சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான மாணவர்- பயிற்சி வகுப்பில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான மாணவர்- பயிற்சி வகுப்பில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.

சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். 

அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.

அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.

இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com