என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- சுய பரிசோதனை செய்யுங்கள்!
- ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
- முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.
* நடுத்தர வயதாக இருந்தாலும், நன்கு ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை உடல் முழு பரிசோதனை செய்து கொள்கின்றீர்களா? இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது காலத்தின் கட்டாயம். சில கூடுதல் கவனங்கள் தேவைப்படுகின்றது.
* இளவயதாக இருந்தாலும் வருடத்திற்கு 2-3 முறை உங்கள் ரத்த அழுத்தத்தினை பரிசோதித்துக் கொள்ளலாம்.
* வயது 30 ஆகி விட்டதா? ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடும்ப ரத்த உறவுகளில் யாருக்கேனும் இருந்தால் இதில் கூடுதல் கவனம் அவசியமாகின்றது.
* ரத்தத்தில் கொழுப்பு சத்து அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
* தேவையான தடுப்பூசிகளை போட்டு உள்ளீர்களா?
* நம்மை பற்றிய மருத்துவ குறிப்புகள் கொண்ட ஒரு சிறிய நோட்டு புத்தகம் வைத்துக் கொள்ளலாம்.
* கையை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவுதல் (அ) சிறிய கிருமி நாசினி கையில் அவ்வப்போது போடுவது நல்லது.
* சுய வைத்தியம் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.
* டாக்டர் எழுதும் மருந்தினை குறைத்து எடுத்துக் கொள்வதும் (அ) அதே சீட்டினை வருடக் கணக்கில் காட்டி மருந்து வாங்கி சாப்பிடுவதும் தவறு.
* தண்ணீரினை வடிகட்டி காய்ச்சி குடிக்கின்றீர்களா? இவற்றையெல்லாம் முறைப்படி ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும்.
உடலுக்காக செய்ய வேண்டியவை
* தினம் 30 நிமிடம் நடப்பது கட்டாயமாகும்.
* முதல் மாடிக்கு செல்வதற்குக் கூட லிப்ட் பயன்படுத்த வேண்டாமே.
* யோகா அவசியம்
* மூச்சு பயிற்சி அவசியம்.
* பயிற்சியாளர் மூலம் உடலை உறுதிப்படுத்தும் பயிற்சிகளை கற்று பயில வேண்டும்.
* சீரான எடை பராமரிப்பு அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
* தூங்கி எழுந்தது முதல் தூங்கப் போகும் வரை ஓயாது டி.வி. ஓடுவதும், ஒலிப்பதும், போன் பார்ப்பதும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
* காலை, மாலை நேரத்து வெயில் 30 நிமிடங்களாவது உங்கள் மீது படுகின்றதா?
உட்காரும் பொழுதும், நடக்கும் பொழுதும் வளைந்து நெளிந்து இல்லாமல் நேராய், கம்பீரமாய் இருக்கின்றீர்களா?
* எந்த மூட்டில் வலி இருந்தாலும் உடனடியாக உரிய கவனம் கொடுப்பது நல்லது.
உணவு-சத்துணவு
* காய்கறி, பழங்கள் இவைகளை ஒரு நாளைக்கு 5 முறை பரிமாறிக் கொள்ளலாம்.
* அன்னாசி, கொய்யா, வாழை, ஆரஞ்சு, தர்பூசணி இப்படி பழ வகைகளை சிறிதளவாக எடுத்துக் கொள்ளலாம். உணவில் காய்கறிகள் ஏதேனும் இல்லாது இருக்கக் கூடாது. சிகப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இந்த நிறங்களில் உங்கள் உணவு தட்டு, பருப்பு, காய்கறி இவற்றினால் தேவையான அளவு இருக்க வேண்டும்.
* முழு தானியம், பிரவுன் அரிசி, சீரக சம்பா, தூயமல்லி அரிசி என வகை வகையாய் உள்ளன.
* அதிக உப்பு, ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், வடாம்-இவை 'நோ' தான்.
* புரதம் இல்லாத உணவு உணவாகாது - பருப்பு, முட்டை, பால் இவற்றினை பயன் படுத்தலாமே.
கமலி ஸ்ரீபால்
* காலை உணவினை தவிர்ப்பது, சீக்கிரம் ஒருவரை நோயாளி ஆக்கும்.
* பொரித்த, வறுத்த போன்ற எண்ணை பலகாரங்களுக்கும் 'நோ' தான்.
* இரவு 7 மணிக்குள் உணவினை முடிக்க முடிந்தால் ஆரோக்கியம் கூடும்.
இருதயம்
* புகை பிடிப்பதனை நிறுத்தி விட்டீர்களா? எப்போதாவது என்பதும் தீங்கு தான்.
* குடி என்பதே வேண்டாமே
* ஒமேகா-3 நிறைந்த வால்நட், சியா விதை, ஆளி விதை, மீன் நன்கு எடுத்துக் கொள்கின்றீர்களா?
* வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.
* 40 வயதிற்குப் பிறகு இருதய பரிசோதனை கூட அவசியப்படலாம்.
* மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி இவற்றினை உடனடியாக கவனிக்க வேண்டும்.
* ஸ்ட்ரெஸ் இருதய பாதிப்பினை கூட்டும்.
பல்லும்-கண்ணும்
* தினம் ஒரு முறை பல் துலக்குவதும், ஒரு முறை பிரஸ் செய்வதும் அவசியம்.
* 6 மாதத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் செல்வது புத்திசாலித்தனம்.
* எதனை சாப்பிட்டாலும் குறிப்பாக இனிப்பு சாப்பிட்டால் வாய் கொப்பளித்து விடுங்கள்.
* மாதம் ஒரு முறை பிரஷ் மாற்றுவது மிக சிறந்தது.
* கண் பாதுகாப்பிற்காக வெயிலில் கறுப்பு கண்ணாடி அணிவது சிறந்த கண் பாதுகாப்பு.
* படிக்கும் போதும், எழுதும் போதும், டி.வி. பார்க்கும் போதும் கண்ணை மூடி மூடி திறக்க வேண்டும்.
* காரட், பால், பழங்கள், வைட்டமின் 'ஏ' சத்து கண் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
* 40 வயதிற்குப் பிறகு கண் பரிசோதனை தேவையே.
* கண்களை கைகளால் தாறுமாறாகத் தேய்க்காதீர்கள்.
* சுத்தமான துவாலைகளை (டவல்) பயன்படுத்துங்கள்.
மனநிம்மதி
* 8 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும்.
* பிராணாயாமம், 10 நிமிடமாவது தியானம் அவசியம்.
* இயற்கையோடு இருங்கள்.
* அதிகமாக டி.வி., யூடியூப் பார்க்க வேண்டாம்.
* சிறிது நேரமாவது வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்.
* வேலை பளுவில் சற்று நேரம் 'பிரேக்' எடுங்கள்.
சுகாதாரம்
* தினமும் இருவேளை நன்கு குளியுங்கள். உடலை நன்கு துடைக்க வேண்டும்.
* உங்கள் மருத்துவர் அறிவுரைப்படி உங்கள் சருமத்திற்கென 'சன்ஸ்கிரீம்' அவசியம்.
* மிகவும் வறட்சி தரும் சோப்புகள் வேண்டாம்.
* 'மாய்ச்சரைசர்' உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குளித்ததும் எடுத்துக் கொள்ளுங்கள்.
* பருத்தி ஆடையே அணியுங்கள். நகங்களை சீராய் வெட்டி விடுங்கள்.
* கொசுவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் தனி உபயோகப் பொருட்களை பிறருடன் பங்கிடக் கூடாது.
பாதுகாப்பு
* வீட்டில் அவசியம் ஒரு முதலுதவி பெட்டி இருக்க வேண்டும்.
* அவசர உதவி எண்கள் போனில் இருக்க வேண்டும்.
* மருந்துகள் பாதுகாப்பாய், குழந்தைகள் கையில் எட்டாதவாறு இருக்க வேண்டும்.
* குடும்ப மருத்துவர் என்பது நமக்கு தேவையான ஒன்று.
வீடு
* காற்றோட்டம் அவசியம். சூரிய வெளிச்சம் வேண்டும்.
* வீட்டினுள் குப்பை, புகைகள் இருக்கக் கூடாது.
* அன்றாடம் குப்பைகளை முறையாய் பையில் போட்டு அகற்றுங்கள்.
* அதிக காரத்தன்மை உடைய சுத்தம் செய்யும் சோப்பு, திரவங்கள் வேண்டாம். அது நுரையீரலை பாதிக்கும்.
* தண்ணீர் தேங்குதல் கூடாது.
* உணவுகள் மூடி வைக்கப்பட வேண்டும். பல்லி, கரப்பான் போன்றவை இருக்கக் கூடாது.
* பிளாஸ்டிக் உபயோகத்தினை முடிந்த வரை நீக்கி விடுங்கள். இவையெல்லாம் முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்.
* புற்றுநோய் சோதனைகள்: மார்பகம், கருப்பப்பைகள், பிராஸ்ேடட், குடல் பரிசோதனைகள் அவசியம் செய்யுங்கள்.
உயர் சர்க்கரை கட்டுப்பாடு, உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு அவசியம்.
* கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகள் குறித்த பரிசோதனைகள் எடுக்க வேண்டும்.
* ப்ளூ, டெட்டனஸ், ஹெப்படைடிஸ்-3 வாக்சின்கள் அவசியம் எடுக்கவும்.
* மாஸ்க் அணிவது எப்பொழுதுமே நல்லது.
இவை அனைத்தும் சரியாக செய்தாலே வாழ்க்கை முறையாய் இருக்கும். எந்த ஒரு விழாவிலும் அதிக உணவு உண்பது என கொண்டாடினால் வாழ்க்கை நம்மை நோயாளி ஆக்கிவிடும்.
ஆகவே இவைகளை செய்கின்றீர்களா? என்பதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
மேலும்
* நடைபயிற்சி செல்லும் போது கையில் போன் இல்லாது செல்லலாமே.
* போனை அடுத்த அறையில் வைத்து விட்டு தூங்க செல்கின்றீர்களா? குறைந்தது மாணவர்களாவது இதனைச் செய்யலாமே.
* ½ நிமிடமாவது சூடு இல்லாத நீரில் ஷவர் முறை குளியல் தலை முதல் கால் வரை எடுக்கின்றீர்களா? இதனை வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் முன் செய்யலாம்.
* கார் சாவி, வீட்டு சாவி, ஸ்கூட்டர் சாவி இவற்றினை தினமும் முறையாக ஒரே இடத்தில் வைக்கின்றீர்களா?
* பிறருடைய நேரத்திற்கு மதிப்பு கொடுக்கின்றீர்களா?
* ஒரு நல்ல தரமான 'ஜோக்' தெரியுமா?
* அனைவரிடமும் ஒன்றினை கற்றுக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் இப்படி இருக்கக் கூடாது என்பதனையாவது கற்றுக் கொள்ளலாம்.
* அக்கம் பக்கம் உள்ளவர்களை நட்பாக அறிந்து வைத்திருங்கள்.
* இயற்கை பேசுவதை காது கொடுத்து கேட்டிருக்கின்றீர்களா?
* புன்னகை, சிரிப்பு இவை உங்களிடம் உள்ளதா?
* அப்பா, அம்மாவோடு சிறிது நேரம் செலவழித்து மனம் விட்டு பேசுகின்றீர்களா?
* புதிர், குறுக்கெழுத்து போட்டி இதில் பழக்கம் இருக்கிறதா?
* நிலவையும், நட்சத்திரங்களையும் கொஞ்ச நேரம் முடிந்த பொழுது பார்க்கின்றீர்களா?
இவையெல்லாம் நம் அன்றாட பழக்கத்தில் இயற்கையாக வர வேண்டியவை ஆகும். இப்படி எதுவும் இல்லாமல் மனநோய், உடல்நோயுடன் வாழ்கின்றோம். இன்றே மாறுவோம்.






