என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெற்றோர்கள்"
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோர், குழந்தைகளிடம் இதுதொடர்பாக காவல்துறையினர் மற்றும் பிற அரசுத்துறையினர் விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாலியல் குற்றங்களை செயல்படுத்துபவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். குழந்தைகளை எளிதில் அணுகி பழகும் இவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பர்.
விளையாடுதல், பரிசு வழங்குதல், விருப்பமானதை வாங்கித்தருதல், விருப்பமான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என தாங்கள் அன்புடன் திகழ்பவர்களாக சிறுவர், சிறுமியரிடம் காட்டிக்கொள்வர்.
சிறுவர், சிறுமியருடன் நீண்ட நேரம் பழகுவதால், அவர்களது விருப்பங்கள் என்ன, அவர்கள் எதில் பலவீனமானவர்களாக இருக்கின்றனர் என்பதை முழுமையாக தெரிந்து வைத்து கொள்கின்றனர். சிறுவர், சிறுமியரிடம் நம்பகத் தன்மையை உருவாக்கி மெல்ல மெல்ல அவர்களை ஆட்படுத்துகின்றனர்.
அவர்கள் சொல்வதை செய்யும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பின் தான் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அத்துமீறல்களை சிறுவர், சிறுமியர் வெளியில் சொல்ல முடியாத அளவு அவர்களது மனநிலையில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குற்ற உணர்வுடன் அவர்கள் திகழ்வதால் இதனை வெளியில் சொல்வதில்லை. இதுவே குரூரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய தொழில்நுட்பமும், இவர்கள் இலக்குகளை எளிதாக அடைய வழிவகுக்கிறது.
ஏனெனில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள், குரூரர்கள். சிறுவர், சிறுமியரின் நடவடிக்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்றோர் கண்காணித்தால், இதுபோன்ற குரூரர்கள் அவர்களது வாழ்க்கையில் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்