என் மலர்
நீங்கள் தேடியது "நிலத்தடிநீர்"
- நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம்
- சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பீகாரில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் யுரேனியம் இருப்பதாக மருத்துவர்கள் அளித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களின் தாய்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
- பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெரு , கிழக்கு கரிகாலன் தெரு, டி.என்.ஜி.ஒ காலனி,ஆகிய பகுதி களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல வழியில்லாமல் வெளியேறி வருகிறது. குடி தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் கழிவு நீர் வெளியேறி வீடுகள் முன்பு துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. குறிப்பாக மேற்கு கரிகாலன் 2-வது தெரு முட்டு சந்து என்பதால் அதிக அளவு தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.
கழிவு நீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரிலும் கலந்து போர்வெல் தண்ணீரையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டது. இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரிகள் மூலமாக குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யவில்லை. கழிவுநீர் செல்ல வழியின்றி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. தினமும் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகிறோம். இப்பகுதியில் நோய்தொற்று பரவும் முன்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






