என் மலர்
நீங்கள் தேடியது "சிவில் சர்வீஸ் தேர்வு"
- சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார்.
- அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார்.
இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது ரேங்க், ஐஐடி டெல்லியில் பி.டெக் பட்டம் பெற்று 21 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று ஐஏஎஸ் அதிகாரி ஆனவர் பஞ்சாபை சேர்ந்த காஷிஷ் மிட்டல்.
சமூகத்தால் சாதனைகளாக கருதப்படும் மேற்கூறிய அனைத்தையும் உதறிவிட்டு காஷிஷ் தேர்ந்தெடுத்த பாதை இந்துஸ்தானி இசை ஆகும்.
காஷிஷ் 1989 ஆம் ஆண்டு ஜலந்தரில் ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீஷ் குமார் மற்றும் சங்கீதா மிட்டல் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இசை காஷிஷின் இரத்தத்தில் ஊறிப் போனது. எட்டு வயதில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். 11 வயதில், பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற ஹர்வல்லப் சங்கீத சம்மேளனத்தில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார்.
சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார். பள்ளி நாட்களிலும், ஐஐடியில் தனது பரபரப்பான வாழ்க்கையிலும் அவர் இசையை கைவிடவில்லை.
காஷிஷின் ஆரம்ப இலட்சியம் சிவில் சர்வீஸ். அவரது தந்தை ஒரு ஐபிஎஃப் அதிகாரி. அதுவே அவருக்கு உத்வேகம் அளித்தது. ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸுக்கு முயற்சித்தார். அதனால், தனது 21 வயதில், முதல் முயற்சியிலேயே காஷிஷ் ஐஏஎஸ் பெற்றார்.
சண்டிகரின் கூடுதல் துணை ஆணையர், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் துணை ஆணையர், நிதி ஆயோக்கின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த பிறகு அவர் பதவி விலகினார். அப்போதும் கூட, இசையை தன்னுடன் வைத்திருந்தார்.

இசை மற்றும் கல்வி, வேலை வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் முயன்றார். ஆனால், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற முழுமையான அர்ப்பணிப்பு அவசியம் என்பதை காஷிஷ் உணர்ந்தார். அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார். 2019 இல் தனது சிவில் சர்வீஸ் பணியை உதறிவிட்டு முழு நேர இசைக் கலைஞராக மாறினார்.
காஷிஷ், இந்துஸ்தானியில் கயாலுடன் தொடர்புடைய 'ஆக்ரா கரானா' (Agra Gharana) இசை வகையை மிகவும் விரும்பினார். இப்போது காஷிஷ் டெல்லியில் பல இடங்களில் 'ஆக்ரா கரானா'வை நிகழ்த்துவதைக் காணலாம்.
அவர் இப்போது அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஏ கிரேடு கலைஞராக உள்ளார். காஷிஷ் இந்தியா முழுவதும் பல இசை விழாக்களில் பாடியுள்ளார். சமூக ஊடகங்களிலும் தனது பாடல்களை காஷிஷ் வெளியிடுகிறார். அவை அதிக பார்வைகளை பெற்று வருகின்றன.
'இசை போன்ற கலைகள் ஒரு நித்திய பயணம். அதற்கு நாம் தகுதியான விலையை வழங்க வேண்டும்' என்று காஷிஷ் கூறுகிறார்.
- 9 மையங்களில் நாளை நடக்கிறது
- 2,391 பேர் எழுதுகின்றனர்
வேலூர்:
நாடு முழுவதும் நாளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற உள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 391 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.
தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1,074 பேர் ஆப்சென்ட்
- வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்
வேலூர்:
நாடு முழுவதும் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற இந்திய ஆட்சி பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு வேலூர் ஊரிசு பள்ளி, ஊரிசு கல்லூரி, டி.கே.எம். கல்லூரி, கோடையிடி குப்புசாமி அரசு பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, சாந்திநிகேதன், எத்திராஜ் மெட்ரிக் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் உள்ளிட்ட 9 தேர்வு மையங்களில் நடந்தது.
இதில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 2 ஆயிரத்து 391 பேரில், 1317 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
மீதமுள்ள 1,074 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வின் முதல் தாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்தது. மேலும் தேர்வின் 2-ம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத சென்றவர்களை செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களில் 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஊரீசு கல்லூரியில் நடந்த தேர்வை வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
- சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
- சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.
தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.
ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.
தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.
- லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
- இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.
சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.
அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.
இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.
- கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது
- கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்
கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்த உதய் கிருஷ்ணா ரெட்டிக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அவர் பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
தனது இந்த சாதனை குறித்து பேசிய உதய் கிருஷ்ணன் ரெட்டி, "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்
780வது இடம் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.






