search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "breastfed"

    • குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
    • தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இன் ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். பேராசிரியா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.

    குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சௌமியா, அரசு மருத்துவா் கலைச்செல்வன் ஆகியோா் பேசியதாவது:-

    குழந்தைகளின் முக்கிய உணவுப்பொருள் தாய்ப்பால். இது, குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிா்ப்பு சக்தியாகவும், புத்திக்கூா்மையை வளா்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு வயிறு, குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் ஜீரண உறுப்புகளில் நோய் எதிா்ப்புத் தன்மையை பெருக்குகிறது.பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மாா்பகம், கா்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது என்றனா்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 

    ×