என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breastfeed"

    • 6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    • ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    சென்னை:

    திருமணமான பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 40 சதவீத தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக, சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

    குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.

    தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.

    இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

    6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ளன.

    தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பாலை ஒப்பிடுகையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
    • இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

    குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    "அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.
    • நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,மற்றும் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் ஆறுமுகம், பட்டய தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார்.இதில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி தலைமை தாங்கி பேசியதாவது:-தாய்ப்பால் மூலம் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சி அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் மிகவும் நல்லது. இன்று பவுடர் பால்கள் அதிகரித்து விட்டன.

    பவுடர் பால் குடிக்கும் குழந்தை கொழு, கொழுவேன இருக்கும். ஆனால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.தாய்ப்பாலின் எதிர்ப்பு சக்தி மிக அதிகமானது. நோய் தாக்குதல் உடல் கோளாறுகள் ஏற்படுவதை தாய்ப்பால் தடுக்கும்.பிறந்த ஆறு மாதம் வரை தாய்ப்பால் தாராளமாக கொடுக்கலாம். கர்ப்பிணிகள் காய்கறிகள், கீரைகள் பழ வகைகள் உண்பது மிகவும் நல்லது.இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்த உறுதிமொழிஎடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி தாய்ப்பால் திட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், லோக சதீஸ்வரன்,மற்றும் யுவராஜ் மகேஷ், கர்ப்பிணி பெண்கள் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×