு சம்சாத் பேகம் கர்ப்பமடைந்தார்.
பின்னர் பிரசவத்திற்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் மாதம் அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் ஒன்றரை கிலோ மட்டுமே அந்த குழந்தையின் எடை இருந்தது.
அதைத்தொடர்ந்து அக்குழந்தையை அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆரம்பத்தில் அந்த குழந்தை தாய்ப்பால் எடுத்து கொள்ளவில்லை. பின்னர் படிப்படியாக ஒரு மில்லி 2 மில்லி அளவுக்கு தாய்ப்பால் அருந்த தொடங்கியது.
இவ்வாறான சூழலில் சம்பத் பேகம் தனது குழந்தையின் தேவைக்கு தாய்ப்பாலை கொடுத்து விட்டு மீதமுள்ள தாய்ப்பாலினை அங்குள்ள தாய்ப்பால் வங்கிக்கு தானமாக வழங்கி வந்தார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் அவர் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சம்சாத் பேகத்துக்கு டீன் ராஜ்மோகன் கேடயம் வழங்கி பாராட்டினார்.
இதுகுறித்து நியோ நாட்டலஜி துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கூறும் போது,
இந்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டது. இதற்கு முன்பு ஒரு தாயிடம் அதிகபட்சமாக 14 லிட்டர் தாய்ப்பால் மட்டுமே தானமாக பெறப்பட்டது. இப்போது முதல் முறையாக சம்சாத் பேகம் ஒன்றரை மாதத்தில் 20 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும் ஆரம்பத்தில் பால் குடிக்க முடியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவ அவர் தயங்கவில்லை.
இது மற்றவர்களும் தங்கள் தாய்ப்பாலை தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது என்றார்.
சம்சாத்தின் கணவர் பீர் முகமது கூறும்போது,
திருமணமான முதல் ஆண்டிலேயே குழந்தையை கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று கடைசியில் குழந்தை பிறந்தது.
ஆனால் குறை பிரசவமாக இருந்ததால் புதுக்கோட்டை அரசு ராணி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். சிகிச்சைக்கு பின் கடந்த சனிக்கிழமை குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர். இப்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றார்.
சம்சாத் கூறும்போது, நான் என் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது தாய்ப்பால் குறைவாக இருந்த பல தாய்மார்கள் மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு செல்வதை பார்த்தேன். இதனால் தாய்ப்பால் தானமாக வழங்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.
- தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
- நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.
தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?
ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?
புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.
தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.
தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.
தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.
- தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயனாக ஆண்டுதோறும் தாய்ப்பால் தானம் அளிப்பவா்களின் எண்ணிக்கையும், பயனடைபவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயா்ந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் வரை 2,355 போ் தாய்ப்பால் தானம் வழங்கி உள்ளனா். இதன் மூலம் 5,511 குழந்தைகள் பயனடைந்துள்ளனா். இந்த தாய்ப்பால் வங்கி மூலம் பல குழந்தைகளுக்கு ஊட்டச்ச த்தான, ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைத்து வருவதாக ஆஸ்பத்திரி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிா்மலா கூறியதாவது:- கோவை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம் நாள்தோறும் தாய்ப்பால் தானம் பெறப்பட்டு வருகிறது. இந்த தாய்ப்பால் வங்கியில் பாதுகாப்பான முறையில் தாய்ப்பா ல் பராமரிக்க ப்பட்டு தேவைப்படும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
ஆதரவற்ற நிலையி ல் சிகிச்சைக்கு அனுமதி க்கப்படும் பச்சிளம் குழந்தைகள், குறைப் பிரசவத்தில், குறைந்த எடையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், பாலூட்ட முடியாத தாய்மாா்களின் குழந்தைகள் ஆகியோருக்கு தாய்ப்பால் அளிக்கப்படுகிறது.
மேலும், தனியாா் ஆஸ்பத்திரிகளில் பிரசவமாகி தாய்ப்பால் பற்றாக்குறை காணப்படும் குழந்தைகளுக்கும் இங்கிருந்து தாய்ப்பால் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






