என் மலர்
நீங்கள் தேடியது "ஷாமா முகமது"
- ரிஷப் பண்ட் தலைமையில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- முகமது சிராஜ், கலீல் அகமது உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சர்பராஸ் கான். 28 வயதான இவர் முதல்தர போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதிக உடல் எடையுடன் காணப்பட்டதால் இளம் வயதில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், தன்னுடைய தொடர் முயற்சியால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். பிப்ரிவரி முதல் நவம்பர் வரை 6 போட்டிகளில் 11 இன்னிங்சில் பேட்டிங் செய்து 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.10 ஆகும்.
அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் ரிஷப் பண்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா ஏ அணிக்கெதிரான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டது. இதில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெண் செய்தி தொடர்பாளரான ஷமா முகமது, "சர்பராஸ் கான் அவருடைய குடும்ப பெயரால், இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த விசயத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் நிலைப்பாடு எங்கே என்பது எங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்திருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் அரசியலை கலப்பதாக பாஜக தலைவர்கள் கடுமையான வகையில் பதிலடி கொடுத்துள்ளனர்.
பாஜக தலைவர் பூனவல்லா ஷமா முகமதுவுக்கு பதில் கொடுக்கும் வகையில் "இந்தப் பெண்மணியும் அவருடைய கட்சியினரும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவை உருவக் கேலி பிறகு, அவரும் அவருடைய கட்சியினரும் நமது கிரிக்கெட் அணியை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்க விரும்புகிறார்களா? நாட்டைப் பிரித்த பிறகும் அவர்கள் திருப்தி அடையவில்லையா?).
இதே அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமதுவும் விளையாடுவார்கள். இந்தியாவை வகுப்புவாத, சாதி அடிப்படையில் பிரிப்பதை நிறுத்துங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதே ஷமா மொகமதுதான் ரோகித் சர்மா பருத்த உடல் கொண்டு விளையாட்டு வீரர் எனக் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பதவியை நீக்கினார்.
- காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார்.
- பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள பட்டியலில் கேரள மாநிலத்தில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பெண் வேட்பாளர்.
51 சதவீதம் பெண்கள் கொண்ட கேரள மக்கள் தொகையில், ஒரே ஒரு பெண் வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று அகில இநதிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி, அரசியலில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் கேரளாவில் உள்ள கட்சித் தலைவர்கள் இதற்கு செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகும், மாநிலத்தில் ஒரு பெண் வேட்பாளரை மட்டுமே கட்சி நிறுத்தியுள்ளது. அதுவும் ஆலத்தூர் தனித் தொகுதி என்பதால் மட் டுமே ரம்யா ஹரிதாசுக்கு சீட் கிடைத்துள்ளது. இல்லை யென்றால் அவரும் கைவிடப்பட்டு இருப்பார்.
வேட்பாளர்களை இறுதி செய்யும்போது தலைவர்கள், பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்திருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களில் பெண்களை நிறுத்தியிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்டனர். ஆனால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த முறை ஒருவர் மட்டுமே களத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. கேரளாவில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் கொண்ட பாரதிய ஜனதாவின் ஆரம்ப பட்டியலில் 3 பெண் வேட்பாளர்களும், எல்.டி.எப். அறிவித்த 20 வேட்பாளர்களின் பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள முன்னாள் முதல்-மந்திரி கருணாகரனின் மகள் பத்மாஜா வேணுகோபால், தான் புறக்கணிக்கப்படுவதாக கூறி காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜனதாவில் இணைந்த நிலையில், ஷாமாவின் கருத்து தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக காங் கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகி ஓருவர் கூறுகையில், ஷாமா புகார் அளிக்கவில்லை. பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்குச் செல்கிறது என்றும், அவர்களை திரும்ப பெற கட்சிக்கு அதிக பெண் வேட்பாளர்கள் தேவை என்றும் தெரிவித்துள்ளார் என்றார்.






