என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய நிறுவனம்"
- டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.
- கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
உலகளாவிய முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ், ஜூன் 14 அன்று இந்தியாவின் முதல் டிரான்ஸ்கேதட்டர் விளிம்பு-முதல்-விளிம்பு வரை பழுதுபார்க்கும் (TEER) அமைப்பான MyClip ஐ அறிமுகப்படுத்தி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
ஜூன் 13–15 வரை வாபி (குஜராத்) மெரில் அகாடமியில் நடைபெற்ற இந்த மைல்கல் இதய கட்டமைப்பு புதுமை நிகழ்வு, 150-க்கும் மேற்பட்ட இந்திய இருதயநோய் நிபுணர்களையும், இதய இமேஜிங் நிபுணர்கள் மற்றும் சர்வதேச பிரபலங்களையும் ஒன்றிணைத்தது.
இதில் பேராசிரியர் ஒட்டாவியோ அல்ஃபியேரி, பேராசிரியர் பிரான்செஸ்கோ மைசானோ மற்றும் பேராசிரியர் அக்ரிகோலா ஆகியோர் அடங்குவர்.
மைவல் THV-இன் வெற்றியைத் தொடர்ந்து மெரில் தற்போது உலகின் முன்னணி TAVI குழுமமாகவும், TEER அமைப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய நிறுவனமாகவும் உள்ளது. இது டிரான்ஸ்கேத்தர் இதய வால்வு சிகிச்சைகளில் ஒரு புதுமை கண்டுபிடிப்பாளராக நாட்டை நிலைநிறுத்துகிறது.
MyClip TEER அமைப்பானது, கடுமையான மிட்ரல் பின்னோக்கிய பாய்வு (MR) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், முதுமை, உடல் பலவீனம், பெரிதான அல்லது பலவீனமான இதயம் மற்றும் சிறுநீரகம், நுரையீரல் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்ற ஏற்கனவே உள்ள பிரச்சினைகள் காரணமாக அறுவை சிகிச்சைக்கு அதிக ஆபத்தில் உள்ளனர்.
குறிப்பாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், MR ஒரு பேரழிவு தரும் இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது - 50% க்கும் அதிகமான நோயாளிகள் சரியான நேரத்தில் தலையீடு இல்லாமல் உயிர்வாழ முடியாது, மேலும் 1 வருடத்திற்குள்ளான இறப்பு 57% வரை அதிகமாக இருக்கலாம்.
MyClip TEER அமைப்பு மிட்ரல் வால்வு மடிப்புகளை துல்லியமாக மூட உதவுகிறது, இது நுரையீரலுக்குள் சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தின் பின்னோக்கிய ஓட்டத்தைத் திறம்படத் தடுக்கிறது.
இந்த செயல்முறை மிகக் குறைவான ஊடுருவல் கொண்டது, தோராயமாக ஒரு மணி நேரம் எடுக்கிறது, அத்துடன் நோயாளிகள் 3-5 நாட்களுக்குள் வீடு திரும்ப அனுமதிக்கிறது.
வீடு திரும்பிய பிறகு, நோயாளிகள் செயல்முறைக்குப் பிந்தைய ஒரு குறுகிய காலத்திற்குள் நடைபயிற்சி மற்றும் கடினமற்ற வேலை போன்ற அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம்.
- யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
- மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
கொழும்பு:
இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள யாழ்பாண மாவட்டத்தில் டெல்ப்ட் தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய இடங்களில் புதிதாக 3 மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் இந்தியாவின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளரும், ஊடகத்துறை மந்திரியுமான பந்துல குணவர்தனே தெரிவித்தார்.
- 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.
- இறக்குமதியில் இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
திருப்பூர் :
கொரோனா பாதிப்புக்கு பின் உலகளாவிய ஆயத்த ஆடை இறக்குமதியாளர்கள் சீன சார்பு நிலையை குறைத்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தைக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை சீனா இழந்து வருகிறது.
சீனாவின் சின்ஜியானில் உற்பத்தியாகும் பருத்தியில் தயாரித்த ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய 2021 முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சீன பருத்தி ஆடை ஏற்றுமதி வேகமாக சரிந்து வருகிறது. இதை சாதகமாக்கி வியட்நாம், வங்கதேசம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வாய்ப்புகளை வசப்படுத்தி வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் ரூ.1.59 லட்சம் கோடி மதிப்பிலான பருத்தி ஆயத்த ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.அதாவது 15.7 சதவீதத்துடன் வியட்நாம் முதலிடமும், 14.4 சதவீதத்துடன் வங்கதேசம் இரண்டாமிடமும் பெற்றுள்ளது. 13.1 சதவீத பங்களிப்புடன் சீனா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்திய பருத்தி ஆடை ஏற்றுமதி முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த ஜனவரி -மே வரை ரூ. 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ஆடை ரகங்கள் அமெரிக்காவில் இறக்குமதியாகியுள்ளன.
இது குறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் அமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-
அமெரிக்காவின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதியில், இந்தியா தனது பங்களிப்பை 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம். போட்டி நாடுகளுக்கும் நமக்கும் அமெரிக்காவில் பருத்தி ஆயத்த ஆடைகளுக்கு ஒரே வரி விகிதமே உள்ளது.
எனவே அமெரிக்காவின் ஆடை இறக்குமதியில் 15 சதவீத பங்களிப்பை பெற நாம் முயற்சிக்க வேண்டும். ஆண்டுதோறும் 3.5 லட்சம் கோடி மதிப்பிலான செயற்கை இழை ஆடைகளை அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. நம் நாடு 10 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி செய்து வருகிறது.தமிழக ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள், அமெரிக்க சந்தை மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆடை உற்பத்தியாளர்கள் நூற்பாலை, சாய ஆலை என அனைத்து துறையினரும் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டால் மிகப்பெரிய வாய்ப்புகளை வசப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.
இதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டது. இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.

முதமலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.
அதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தியாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் உதவியது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்புகளை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி, குகைக்குள் நிரம்பி இருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.
அதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத்தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தாய்லாந்து வெளியுறவு மந்திரி டான் பிரமுத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சிறுவர்களை மீட்கும் பணிக்கு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி வழங்க ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்திய நிறுவனத்தின் உதவியால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிரதிபலிக்கிறது. அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் தாய்லாந்து மக்கள் சார்பிலும் மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #ThaiCaveResue






