என் மலர்
நீங்கள் தேடியது "தாய்ப்பால்"
- நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம்
- சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களின் தாய்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.

தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.
- குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை.
- தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது.
குழந்தை பிறந்து, நஞ்சுக்கொடி பிரிந்த அடுத்த நிமிடம் தாயின் மார்பில் தாய்ப்பால் சுரக்க ஆரம்பித்து விடும்.
முதல் கர்ப்பம எனில், கர்ப்பம் உறுதியானது முதலே (அதாவது முதல் மூன்று மாதங்களிலேயே) தாயின் மார்பில் பால் சுரப்பிகளின் வளர்ச்சி தொடங்கிவிடும்.
அது போலவே ஒரு சுவாரசியமான விஷயம். என்னவென்றால் கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும்போது பார்த்தால் குழந்தை "எப்படி தாயிடம் உறிஞ்சி குடிக்க வேண்டும்?!" என்பதை பயிற்சி செய்து கொண்டே இருக்கும்.
குட்டி போட்டு பாலூட்டும் மேமல்ஸ் என்று சொல்லப்படும் பாலூட்டிகள் பிரிவில் மனித குழந்தை தான் மிகவும் பாவமாக பார்க்கப்படுகிறது.
பிறந்தது முதல் கிட்டதட்ட நான்கு மாதங்கள் வரை உணவை தேடிச் சென்று பெற முடியாத நகர முடியாத ஒரு ஜீவனாக இருப்பது மனித குழந்தைதான்.
எனவே அது தாய்ப்பாலையே நம்பி இருக்கிறது என்று கூறலாம்.
தாய்ப்பாலில் என்னென்ன சத்துகள் உள்ளன?
கார்போஹைட்ரேட்
புரோட்டின்
கொழுப்பு சத்து
விட்டமின்கள்
எதிர்ப்பு சக்தி மருந்துகள்
நீர்
நொதிகள், ஹார்மோன்கள்
நிறைந்தது தாய்ப்பால்.
குழந்தையினுடைய தேவைக்கு ஏற்றது போல் தாய்ப்பாலில் சத்துகள் சுரப்பது அறிவியல் உண்மை. குழந்தை வளர வளர தாய்ப்பாலில் உள்ள சத்துகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவு எவ்வளவு?
பிறந்த குழந்தையினுடைய தாய்ப்பால் தேவை ஒரு முறைக்கு 10 மில்லி அளவு தான்.
அது படிப்படியாக அதிகரித்து, ஒரு முறைக்கு 150-200 மிலி வரை தாய் பால் கொடுக்க வேண்டிய தேவை இருக்கலாம்.
எந்த நிலை தாய்ப்பால் கொடுக்க வசதியானது? சரியானது?
குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை தாய் சவுகரியமாக சாய்ந்து அமர்ந்து கொள்ளலாம். பிறகு தாயும் குழந்தையும் படுத்துக் கொள்ளலாம். தாய்க்கு ஏற்ற வசதியான சூழ்நிலை தான் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்றது. ஒருமுறை 20 நிமிடங்கள் தேவைப்படும், ஒரு நாளில் பத்து பதினைந்து முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டி இருக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவு:
பால், பழச்சாறுகள், சூப்புகள் போன்றவற்றை நிறைய அருந்த வேண்டும். ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும் ஏதாவது அருந்திவிட்டு பிறகு தாய்ப்பால் கொடுப்பது நல்லது.
அது தவிர உணவிலும் கடுமையான பத்திய முறைகளை விட்டு எல்லா காய்கறிகளையும் தாய்க்கு சேர்த்து நல்ல ஒரு சரிசமமான உணவை கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது ஏதாவது மாத்திரைகளை சாப்பிட வேண்டுமா? புரோட்டின் பவுடர் சாப்பிட வேண்டுமா?
கால்சியம் மற்றும் இரும்பு சத்து மாத்திரைகளை பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தாயின் உடல் நலத்தை பாதுகாப்பதோடு குழந்தைக்கு தேவையான கால்சியத்தை தருவதற்கும் உதவும். டிஎச்ஏ உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் குழந்தையினுடைய மூளை வளர்ச்சிக்கும் அது உதவியாக இருக்கும்.
தாய்ப்பால் சுரப்பிற்கும் சத்திற்கும் தேவையான புரோட்டின் மாவுகளை உங்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.
பிரசவமானதும் முதலில் சுரக்கும் சீம்பால் அல்லது கொலஸ்ட்ரம் நல்லதா? குழந்தைக்கு கொடுக்க வேண்டுமா? குழந்தை பிறந்ததும் தாய்க்கு முதலில் சுரக்கும் நீர் போன்ற திரவம் கொலஸ்ட்ரம் எனப்படுகிறது. இது ஏராளமான எதிர்ப்பு சக்தி இம்யுனோ குளோபுளின்களை கொண்டுள்ளது. அதனால் இதை கட்டாயம் குழந்தைக்கு புகட்ட வேண்டும். பல வீடுகளில் குழந்தைக்கு கொடுக்காமல் கீழே பிழிந்து விட்டு விடுவார்கள். அது மிகவும் தவறான பழக்கமாகும்.
தாய்ப்பால் சுரக்கா விட்டால் என்ன காரணம்?
தாய்ப்பால் சுரக்காமல் இருப்பது மிக மிக அரிதாகும் குழந்தை பிறந்து இரண்டு நாட்கள் வரை காத்திருக்கலாம். முதல் 10 நாட்கள் வரை கூட ஒரு சிலருக்கு பால் சுரக்க தாமதமாகலாம். அளவு குறைவாக இருக்கும். ஆனால் படிப்படியாக அதிகரித்து இரண்டு மாதங்கள் ஆகும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் அல்லது அதைவிட அதிகமான பால் சுரக்கும்.
கூடுதலான மன அழுத்தம் அல்லது கடினமான பிரசவம். பிரசவத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய உடல் சோர்வு அல்லது குழந்தை தாயின் அருகில் இல்லாமல் பச்சிளம் குழந்தை பிரிவு போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டிருப்பது, போன்றவற்றால் தாய்ப்பால் சுரப்பது ஒரு சிலருக்கு குறைவாக இருக்கலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கும் குழந்தைக்கும் காற்றோட்டமான தனிமையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அது இல்லாதபோதும் தாய்க்கு தாய்ப்பால் சுரப்பதிலும் கொடுப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம்.
தாய்ப்பால் போதுமான அளவு உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
தாய்ப்பால் குடித்தவுடன் குழந்தை நன்றாக உறங்குவது, ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பது,
தாய்ப்பால் குடித்தவுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுவது, இவற்றிலிருந்து குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
எப்போது வரை தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்கலாம்?
முதல் நான்கு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. சில குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை கூட தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்கு பிறகு மற்ற உணவுகளை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம்.
குறைந்தபட்சம் 9 மாதங்களில் இருந்து ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது நல்லது. உலக சுகாதார நிறுவனம் (WHO)பரிந்துரைப்பது இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதாகும்.

ஜெயஸ்ரீ சர்மா
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
பிரசவமான உடனே தாய்ப்பால் கொடுப்பதால் கர்ப்பப்பை நன்றாக சுருங்கும். இரத்தப்போக்கின் அளவு குறையும். முக்கியமாக தாயின் எடை குறையும். அதிக எடை ஏறாது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதும் எளிதாக இருக்கும்.
குழந்தை நம்மால் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை தாய்க்கு உண்டாகும். அத்துடன் செலவும் வேலையும் குறைவு. மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய முக்கிய காரணியாக தாய்ப்பால் கொடுப்பது விளங்குகிறது.
சிசுவுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன?
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு இறுகிய பந்தம்
உருவாகிறது. குழந்தைக்கு மிகுந்த பாதுகாப்பு உணர்வும் பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குழந்தையின் உடல் எடையும் சரியான அளவு இருக்கிறது.
குறைந்தபட்சம் ஒரு வயது வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வளர்ந்த பிறகும் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை.
தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு வேறு உணவுகள் எப்போது தேவைப்படும்? தண்ணீர் கொடுக்க வேண்டுமா?
ஒரு குழந்தைக்கு 4-6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அந்த நேரத்தில் தண்ணீர் கூட குழந்தைக்கு தேவையில்லை. ஆனால் புட்டி பால, மற்ற உணவுகளை துவங்கும் பொழுது குழந்தைக்கு இடையிடையே வெதுவெதுப்பான நீரை கொடுப்பது நல்லது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்கா விட்டால் என்ன செய்யலாம்?
தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் பச்சிளங்குழந்தை ஐந்து நாட்கள் வரை மலம் கழிக்காவிட்டாலும், ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், ஒரு நாளைக்கு பத்து முறை வரை மலம் கழிக்கலாம். அதுவும் நார்மல்.
தாயின் அழகு கெட்டுவிடுமா?
தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்று தவறான ஒரு எண்ணம் உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது உண்டாகக் கூடிய மகிழ்ச்சிக்கு விலையேதும் இல்லை. குறிப்பாக மார்பக புற்றுநோயிலிருந்து ஒரு தாயை காக்கிறது. தாய்ப்பால் நிறுத்திய பிறகு சரியான உடற்பயிற்சி செய்தால் அழகில் எந்த குறைபாடும் ஏற்படாது.
உலகின் சில ஐரோப்பிய நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 10% விட குறைவாக இருக்கிறது. அதாவது 100 -ல் 6 தாய் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பதில் விருப்பமுடன் இருக்கிறார்கள்.
இங்கிலாந்து அயர்லாந்து கிரீஸ் நார்வே போன்ற பல ஐரோப்பிய நாடுகளும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் தாயின் சதவீதம் 60% ஆகும். ஆனால் பெரும்பாலான பணியிடங்களில் தாய்க்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடிய வசதிகள் இல்லை. அதை அரசு மேம்படுத்த வேண்டும்.
சிசுவின் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது வருங்கால தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும் உடல் உறுதிக்கும் அஸ்திவாரமாகும்.
அதுபோலவே இன்று ஆரோக்கியமாக இருக்கும் நாம் அனைவரும் நன்றியுடன் இருக்க வேண்டியது தன் ரத்தத்தை பாலாக்கி பரிந்தூட்டிய நம் அன்னைக்கு!
தாய் சேய் நலம் காப்போம்!
வாட்ஸ்அப்: 8925764148
- 6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை:
திருமணமான பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 40 சதவீத தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.
இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ளன.
தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பாலை ஒப்பிடுகையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
- தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.
60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:
தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.
வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.
பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது.
- தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது...
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
பெண்களின் உடல் கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற கால கட்டங்களில் பயங்கரமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தனக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்பதால், அவர்தம் உடல் எடை அதிகரிக்கிறது; பிரசவத்தின் பொழுது நிகழும் மாற்றங்களால், சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்; சிலருக்கு அதிகரிக்காது இருக்கலாம். ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டம் பெண்களின் கூடிய எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; இந்த ஒரு கூற்றின் உண்மை நிலை என்ன என்று இப்பொழுது படித்து அறியலாம்.!
தாய்ப்பால் அளிப்பது பெண்களின் எடையை குறைக்க உதவுமா என்ற கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்ற இரு விடைகளுமே பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பால் உருவாக பெண்ணின் உடல் சக்தியில் 25 சதவிகிதம் பயன்படுத்த படுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பு நிகழ, பெண்கள் நல்ல சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்; அச்சமயம் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவு பசியும் எடுக்கும்.
எனவே, இந்த தாய்ப்பால் அளிக்கும் முறையில் பெண்களின் எடை கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். ஆனால், இந்த நடுநிலையான ஒரு பதிலை தாண்டிய உண்மையான பதில் என்ன என்றால், அது தாய்ப்பால் அளிப்பது கண்டிப்பாக பெண்களின் உடலின் எடையை குறைய செய்கிறது என்பது தான்! உடல் எடை குறைவது, சரியாக நேர நேரத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே!
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது, குழந்தைகள் வேறு உணவு எதையும் உண்ண மாட்டார்கள்; ஆறு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கப்படும். அவ்வாறு வேறு உணவு இல்லாத, பால் மட்டும் தான் என்ற சூழலில், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலால் ஒரு நாளைக்கு 300 முதல் 700 கலோரிகள் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அளவு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே சரியாக குறையும்.
குறைந்தது 400 முதல் 600 கலோரிகளாவது பெண்ணின் உடலில் இருந்து குழந்தை பால் குடிப்பதால் குறைக்கப்பட்டு விடும்; இந்த அளவு கலோரிகள் குறைய குழந்தைகள் குறைந்த பட்சம் 20 முதல் 30 அவுன்ஸ் பாலினை கண்டிப்பாக குடித்து இருக்க வேண்டியது அவசியம்..! குழந்தைகள் ஒரு அவுன்ஸ் பால் குடிப்பதால், 20 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
பெண்களின் உடலில் இருக்கும் எடையில், பிரசவம் நிகழ்ந்து, முதன் முதலாக குழந்தை பால் குடித்ததும் 300 கலோரிகள் குறைக்கப்படும். ஏனெனில் குழந்தை அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து இருப்பதால், அதனால், அதிக அளவு பாலை குடிக்க முடியாது; பின்பு நாட்கள் செல்ல குழந்தைகள் குடிக்கும் பாலின் அளவு 300 முதல் 700 வரை என்ற அளவில் இருக்கும்.
பெண்களின் உடலுக்கு சரியாக நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 வரையிலான கலோரிகள் தேவைப்படும். இதுவே குழந்தை பிறந்து பால் கொடுக்கும் சமயங்களில், குழந்தைக்கு தேவையான பால் சுரப்பு நிகழ பெண்கள் கொஞ்சம் அதிகமான கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 3000 வரையிலான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!
இதைத்தவிர ஒரு வருடம் வரை அல்லது அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களில் சிலருக்கு குடல் சார்ந்த சர்க்கரை நோய் இருந்தால், தாய்ப்பால் அளிப்பது டைப் 2 சர்க்கரை நோய் நிலையை ஏற்படுத்தலாம்!
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது, வெளியேறும் பாலின் அளவு பெண்களின் உடல் எடையை குறைக்க செய்கிறது. அது போல், கர்ப்ப காலத்தில், பிரசவம் முடிந்த சில மாதங்களில் செய்ய முடியாத, கலவியை ஒரு குறிப்பிட்ட மாதங்களை கடந்த பின் கணவருடன் சேர்ந்து செய்தால், அச்சமயம் அந்த செயலால் கூட பெண்களின் எடை குறையும்.
தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம். பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும்.
- குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.
திருப்பூர்:
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.
குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சௌமியா, அரசு மருத்துவா் கலைச்செல்வன் ஆகியோா் பேசியதாவது:-
குழந்தைகளின் முக்கிய உணவுப்பொருள் தாய்ப்பால். இது, குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வயிறு, குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிா்ப்புத் தன்மையை பெருக்குகிறது.பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
- தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
- நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,மற்றும் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ஆறுமுகம், பட்டய தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார்.இதில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:-தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் மிகவும் நல்லது. இன்று பவுடர் பால்கள் அதிகரித்து விட்டன.
பவுடர் பால் குடிக்கும் குழந்தை கொழு, கொழுவேன இருக்கும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.தாய்ப்பாலின் எதிர்ப்பு சக்தி மிக அதிகமானது. நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் தாராளமாக கொடுக்கலாம். கர்ப்பிணிகள் காய்கறிகள், கீரைகள் பழ வகைகள் உண்பது மிகவும் நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த உறுதிமொழிஎடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி தாய்ப்பால் திட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், லோக சதீஸ்வரன்,மற்றும் யுவராஜ் மகேஷ், கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் போஷன் அபியான் திட்டத்தின் சார்பாக தாய்பால் வார விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் கீழ் போஷன் அபியான் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதாகும். குழந்தையின் முதல் 1000 நாட்கள் அதாவது தாயின் வயிற்றில் கரு உருவானது முதல் இரண்டு வயது வரையிலான நாட்களே அந்த குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியை தீர்மானிக்கிறது. முதல் 1000 நாட்களில் குழந்தையின் முக்கிய உணவு தாய்ப்பால்,குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பாலூட்டலை சாத்திய மாக்குவோம்,பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பின் கீழ் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்பாலின்முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் போஷன் அபியான் சார்பாக கண்காட்சி அரங்குகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள்,தாய்மார்கள் பாலூட்டும் முறை பற்றிய விளக்கக்காட்சி, தாய்ப்பாலின் நன்மைகள்,தானிய கலசம், உணவு பிரமிடு, கீரை வகைகள், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி திட்டப்பணிகளால் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு, சத்துமாவினால் செய்யக்கூடிய உணவுகள், சத்துமாவு கேக், சத்துமாவு உள்ளடக்கிய பொருட்கள், இரும்புச்சத்து தேர், கால்சியம் வீடு, வளர்ச்சிப்படிகள்,காய்கறிகளால் செதுக்கப்பட்ட வடிவங்கள், முதல் 1000நாட்களின் முக்கியத்துவம் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
இதனை அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் போஷன் அபியான் ஜன் அந்தோலன் கீழ் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தலுக்கான போட்டி அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரட்டுச்சான்றிதழ்கள் வழங்ப்பட்டது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பாலூட்டலை சாத்தியமாக்குவோம், பணிபுரியும் தாயின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம் என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களது பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
- உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.
பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.
அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.
சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.
வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.
திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.
தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.
- தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை உருவாக்குகிறது.
- 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது
குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

பாகற்காய்:
பாகற்காயில் நிறைந்து காணப்படும் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்கக் கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.
கறிவேப்பில்லை:
ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
தண்ணீர்:
தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் என்ற காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
கொண்டைக்கடலை:
நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
பால்:
கால்சியம், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.
- உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது
- இந்த வீகன் உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்
உலகம் முழுவதும் அண்மைக்காலங்களில் வீகன் டயட் முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. வீகன் டயட் முறையை பின்பற்றுபவர்கள் இறைச்சி உணவுகள் மட்டுமில்லாமல், கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பால், தயிர், முட்டை போன்ற உணவுப் பொருட்களையும் உட்கொள்ள மாட்டார்கள்.
முழுக்க முழுக்க காய்கறி, பழங்களை மட்டுமே மையப்படுத்திய இந்த உணவு முறையால் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்காமல் போகலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் பலர் இந்த உணவு முறையை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய நாட்டில் வீகன் டயட் முறையை பின்பற்றுவதாக கூறி, உணவு, தண்ணீர், தாய்ப்பால் என எதுவும் கொடுக்காததால் பிறந்த குழந்தை ஒன்று 1 வயது நிறைவடைவதற்குள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீகன் டயட் முறையை தீவிரமாக பின்பற்றும் 44 வயதான மாக்சிம் லியுட்டி, ஒரு வயதுக்கும் குறைவான மற்றும் 1.5 கிலோ எடையுள்ள தனது குழந்தைக்கு சூரிய ஒளியில் இருந்து ஊட்டச்சத்து கிடைக்கும் என்று பட்டினி போட்டுள்ளார்.
குழந்தையின் தாயான ஒக்ஸானா மிரோனோவா (34) தனது குழந்தைக்கு தாய்ப்பால் கூட கொடுக்க கூடாது என மாக்சிம் லியுட்டி தடுத்துள்ளார்.
மேலும் தனது குழந்தையை வைத்து பரிசோதனை செய்த அவர், குழந்தைக்கு சூரிய ஒளியால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மற்றவர்களுக்கு எடுத்து கூறியுள்ளார்.
உணவு, தண்ணீர், தாய்ப்பால் கொடுக்கப்படாததால் உடல் மெலிந்த குழந்தை நிமோனியா நோயால் உயிரிழந்துள்ளது என்று மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகனை பட்டினி போட்டு கொலை செய்த குற்றத்தில் மாக்சிம் லியுட்டிக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கடந்தாண்டு தீவிர வீகன் டயட் உரையை பின்பற்றிய 39 வயது பெண்மணி ஸன்னா சம்சனோவா பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஷ்யாவை சேர்ந்த அவர், உணவு தண்ணீர் எடுக்காமல் தீவிரமாக வீகன் டயர் முறையை பின்பற்றினார். இதனால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து வந்த அவர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீகனாக இருந்து வரும் இவர் பலருக்கும் வீகன் டயட் முறையை பின்பற்றுவது குறித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் போன்றவற்றை தயார் செய்து பலருக்கும் முன்னுதாரணமாகவும் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






