என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Civil Service Exam"
- சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
- சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.
தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.
ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.
தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.
- வைத்திலிங்கம் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்
- புதுவைப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி:
மாரியப்பனார்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்தில் மேனிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவல் ஆய்வாளர், காவலர், பண்டகக் காப்பா ளர் போன்ற புதுவை அரசுப் பணிகளுக்கான இலவச பயிற்சி நிறைவு விழா,பயிற்சி கையேடு வெளியீட்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவுநர் மா.மா. மாரியப்பனார் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். நண்பர்கள் தோட்டம் தலைவர் ப.திருநாவுக்கரசு நெறியாள்கை செய்தார். விழாவில், வைத்தி லிங்கம் எம்.பி. கலந்துகொண்டு பயிற்சிக் கையேட்டை வெளியிட, வைத்திய நாதன் எம். எல்.ஏ. பெற்றுக்கொண்டார். வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: மாணவர்கள் தோல்வியைக் கண்டு கவலைப்படக்கூடாது தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டுவிட்டுக் கல்வியிலும், உழைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார் பயிற்சியின்போது நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் இடம் பிடித்த பிரகாஷ் ராஜ், சிவசக்தி மற்றும் தமிழமுது ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை அவர் வழங்கிப் பாராட்டினார்.
மு. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில்: தான் உழைப்பால் உயர்ந்ததையும், மாணவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கல்வியில் முன்னேற வேண்டும் என்றார். தட்டச்சு மாணவர்களுக்குச சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.
விழாவில் தொழிலதிபர் குமரகுரு பங்கேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் தமிழ்மாமணி அ.டீசேன். நிழற்படக் கலைஞர் காரை இரா.நேரு, ஜீவானந்தபுரம் கிராமக்குழு ர.சபாநாயகம், தலைமை ஆசிரியர் சிகாசிநாதன், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அரசுத் தேர்வுக்காக நடத்தப்பட்ட இந்த இலவசப் பயிற்சிக்காக இடத்தை இலவசமாக அளித்த ராசகுருவின் மகன், மதியழ்கள் பாராட்டப்பட்டார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள், உதவவுகம், செந்தில்குமார், அரிமாபிரபாகரன், பாராட்டபட்டனர், அருணகிரி, இளவரசி சங்கர் ஆகியோரும்
விழாவின் இறுதியில், தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.
விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
