என் மலர்
நீங்கள் தேடியது "Spokesperson"
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
2. திரு. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
3 திரு. தீரஜ் குமார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4, திருமதி. பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணுமாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:
1. டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
* எரிசக்தித் துறை
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
* போக்குவரத்துத் துறை
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
* வெளிநாடு வாழ் தமிழர் நலன்
* பள்ளிக் கல்வித் துறை
* உயர்கல்வித் துறை
* கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை
* மனிதவள மேலாண்மைத் துறை
2. திரு. ககன்தீப் சிங் பேடி
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
* ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
* நீர்வளத் துறை
* சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
* தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
* இயற்கை வளங்கள் துறை
3. திரு தீரஜ் குமார்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
* உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4. திருமதி. பெ. அமுதா.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
* பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
* வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
* சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
- பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.
51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.
வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.
- டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.
சென்னை:
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை இன்று பிற்பகல் அவசரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக செய்தி தொடர்பாளர் B.N.S. பிரசாத் முறையீடு செய்த நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.






