என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூட்டு சிகிச்சை"

    • குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
    • மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம்.

    மூட்டு வலியால் தற்போது அதிகப்படிப்பான மக்கள் அவதியுறுகிறார்கள். இதற்காக நிறைய மருத்துவமுறைகளை பின்பற்றி அதிக கால விரையத்தையும், பொருளாதார செலவுகளையும் எதிர்கொள்கின்றனர். அதிலும் பல சிறப்பு மருத்துவர்கள் இதற்காக உள்ளனர். இப்படி சூழ்நிலை இருக்கையில் ஒரு சாதாரண குளியல் எப்படி மூட்டு வலிக்கு உகந்ததாகயிருக்கும் என்று கருதலாம்.

    இதுபோன்று கேள்வி எழும் போது அதற்கான பதிலையும் ஆயுர்வேதம் வழங்குகிறது.

    ஆயுர்வேத பொது மருத்துவத்துறையின் தந்தை சரக மாமுனிவர் என்பவர், ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் கூட அந்த வியாதியை குணமாக்க வழிவகைச் செய்யும் என்று கூறியுள்ளார். ஆக நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் பெரிய மருத்துவ மாற்றத்திற்கு வழிகோலும் என்பது நிதர்சனமான உண்மை.

    இதற்கு பல நோயாளிகளே சாட்சி. ஆம் பல மருத்துவர்கள் பார்த்தும் குணமாகாத நீண்ட நாட்களாகயிருக்கும் வியாதிக் கூட, நோயாளியை எதார்த்தமாக அணுகும் மருத்துவர்கள், மிக எளிதாக குணமாக்கிவிடுவார்கள். காரணம் நோயாளிகளின் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் ஏற்படுத்தும் சிறிய மாற்றம் கூட காரணமாக இருக்கலாம். இதனை யுக்தி அனுசரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது

    அந்த வகையில் குளியல் எப்படி மூட்டு வலிக்கு பயனாகயிருக்கும் என்பதை பார்ப்போம்.

    குளியல் பற்றி சென்ற தொடரில் பார்த்தோம் அல்லவா... அதில் நோயுற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல், நோயற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல் என இரு வகையாக பிரித்து பார்ப்போம். அவ்வகையில் மூட்டு வலிக்கு உண்டான மூலிகை குளியல் எவ்வாறு பலனளிக்கும் என்பதை பார்பதற்கு முன்பு சிகிச்சை குறித்து சற்று பார்ப்போம்.

    சிகிச்சைக்கு வேறு பெயர்கள் நிறைய கொடுக்கப்பட்டுயிருகின்றன. அதில் ஒரு பெயர் கிரியா கர்மா என்பதாகும். கிரியா கர்மா என்றால் வியாதியை போக்க மேற்கொள்ளப்படும் அனைத்தும் சிகிச்சை என்பதே இதன் பொருள். அந்த வகையில் வலியை போக்க மேற்கொள்ளப்படும் குளியலும் ஒரு வித சிகிச்சை தான்.

    மேலும் சிகிச்சை என்பதை பல வகைப்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமாக இரண்டு வகையில் கூறப்பட்டுள்ளது. அவை ஆப்யந்தர சிகிச்சை எனும் உள்ளுக்கு கொடுக்கும் மருந்தைப் பற்றியது. மற்றொருன்று பாஹ்ய சிகிச்சை எனும் வெளிப்பிரயோக மருந்தை பொருத்தது. உள்மருந்துகள் நிறைய கூறப்பட்டுயிருந்தாலும், குளியல் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறை என்பதால் வெளிப்பிரயோக மருத்துவ சிகிட்சைகளை குறித்து பார்ப்போம்.

    உள்ளுக்குள் கொடுக்கும் மருந்து எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவு வெளிப்புற மருந்தும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் பசை போன்ற மேற்பூச்சு மருந்துகளே சாட்சி [ointment}.

    வெளிப்புறத்தில் எண்ணெய் தேய்த்தல், மூலிகை பொடிகளை தேய்த்தல், பற்றுயிடுதல், கட்டுக் கட்டுதல், மர்ம புள்ளிகளை இயக்குதல், மர்ம புள்ளிகளை குத்துதல், மூலிகை மருந்துகளை கொண்டு ஒற்றடம் கொடுத்தல், மூலிகை மருந்துகளை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து அல்லது எண்ணெய்யிலிட்டு கொதிக்க வைத்து மேலுக்கு ஊற்றுதல் போன்று வெளிப்புற சிகிட்சை நீள்கிறது. இதில் தண்ணீரில்யிட்டு கொதிக்க வைத்து ஊற்றும் சிகிட்சையே மூலிகை குளியல் என்று அழைக்கிறோம். உண்மையில் இது ஒரு சிகிட்சை முறை, அதை சற்று மாற்றி அன்றாடும் குளியலாக பயன்படுத்தலாம்.

    தினமும் காலைப்பொழுதில் மலசலம் கழித்தப் பின்பு, பல் துலக்கி, வாய்க் கொப்பளித்து பின்பு நல்லெண்ணெய் அல்லது மூலிகை மருந்துகளால் செறிவூட்டப்பட்ட மூலிகை எண்ணெய்களை சிறிதளவு சூடுச் செய்து தேய்த்து, மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம். அல்லது அந்த தண்ணீரை மூட்டு வலி உள்ள இடத்தில் மட்டும் ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் தலைக்கு ஊற்றிக் கொள்ளக்கூடாது. தலைக்கு ஊற்றும் போது தலை முடிக்கு உகந்த மூலிகை தண்ணீரை மட்டும் ஊற்ற வேண்டும். அதுவும் மூட்டு வலிக்கு குளியல் மேற்கொள்ளும் போது தண்ணீர் சூடு உள்ளதாக மட்டும் இருக்க வேண்டும். குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது... சும்மா தண்ணீரில் கொதிக்க வைத்து ஊற்றினால், குணம் கிடைக்காதா என்றால், குணம் கிடைக்கும். ஆனால் முழுமையான பயனை அடையவேண்டும் என்றால் முறையாக தயாரித்து ஊற்றினால் தான் நல்லது. அது எப்படி முறையாக தயாரிப்பது...?

    மூலிகை இலை அல்லது கஷாய சூரணங்களை எடுத்துக் கொண்ட அளவுக்கு 16 மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இலையின் நிறம் மாறும் வரையிலும் நன்றாக வேக வைத்து, அல்லது கஷாய சூரணகள் பயன்படுத்தினால் அவை நன்றாக வெந்த பின்பு வடிக்கட்டி மூலிகை குளியலுக்கு பயன்படுத்தலாம்.

    எந்தந்த மூலிகை எந்தந்த நோய்களுக்கு சிறந்தது...?

    சிற்றாமுட்டி வேர் - மூட்டு வலிக்கு மற்றும் மூட்டு எலும்பு தேய்மானத்திற்கு என பிரத்யேக மூலிகை இது. இதனை கொதிக்க வைத்து மூட்டுகளில் ஊற்றி வரலாம்.

    ஆமணக்கு வேர் மற்றும் இலை - இவை மூட்டு வலிக்கு மட்டுமில்லை, இடுப்பு வலிக்கும் உகந்தது.

    நொச்சி - இடுப்பு வலி, இடுப்பு பிடிப்பு.

    புளியிலை - இடுப்பு வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.

    எருக்கிலை - குதிகால் வலி, கெண்டைக்கால் வலி.

    தழுதாழை - உடல் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.

    சதக்குப்பை கஷாயம் - மூட்டுகளில் ஏற்படும் வலி, பிடிப்பு மற்றும் வீக்கம்.

    வாதநாராயணன் இலை - இடுப்பு, மூட்டு வலி மற்றும் வீக்கம், நடக்க முடியாமை.

    சீந்தில் கொடி இலை - மூட்டு வலியுடன் கூடிய எரிச்சல்.

    பாரிஜாத இலை - உடல் வலி, இடுப்பு வலி.

    ஓதிய மரப்பட்டை - கழுத்து வலி மற்றும் பிடிப்பு.

    இவற்றை தனித்தனியே பயன்படுத்த வேண்டுமா அல்லது ஒன்றாக பயன்படுத்த வேண்டுமா என்றால் மேற்குறிப்பிட்ட சில மூலிகை பரவலாக கிடைப்பின் அவற்றை ஒன்றாக பயன்படுத்தலாம் அல்லது ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை.

    • ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் இணைந்து இம்முகாமை நடத்துகிறது.
    • ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி சென்டர் சார்பில் இலவச எலும்பு மற்றும் மூட்டு நோய் ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2மணி வரை திருப்பூர் பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு ஓ.எம்.எஸ். மருத்துவமனையில் நடக்கிறது.

    இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் கலந்து கொள்கிறார். ஓ.எம்.எஸ்.மருத்துவமனை நிறுவனர் ரவிசந்திரன் , ரோட்டரி சங்க நிர்வாகி டாக்டர் அருள்ஜோதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    முகாமில் 40 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள், மாத விலக்கு நின்ற பெண்கள், நிரந்தர கை, கால், வலி உள்ளவர்கள், நிரந்தர முதுகு வலி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்வோருக்கு இலவசமாக ரூ.1500 மதிப்புள்ள எலும்பு அடர்த்தி சோதனை செய்யப்படும். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 81100 71747 என்ற செல்போன் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகாமில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ரங்கநாதன், இளையராஜா மற்றும் செந்தில்குமார், சண்முக சுந்தரராஜன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். 

    ×