search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IAS"

    • சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது
    • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது வினாத்தாள்களை எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம்

    ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்துள்ள நிலையில், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கின் விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது எளிதாக மொழிபெயர்ப்பு செய்யலாம் என யோசனை தெரிவித்தனர்.

    இந்த மொழி பெயர்ப்பு நூறு சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், 70 சதவீதம் வரை சரியாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றை மனிதர்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம் எனவும், இது சம்பந்தமாக நேர்மறையாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்.

    • தி.மு.க. வலியுறுத்தல்
    • கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    எதிர்கட்சி தலைவரும் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    தொடர் மழையால் புதுவையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கி உள்ளதால் பல இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    எனவே இன்னும் மாவட்ட நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்காமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களத்தில் இறக்கி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். நீர்நிலைகளை கண்காணித்து வீடுகள் இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.

    வேலைக்கு செல்ல முடியாத மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குறிப்பாக மழைக்கால நோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், விளைநிலங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ.க்களின் துணை யோடு மக்கள் துயர்தீர்க்க துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
    • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

    • தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
    • வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்
    • தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்

    நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.

    அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை கதை முன்னேற துடிப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் அரியானாவை சேர்ந்த விஜய் வர்தன்.

    இவர் அரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.

    பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுத விரும்பினார். கடினமான தேர்வான அதற்கு தயாராவதற்காக டெல்லி சென்றார்.

    அப்பொழுதே அவர் சுமார் 35 முறை பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்.

    ஆனாலும் மனம் தளரவில்லை. மீண்டும் முயன்று யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி 2018ம் வருடம் 104வது இடத்தை பிடித்து வெற்றி கண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் அத்துடன் திருப்தி அடையவில்லை.

    தனது வெற்றி தோல்விகளை ஆராய்ந்த விஜய் வர்தன், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.

    மீண்டும் அந்த தேர்வை எழுதி 2021ல் தேர்ச்சி பெற்று, தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார்.

    தோல்விகள் அனைத்தும் அவரது நம்பிக்கையை குறைக்கவில்லை. தனது இலக்கில் கவனம் செலுத்தி, தனது திறமைகளை மட்டுமே நம்பினார். அவரது விடாமுயற்சியின் விளைவு, அவர் இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார்.

    "எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்" என்பதுதான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறும் அறிவுரை.

    • திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். 

    • தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
    • உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.

    இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார். 

    • யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.
    • ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை டிஜிட்டல் நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவருடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர் வட்டத்தலைவர் லெனின்பாரதி தலைமை வகித்தார். நூலகர் பீர்பாஷா, வரவேற்றார். அவ்வகையில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷ் குமாருக்கு, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுடன் அவர் பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி., என்பது கடினமான தேர்வு. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடையச் செய்யும்.எனவே, இந்த தேர்வுக்கு தயாராகுபவர்கள் தங்கள் திறன்களின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவசியம்.வேறு எந்த கவனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. தேர்வில் எந்த மாதிரியான வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, சுயமாக புரிந்து வைத்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

    ஆன்லைன் வாயிலாக கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பாடத்திட்டம் பெரியது. அதை புரிந்து படிக்க வேண்டும். பயிற்சி மையத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகள், ஆசிரியர்களின் ஆலோசனைகள் பெற்றால் மிகவும் உதவியாக இருக்கும் என்றார். நிர்வாகிகள் சண்முகசுந்தரம், தண்டபாணி, வேலாயுதம், கண்டிமுத்து, விஜயகுமார், கண்ணபிரான், மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #MKStalin
    சென்னை:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய வழிமுறைகளை உருவாக்குவதா? என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூகநீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப்பாதையில் அநியாயமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூகநீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடித்துக் கொண்டிருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத்தேர்வை நடத்தியும் தேர்வு செய்து முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமுதாயங்களை சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.

    இப்போது சிவில் சர்வீஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவுபகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.

    அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு பவுண்டேஷன் கோர்ஸ் என்ற போர்வையில், ஒருவகையிலான நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்கால கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆகவே, பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் கனவுகளை தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறேன். தவறினால் சமூகநீதி கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.க. நடத்திடும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #CentralGovt
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 குடிமைப் பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது.

    தற்போது இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும்போதே பணி மற்றும் கேடர் ஒதுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

    புதிய முறைப்படி 100 நாள் அடிப்படை பயிற்சிக்கு பிறகு பணி, கேடர் ஒதுக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்படுகிறது. எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் எனப்படுகிறது.

    100 நாள் பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்கள், பணி, கேடர் ஒதுக்கீட்டு கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய முறையால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். #CentralGovt
    ×