search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Music"

    • இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது
    • இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது

    'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆக்ஷன் படம் இயக்கத்துக்குப்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் தற்போது புதிய படம் இயக்கும் பணியை தொடங்குகிறார்.

    இந்த படத்தில் நடிகர் மாதவன்- கங்கனா ரணாவத் நடிக்கின்றனர்.இது ஒரு உளவியல் த்ரில்லர் படம். இப்படத்தை 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்பட வில்லை.

    இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.




     


     ஏ.எல்.விஜய் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து தெய்வத்திருமகள், சைவம், மதராசப்பட்டினம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆனால், தற்போது இந்த புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

    • விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பார்வதி நாயர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

    விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    விஜய் இப்படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வரும் மே மாதம் வெளியிடுவதாகவும், படத்தில் இன்னொரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • மூளை வளர்ச்சியை தூண்ட சில விளையாட்டுகள் உதவும்.
    • விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டும் விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான தனித்துவத்தோடு பிறக்கிறார்கள். சுற்றுச்சூழல் காரணிகள் அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தைகளின் மூளை வேகமாக வளரும்.

    அந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய அவர்களை ஊக்கப்படுத்துவது, சுயக்கட்டுப்பாட்டை கற்பிப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறமைகளை வளர்ப்பது, தகவல் தொடர்பை மேம்படுத்த உதவி செய்வது போன்ற செயல்பாடுகளை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

    அதன்மூலம் குழந்தைகள் எதையும் அறிவுப்பூர்வமாக பகுப்பாய்வு செய்து பார்ப்பார்கள். அவர்களின் பகுத்தறிவு சிந்தனையை மேம்படுத்திக் கொள்வார்கள். இதற்கு மூளை வளர்ச்சியை தூண்டும் சில விளையாட்டுகள் உதவும்.

     புதிர் விளையாட்டுகள்:

    பலதரப்பட்ட வயதினரையும் ஈர்க்கும் புதிர் விளையாட்டுகள், பல்வேறு வடிவங்களில் சந்தைகளில் கிடைக்கின்றன. குழந்தைகள் தங்களின் கவனத்தை மேம்படுத்துவதற்கும், சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் இவ்வகை விளையாட்டுகள் உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் பகுத்தறிவும், சிக்கல்களை அணுகும் தன்மையும் மேம்படும்.

     வியூக விளையாட்டுகள்:

    பகடைக்காய், ஏணியும் பாம்பும் போன்ற வியூக விளையாட்டுகள், குழந்தைகளுக்கு சிக்கலான சூழ்நிலைகளில் முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கின்றன. இத்தகைய விளையாட்டுகள் மூலம் அவர்கள் திட்டங்களை உருவாக்கவும், அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயங்கள் ஆகியவற்றை கணக்கிட்டு சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள முடியும். வியூக விளையாட்டுகள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளின் மாதிரியாக திகழ்பவையாகும்.

     சுடோகு:

    எண் புதிர் விளையாட்டான சுடோகு, குழந்தைகளின் அறிவை மேம்படுத்தும். எண்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம் சாத்தியக்கூறுகளை எடை போடுவதற்கும், அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதற்கும் குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். சுடோகுவின் மூலம் கணிதம் மற்றும் எண்ணியல் சார்ந்த அறிவையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

     வார்த்தை விளையாட்டுகள்:

    குறுக்கெழுத்துப் புதிர்கள், சொல் தேடல்கள் என பல வகையான வார்த்தை விளையாட்டுகள் உள்ளன. இவை குழந்தைகளின் மொழித்திறனையும், மொழியியல் நுண்ணறிவையும் மேம்படுத்தும். இவ்வகை விளையாட்டுகளின் மூலம் பல்வேறு புதிய சொற்களை தெரிந்துகொள்ள முடியும்.

     சதுரங்கம்:

    உலக அளவில் மூளை வளர்ச்சியைத்தூண்டும் விளையாட்டுகளின் பட்டியலில், இது முதன்மை இடத்தில் உள்ளது. இருவர் மட்டுமே பங்குபெறும் இந்த விளையாட்டில், விளையாடுபவர்கள் விழிப்புணர்வோடு திட்டமிட்டு விளையாடுவது முக்கியமானது. இதில் எதிரிகளின் நகர்வுகளை கணிக்க வேண்டும்.

    நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிரியின் அசைவு என்னவாக இருக்கும் என்பதை கணித்து சாதுரியமாக காய்களை நகர்த்த வேண்டும். சதுரங்கம் குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறன்களை இந்த விளையாட்டின் மூலம் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

     இசை:

    சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு வகையான இசைகளை அறிமுகப்படுத்துங்கள். இசைக்கு, நினைவாற்றலை வளமாக்கும் ஆற்றல் உண்டு. அதேபோல, ஏதாவது ஒரு இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள். இந்த பயிற்சிகூட கற்றல் திறனை மேம்படுத்தவும், படிப்பில் நல்ல மதிப்பெண்களை பெறவும் உதவும். தெய்வீக பாடல்களை அவ்வப்போது வீட்டில் ஒலிக்க செய்து அதனை குழந்தை கேட்குமாறு செய்யலாம்.

     5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு...

    ஒன்றரை வயது தொடங்கி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பில்டிங் பிளாக் விளையாட்டுகள் சிறப்பானதாக இருக்கும். அதேபோல, செம்மையான இயக்க திறன்களை (பைன் மோட்டார் ஸ்கில்ஸ்) வளர்க்க, வண்ணம் தீட்டுதல், வண்ணங்களை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் கை கொடுக்கும்.

    வட்டம், சதுரம் போன்ற எல்லைகளுக்குள் வண்ணம் தீட்ட பழகுவதால், புத்திக்கூர்மை அதிகமாகும். மேலும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுத வைப்பது, ஒரே நேரத்தில் இரு கைகளுக்கும் இருவேறு வேலை கொடுப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடுபடுத்தலாம். இது அவர்களது வலது-இடது மூளைகளை தூண்டி, அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற உதவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆசிர் பெற்ற பிரதமர் யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
    • வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோவில் யானை ஆண்டாளிடம் ஆசிர் பெற்றார். யானை நிறுத்தப்பட்டிருந்த 4 கால் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆண்டாள் யானைக்கு பழங்கள் வழங்கினார். பின்னர் யானையிடம் ஆசிர் பெற்ற அவர், யானை பாகனிடம் யானை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானைக்கு 44 வயதாவது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பாகன் எடுத்து கூறினார். மேலும் ஆண்டாள் யானை ஸ்ரீரங்கம் நவராத்திரி உற்சவத்தின் போது மவுத் ஆர்கன் வாசிக்கும் என்ற தகவலை கூறினார்.

    இதனை கேட்டு ஆச்சர்யமடைந்த பிரதமர் நரேந்திர மோடி வாசிக்க வைக்குமாறு கேட்டார். உடனே பாகன் யானை துதிக்கையில் மவுத் ஆர்கன் கொடுக்க, ஆண்டாள் வாசித்து காண்பித்தது. இதனை ரசித்த மோடி வாஞ்சையுடன் யானையை தடவி கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டாள் யானையானது, குட்டியாக காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது.
    • சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    சிவகங்கை:

    சர்வதேச நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஜி 20 மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகறிய செய்துள்ளது.

    முன்னதாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உலக தலைவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அளித்த விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதையொட்டி விருந்தில் பங்கேற்றவர்களின் நாவின் சுவைக்கு ஏற்ப பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அதேபோல் செவிக்கு விருந்தளிக்கும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

    பல்வேறு நாடுகள், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான இசை நிகழ்ச்சிகள் ஜி 20 மாநாட்டை கலகலக்க செய்தது. உலக தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு, நலன், எதிர்காலம் மட்டுமின்றி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மேற்கத்திய இசைகள் எப்போதும் முதலிடம் பிடித்து வந்த நிலையில், அந்தந்த நாட்டின், மாநில இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

    இதில் தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இசைக்கப்பட்ட தவில் உலக தலைவர்கள் மட்டுமின்றி மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் மெய்மறக்க செய்தது. இதனை இசைக்க சிவகங்கையை சேர்ந்த மணி கண்டன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பிள்ளைவயல் காளியம்மன் நகரை சேர்ந்த தவில் வித்வான் மணிகண்டன் (வயது 46) மற்றும் நாதஸ்வர கலைஞரான திருவாரூரை சேர்ந்த அரசு இசைப்பள்ளி நாதஸ்வர ஆசிரியர் இளையராஜா ஆகியோரை மத்திய அரசு சார்பில் அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர்.

    இவர் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறும் கான சபா, மார்கழி உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தவில் இசைத்து வருகிறார். மேலும் புதுடெல்லியில் உள்ள சங்கீத நாடக சபாவிலும் உறுப்பினராக உள்ளார்.

    இதனை அறிந்தே அவர் ஜி 20 மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு இருந்தார். தமிழகத்தின் அடையாளமான தவிலை மணிகண்டனும், மற்றொரு கலைஞர் நாதஸ்வரத்தையும் இசைத்து தமிழகத்தின் இசை பாரம்பரியத்தை உலக தலைவர்களின் செவிகளுக்கு விருந்தாக்கினர்.

    இதுபற்றி மணிகண்டன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறுகையில், உலக தலைவர்கள் பங்கேற்று இந்தியா தலைமையேற்று நடத்திய ஜி 20 மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை ஒலிக்க செய்யும் வகையில் 75 இசை கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் அவர்கள் அந்தந்த மாநில இசை கருவிகளுடன் வந்திருந்தனர்.

    மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை விருந்து நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட ஒலியானது உலக தலைவர்களுக்கு பெரிதும் வியப்பை ஏற்படுத்தியது. அதிலும் நம்முடைய நாதஸ்வரம், தவில் இசையை அவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர். நம்முடைய நாதஸ்வரம், தவில் இசை சுமார் அரை மணி நேரம் இசைக்கப்பட் டது.

    அந்த நேரத்தில் நாங்கள் காவடி சிந்து, பஜனை பாடல்கள், தமிழக கலாசார பாடல்கள், மாலை மாற்றுதல் உள்ளிட்டவைகளை இசையாக வடித்தோம். இது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. சபாக்களில் மட்டுமே ஒலித்த இசை சர்வதேச மாநாட்டில் ஒலித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சி நடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் வளரும் இசை கலைஞர்கள் மன்றம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 37-ம் ஆண்டு தியாகபிரம்ம இசை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடந்தது.

    நிகழ்ச்சிக்கு இசைக்கலை ஞர்கள் மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபக்ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் திருப்பனந்தாள் மோகன்தாஸ் குழுவினரின் மங்கள இசை விழா மற்றும் கும்பகோணம் இசை வாத்திய கலைஞர்கள் சார்பில் கச்சேரி ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து, உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளும், ஸ்ரீநிதி ரக்சனாராய், சுசித்ரா பார்த்தசாரதி, பிரியா பிரதீப் குமார், வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மதுரிமா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் பாட்டு கச்சேரியும், கிருஷ்ணசாமியின் வயலின், தியாக பிரம்ம இசை விழா, ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதனையடுத்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை குடந்தை வளரும் இசை கலைஞர்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது.
    • குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது.

    இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது. அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வரும் சம்பவம்..

    1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஜர்ல் என்பவர் திபெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

    அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கி இருந்தார். ஒருநாள் துறவிகள் புது மடத்தின் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு அவரையும் அழைத்து சென்றனர்.

    உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர். டாக்டர் ஜர்ல்லோ, கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.

    துறவிகளோ கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்க வேண்டிய பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர். அதில் மொத்தம் 19 கருவிகள். அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம். பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர். அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.

    அப்போது கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது. குன்றின் கீழ் இருந்து 250 மீட்டர் தொலைவு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது. இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.

    இதை பார்த்த டாக்டர் ஜர்ல் அதிசயத்து போனார். அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர் இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.

    அப்படியென்றல் யோசித்து பாருங்கள்.. உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.

    அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்க முடியும் என நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

    -பாலா

    • 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை புவிசார் குறியீடு பெற்ற நாதஸ்வரம் அஞ்சல் உரை வெளியீட்டு விழா, இசைக்கருவி தயாரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா, நாதஸ்வர இசை திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வரவேற்றார்.

    நாதஸ்வர கலைமாமணி கணேசன், முத்தமிழ் பேரவை தலைவர் ராமானுஜம், வக்கீல் சஞ்சய் காந்தி, ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழு துணை தலைவர்கள் அண்ணாதுரை, பத்மாவதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நாதஸ்வரம் அஞ்சல் உரையை அஞ்சல் மண்டல தலைவர் அப்பா க்கண்ணு கோவிந்தராஜன் வெளியிட அதைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பெற்றுக் கொ ண்டார்.முன்னதாக கலைமா மணி மீனாட்சி சுந்தரம், சேஷகோபாலன் சகோத ரர்கள், வித்வான்கள் கார்த்திக், தங்க ராஜா, மனோ கரன், ராதாகிருஷ்ணன், குருநாதன் , ராஜாராமன் ஆகியோர் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உஷா, ராஜா, பேரூராட்சி தலைவர்கள் புனிதா ஜெயபால் வனிதா ஸ்டாலின் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
    • வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் உள்ள பனுவல் அரங்கில் நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா எழுதிய "பன்முக ஆளுமை அயோத்திதாச பண்டிதர்", "பவுத்தப் பண்டிகைகள்" என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா பல்கலைக்கழக மாணவர்களின் பறை இசையோடு தொடங்கியது.

    விழாவிற்கு துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

    கலைப்புல முதன்மையர் பேராசிரியர் இளையாப்பிள்ளை வரவேற்றார்.

    அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தலைவர் பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.சிந்தனைச் செல்வன் நூலினை வெளியிட பாரத் கல்விக் குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் தியாகராஜன், நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் காமராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
    • நாதஸ்வர இசையுடன் அம்பாள் பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் சாரங்க பாணி கோவில் கீழவீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சக்கரவர்த்தி கோட்டையும் அதனை தொடர்ந்து அம்பாள் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. தொடர்ந்து முருகன் பொம்மலாட்டம், சந்தன காப்புஅலங்காரம், நாதஸ்வர இசையுடன் ஸ்ரீ அம்பாள் பல்லாக்கில் வீதி உலாவும் நடந்தது. வருகிற 12-ந்தேதி இரவு சுத்தாபிஷேகம், காளியம்மன் ஊஞ்சல் உற்சவம் மற்றும் அமுத படையல் நிகழ்ச்சி நடைபெ றுகிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நினைவில் வாழும் செல்வம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.

    • மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.
    • த்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர்:

    கொரோனாவில் துவண்டுபோய் உள்ள மேடை இசைக்கலைஞர்கள், பாடகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திருப்பூர் விஜயாபுரத்திலுள்ள கிட்ஸ் கிளப் பள்ளி மைதானத்தில் மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.இதில், டி.வி. நட்சத்திரம் ஷிவாங்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாம் விஷால், அனு ஆனந்த், முத்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    ×