search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunger"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்.
    • ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது.

    மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

    நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளவர்கள் பசியுடன் போராடும் போது, இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்" என்று கூறினார்.

    மேலும், " 23- 24 கோடி மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், 1947-ல் பிரிவினைக்குப் பிறகு உருவானது. இன்று பட்டினியால் வாடுகிறது. இதுவும் ஒரு உதாரணம்.

    பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    ஒரு பக்கம் பாகிஸ்தான் இவ்வாறு உள்ளது. மறுபுறம், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி.

    ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது- 'மீண்டும் மோடி அரசு' என்று.." என்றார்.

    லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு உத்தரபிரதேசத்தில் எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அம்ரோஹாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    • பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
    • உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.

    பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

    அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.

    சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.

    வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

    திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

    தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.

    ×