search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu student"

    • கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது.
    • ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர்.

    சென்னை:

    ஜனவரியில் சென்னை ஹூப்பரில் இருந்து புறப்பட்ட மூன்று மாணவிகள் மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா (14) லண்டனில் உள்ள கின்னஸ் தலைமையகத்தை அடைந்தனர். இவர்களின் இலக்கு ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி கின்னஸ் சாதனைபடைப்பதாகும்.

    சாதனை படைக்க களமிறங்கும் முன்பு வரை மூன்று மாணவிகளும் ஒருவித பயத்துடனே காணப்பட்டனர், எனினும் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பை எண்ணி அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த கின்னஸ் உலக சாதனை அலுவலர்கள் முன்- ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

    கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த இளம் தடகள வீரர்களுக்கு ஆர்வமாக இருந்தது. எனினும், இவர்கள் சவாலை மன உறுதியுடன் எதிர்கொண்டனர். இறுதியில் இவர்களை வழிநடத்தும் ஒரே சக்தி இதுவாகவே இருந்தது. மதிய வேளை துவங்க இருந்த சமயத்தில், அதிகாரப்பூர்வ பட்டமளிப்பு நிகழ்வு தலைமை ஆசிரியர் கிரேக் கிளெண்டே தலைமையில் நடைபெற்றது.

    ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் போன்ற திறமைகளை வெளிப்படுத்திய மமதி வினோத் (வயது 8), பாலசரணிதா பாலாஜி (13) மற்றும் ஜணனி சரவணா ஆகிய 3 பேரும் முதல் முயற்சியில் மொத்தம் 6 கின்னஸ் சாதனைகளை முறியடித்தனர்.

    ஆனாலும், முயற்சியை கைவிடாத குழுவினர் மீண்டும் போட்டியில் பங்கேற்றனர். அப்போது, ஹூப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ரோலர்-ஸ்கேடிங் ஆகிய விளையாட்டுகளில் மொத்தம் 9 கின்னஸ் சாதனை படைத்தனர். சாதனைபடைத்த மமதி, பாலசரணிதா பாலாஜி, ஜணனி ஆகிய 3 பேருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

    நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சிபிஎஸ்இ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. #NEETExam #NEET

    தருமபுரி:

    எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 6-ந்தேதி நடந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள் இன்று காலை சி.பி.எஸ்.இ. இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதேபோல மாணவ, மாணவிகள் எழுதி இருந்த தேர்வுக்கான விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில்கள் பிரிவு வாரியாகவும் (ஆன்சர் கீ) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் விடைத்தாள் குறித்து ஆட்சேபணை இருந்தால் ரூ.1000 கட்டி சி.பி.எஸ்.இ.க்கு முறையீடு செய்யலாம். இந்த விடைத்தாள் மற்றும் ஆன்சர் கீ ஆகியவற்றை வருகிற 27-ந்தேதி மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் பார்க்கலாம். அடுத்த மாதம் 5-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளனர். #NEETExam #NEET 

    ×