search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thailand cave rescue"

    தாய்லாந்தில் உயிரை பணயம் வைத்து நடத்தப்பட்ட குகை மீட்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு ரூ.400 கோடி செலவில் திரைப்படம் தயாரிக்க ஹாலிவுட் நிறுவனம் தயாராகி வருகிறது.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். மிகவும் சவாலான இந்த மீட்பு பணியை வெற்றிகரமாக செய்து முடித்த தாய்லாந்து கடற்படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.


    இந்நிலையில், உலகையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து  குகை மீட்பு சம்பவம் ஹாலிவுட்டில் திரைப்படமாக  எடுக்கப்பட உள்ளது. பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் ஹாலிவுட் நிறுவனம் இதை 400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மிச்செல் ஸ்காட், மீட்பு பணிகள் நடந்த போது அதனை பார்வையிட்டுள்ளார். அவர் தான் பார்த்த காட்சிகளின் அடிப்படையில் இந்தப் படத்தை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்.


    இதுதொடர்பாக, அவர் கூறுகையில் ‘உலக அளவில் மிகப்பெரிய வீர தீரச் செயலாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. அங்கு பார்த்தபோது மெய் சிலிர்த்து போனேன். இதுபோன்ற உத்வேகமிக்க செயலை நான் பார்த்ததில்லை. தன்னார்வத்துடன் நடந்த இந்த மீட்பு பணி உலக வரலாற்றில் ஒரு மைல்கல். எனவே தான் இதனை திரைப்படமாக்க முடிவு செய்தோம்’ என தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue #ThaiCaveHollywoodMovie 
    தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் பணியில் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி உள்ளது. #ThaiCaveResue
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23-ந்தேதி ‘காட்டுப் பன்றிகள்’ என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் உயிருடன் இருப்பது வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசு ஈடுபட்டது. இங்கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.

    கடந்த 8-ந்தேதி 4 சிறுவர்களும், 9-ந்தேதி 4 சிறுவர்களும் மீட்கப்பட்டனர். கடைசியாக 10-ம் தேதி 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகும்.

    இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகிறது. அப்போது சிறுவர்களை மீட்டது பற்றிய சாகசங்களை அதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


    இங்கிலாந்தைச் சேர்ந்த 2 முத்துக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் கண்டு பிடித்தனர். அவர்கள் வெளியே வந்துதான் சிறுவர்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் வெளியில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்பு பணியை தொடங்க முடிந்தது.

    முதமலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    அதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தியாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனம் உதவியது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்புகளை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி,  குகைக்குள் நிரம்பி இருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

    அதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத்தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர். இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தாய்லாந்து வெளியுறவு மந்திரி டான் பிரமுத்வினய் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், சிறுவர்களை மீட்கும் பணிக்கு கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி வழங்க ஏற்பாடு செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை கேட்டு எங்கள் நாட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்திய நிறுவனத்தின் உதவியால் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு பிரதிபலிக்கிறது. அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் தாய்லாந்து மக்கள் சார்பிலும் மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். #ThaiCaveResue
    தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டு இருக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் 3 பேரை மீட்க எலான் மஸ்க் சிறியரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியுள்ளார்.



    தாய்லாந்து நாட்டில் தாம்லுவாங் என்ற குகைக்குள் சாகச பயணம் மேற்கொண்ட 12 சிறுவர்கள், அவர்களது கால்பந்து பயிற்சியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அங்கு பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளம் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

    எனவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் குகைக்குள் சிக்கி தவித்த இவர்கள் 16 நாட்களாக வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருந்தனர். இந்தநிலையில் உள்நாட்டு குழுவுடன் இங்கிலாந்தை சேர்ந்த நீச்சல் வீரர்கள் இணைந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மாயமாகி 9 நாட்களுக்கு பின் அவர்கள் உயிருடன் இருப்பதை 2 இங்கிலாந்து வீரர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் மீட்பு நடவடிக்கை தொடங்கியது. 18 நீர்மூழ்கி வீரர்கள் (டைவர்கள்) நியமிக்கப்பட்டனர். இதுவரை குகைக்களுள் சிக்கியிருந்த 10 பேர் மீட்கப்பட்டு விட்ட நிலையில் 3 பேர் மட்டுமே குகைக்குள் உள்ளனர். 

    அவர்களையும் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே குகைக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரை ‘பம்ப்’ மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.



    இந்நிலையில் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்க சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி உதவுவதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தாய்லாந்து சென்றடைந்தது. 

    "சிறிய ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கிறது. ராக்கெட் பாகங்களால் இது தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது தேவைப்படும் என்பதால் இதனை இங்கேயே விட்டுச் செல்கிறேன். தாய்லாந்து மிகவும் அழகிய நாடு." என எலான் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
    தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறும் புதிய வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது. #ThailandCaveRescue #ThaiBoys #ThaiBoysTrappedVideo
    பாங்காக்:

    தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் 9 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அனைவரும் மிகுந்த பசியுடன் காணப்பட்டனர். நீர்மூழ்கி வீரர்களுடன் அவர்கள் உரையாடும் வீடியோவை அரசு வெளியிட்டது. சிறுவர்கள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்களை மீட்கும் பணிகள் தொடங்கின. 

    முதலில் அவர்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ் உள்ளிட்ட 7 பேர் சென்றனர். இவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி நீந்திச் செல்லும் பயிற்சி பெற்றவர்கள். தற்போது 10 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

    தற்போது மழைக்காலம் என்பதால் குகைக்குள் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் சிறுவர்களை வெளியே அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. அவசரப்பட்டு வெளியே அழைத்து வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, இந்த விஷயத்தில் நிதானமாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு நீரில் மூழ்கி நீந்துவதற்கு கற்றுக்கொடுத்து அதன்பின்னர் மீட்க வேண்டும். இதைவிட்டால், நீர் மட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். 

    இந்நிலையில், குகைக்குள் இருக்கும் சிறுவர்கள் நலமுடன் இருப்பதை காட்டும் புதிய வீடியோ ஒன்றை தாய்லாந்து கடற்படை இன்று வெளியிட்டுள்ளது. 

    அந்த வீடியோ பதிவில், சிறுவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் கேமரா முன்பு தனது புனைப்பெயரை கூறி தன்னை அறிமுகம் செய்து , ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என கூறுகிறார்கள். 

    தாய்லாந்து கடற்படையின் பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்ததும், சிறுவர்களின் பெற்றோர் ஆறுதல் அடைந்துள்ளனர். #ThailandCaveRescue #ThaiBoys #ThaiBoysTrappedVideo
    ×