search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kozhikode"

    • கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.
    • பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    சென்னை:

    3-வது பிரைம் கைப்பந்து 'லீக்' போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் 'சூப்பர் 5' சுற்றுக்கு நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபென்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், மும்பை மீட்டியார்ஸ், டெல்லி டூபான்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ் ஆகியவை தகுதி பெற்றன.

    'சூப்பர் 5' சுற்று கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் பெங்களூர்- கோழிக்கோடு அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோழிக்கோடு அணி 18-16, 16-14, 8-15, 11-15, 15-10 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

    கோழிக்கோடு அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே மும்பையை 3-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. டெல்லியிடம் தோற்று இருந்தது.

    கோழிக்கோடு அணி தனது கடைசி ஆட்டத்தில் அகமதாபாத்தை 17-ந் தேதி எதிர் கொள்கிறது.

    பெங்களூர் அணிக்கு 2-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்று இருந்தது. அகமதாபாத்தை வென்று இருந்தது. பெங்களூரு அணி கடைசி ஆட்டத்தில் மும்பையுடன் நாளை மோதுகிறது.

    முன்னதாக நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 15-8, 13-15, 7-15, 16-14, 15-13 என்ற செட் கணக்கில் போராடி நடப்பு சாம்பியன் அகமதாபாத்தை வீழ்த்தியது. மும்பை அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அகமதாபாத் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் அகமதாபாத்-டெல்லி அணிகள் மோதுகின்றன. சூப்பர் 5 சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    இதில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டியில் விளையாடும். 2-வது 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.

    • வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.
    • வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப் பகுதியை ஒட்டியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் புலி, சிறுத்தைப்புலி, யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.

    இதனால் மலையடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையே நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வயநாடு மாட்டத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அடுத்தடுத்து அட்டகாசம் செய்தபடி இருந்தன.

    மேலும் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் பரிதாப மாக இறந்தார். அடுத்தடுத்து வனவிலங்குகள் அட்டகாசம் செய்துவந்த சம்பவம் வயநாடு மாவட்ட மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

    வனவிலங்குகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரி அருகே நெல்லிப்பொயில் என்ற பகுதியில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உள்ளது.

    அந்த பகுதியில் 3 சிறுத்தை புலிகள் உலாவியபடி இருந்திருக்கிறது. அகனம் பொயில் பகுதியில் செயல்படும் மின்வாரிய அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் 3 சிறுத்தைப்புலிகள் சாலையை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுத்தைப்புலிகள் எங்கு பதுங்கி இருக்கின்றன? என்று உள்ளூர் போலீசாரின் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம்.
    • கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பலரும் வெளி நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உள்பட பலரும் பணியில் உள்ளனர். இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பி உள்ளனர்.

    இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இவர்களது பயணம் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கப்பல் சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலங்களாக உள்ளது. இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேப்பூர் பகுதியில் இருந்து கொச்சி வழியாக இந்த கப்பல் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடல்சார் வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை கூறுகையில், இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால், கப்பல் சேவையை விரைவில் தொடங்க முடியும். இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும். தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கலாம் என்றார்.

    ஆயிரம் முதல் 2 ஆயிரம் பயணிகள் செல்லக்கூடிய வகையில் கப்பல் இயக்க பரிசீலித்து வருவதாகவும், பயண நாட்கள் 5 நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது
    • நேற்று வரை ஆறு பேர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய குழு அம்மாவட்டம் சென்று ஆய்வு நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 24-ந்தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.

    கோழிக்கோடு மாவட்டத்தில் 1080 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாக கருதப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று மட்டும் 130 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் 327 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவார்கள். 29 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

    22 பேர் மலப்புரம், ஒருவர் வயநாடு, தலா மூன்று பேர் கண்ணூர், திரிச்சூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த தகவலை சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    • கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது.
    • வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக் கொண்டை பூச்சொடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டு க்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

    பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கோழிக்கோட்டில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். பிரதமர் வருகையையொட்டி கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 23-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பா.ஜனதா கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆளும் கட்சி என்பதால் கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் இந்த தேர்தலில் கடந்த முறையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதால் அது தங்களது வெற்றிவாய்ப்பை அதிகரித்து உள்ளதாக காங்கிரசார் நம்புகிறார்கள்.

    இவர்களுக்கு அடுத்த இடத்தில் பா.ஜனதா கட்சி உள்ளது. கேரளாவில் இருந்து இதுவரை பா.ஜனதா சார்பில் ஒரு எம்.பி. கூட பாராளுமன்றத்திற்கு தேர்தெடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலில் தங்களது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்பதில் பா.ஜனதா மிகவும் உறுதியுடன் உள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6.10 மணிக்கு கோழிக்கோடு வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

    அங்கிருந்து கார் மூலம் கோழிக்கோடு கடற்படை மைதானத்திற்கு செல்லும் மோடி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். கோழிக்கோடு, வடகரை, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி கேரளா வருகையையொட்டி கோழிக்கோட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் வருகிற 18-ந்தேதி கேரளா வருகிறார். அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #PMModi

    ×