என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுபிஎஸ்சி தேர்வு"

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம்.

    நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
    • நடப்பு ஆண்டில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.

    யுபிஎஸ்சி 2025 பிரதான தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று வெளியாகியுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகிதம் 13.97 சதவீதம் அதிரித்துள்ளது.

    அதன்படி, யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற முகவரியில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 155 பேர் யுபிஎஸ்சி பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள்.
    • தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட 24 வகையான குடிமை பணிகளுக்கு இந்த ஆண்டு 979 பேரை தேர்வு செய்வதற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

    சென்னையில் 69 மையங்களில் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக பட்டதாரி வாலிபர்கள், டாக்டர் படிப்பை முடித்தவர்கள், என்ஜினீயர்கள் என பலர் தேர்வு மையங்களில் திரண்டனர்.

    சென்னையில் உள்ள தேர்வு மையங்களில் 24,364 பேர் முதல்நிலை தேர்வை எழுதினார்கள். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடத்தப்படும்.

    சென்னையில் தேர்வு நடைபெறும் 69 மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

    மண்ணடியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இந்தியில் மட்டுமே வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தகவல்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதை பார்த்து தேர்வு எழுத சென்றவர்கள் குழப்பம் அடைந்தனர்.

    தேர்வு முடிவடைந்த நிலையில், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    யுபிஎஸ்சி தேர்வில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதிலால் சர்ச்சை எழுந்துள்ளது.

    சுயமரியாதை இயக்கம் தொடங்கியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    கேள்வித்தாளில் 4 விடைகளில் ஒன்றில் பெரியார் பெயருடன் அவரது சாதி பெயரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலுக்கு பெரியாரிய இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்றதாக மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி உள்ளது.
    • பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது.

    அதிக விவசாயிகள் தற்கொலை விகிதத்திற்குப் பெயர் பெற்ற மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் மாவட்டம், இப்போது கொண்டாட்டங்களில் ஈடுபட ஒரு காரணம் கிடைத்துள்ளது.

    அங்குள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகள், 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142வது இடத்தைப் பிடித்து அசாதாரண சாதனை படைத்துள்ளார்.

    அந்த புத்திசாலிப் பெண்ணின் பெயர் அதீப் அனாம். இதன் மூலம், அதீப் தனது மாநிலத்திலிருந்து மதிப்புமிக்க இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி ஆனார்.

    "பெண்கள் உயர்கல்வி கற்பதை சமூகம் எதிர்த்தது. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் என் தந்தை என்னிடம் கூறினார்" என்று அதீப் அனாம் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

    • மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.
    • நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    * தி.மு.க. ஆட்சியில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம்.

    * எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதனை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தோம்.

    * மாணவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.

    * மாணவர்கள் மீதும், நான் முதல்வன் திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.

    * நான் முதல்வன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிறப்பாக நிறைவேறி வருவதில் மகிழ்ச்சி.

    * சாமானிய வீடுகளில் இருந்து வந்து வென்ற உங்களை பாராட்டுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்

    * நீங்கள் வென்றால் மட்டும் போதாது, மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் நடக்க வேண்டும்.

    * யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிகள் குறைந்த நேரத்தில் நீங்கள் கவலையை தீர்த்துள்ளீர்கள்.

    * அதிகாரம் என்பது அனைவருக்கும் சமம், அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
    • தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், நந்தவனம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெறுவேடம்பாளையத்தை சேர்ந்த விவசாய தம்பதிகளான சந்திரசேகர்-ராஜேஸ்வரி தம்பதிகளின் மகள் மோகன தீபிகா (வயது 23). இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மோகன தீபிகா செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்விலும் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில் மோகன தீபிகா இந்திய அளவில் 617-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா வெறு வேடம்பாளையத்தை சேர்ந்த ஏழை விவசாயி மகளான நான் எனது ஊரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தேன்.

    மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்பை கோவையில் படித்தேன். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத தயாரானேன். அதற்கு எனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர்.

    மேலும் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு மிகவும் பயனளித்தது. தமிழ்நாடு அரசு தேர்வு பயிற்சி மையம் மூலமாக தீவிரமாக படித்து இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பாராட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னை போன்று கிராமத்தில் உள்ள மாணவ- மாணவிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு அரசு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    இவ்வாறு அவர் கூறினார்

    • யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல.
    • பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    சென்னை:

    யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஆளுநர் மாளிகைக்கு அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-

    யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவதும், வெற்றி பெறுவதும் எளிதானது அல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.

    நீங்கள் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். புத்தகங்களை தொடர்ந்து வாசித்து வந்தால் மற்றவர்களிடம் கலந்துரையாடும் போது பெரிய அளவில் உதவும்.

    உடல் நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

    பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகளோ அல்லது லஞ்சம் போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வருடந்தோறும் தேர்வு நடத்தி வருகிறது.

    இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

    இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். இதுபற்றி சிவச்சந்திரன் கூறுகையில், "யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வில் வெற்றிபெற நான் முதல்வன் திட்டம் உதவிகரமாக இருந்தது" என்றார்.

    அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 50 பேரில் 18 பேர் முழுநேர உறைவிட பயிற்சி மேற்கொண்டவர்கள் ஆவர். மேலும்

    தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், தங்கபாண்டியன் ஆகிய இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    • தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார்.
    • 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வுகள் நடத்துகிறது. இந்த தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் கொண்டது.

    இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

    தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயின்ற 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
    • மிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

    காலிப்பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3-ந்தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4-ந்தேதி ஆகும்.

    தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு ஜூலையில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். 

    • பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது.
    • மக்ராணியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆயஷா பாத்திமா (23) மற்றும் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆயஷா மக்ராணி (26). இருவரும் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில், இதில் ஆயஷா பாத்திமாவும், ஆயஷா மக்ராணியும் ஒரே பதிவு எண்ணுடன் ஒரே ரேங்க்கில் (184வது ரேங்க்) தேர்ச்சி பெற்றுள்ளதாக முடிவு வெளியாகி இருந்தது. இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும்பட்சத்தில் அந்த 184வது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வியும் எழுந்தது.

    இதையடுத்து, சுமார் 200 கி.மீ இடைவெளியில் வசிக்கும் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல்துறையில் யுபிஎஸ்சி மோசடி செய்துள்ளதாகக் கூறி விளக்கம் கேட்டு புகார் அளித்தனர்.

    இருவரும் தங்களது அட்மிட் கார்டுகளை சமர்ப்பித்தனர். அதில், இருவருக்கும் ஒரே பதிவு எண் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், மக்ரானியின் அட்மிட் கார்டில், ஆளுமைத் தேர்வின் தேதி ஏப்ரல் 25 (வியாழன்) என்றும், பாத்திமாவின் தேதியில் ஏப்ரல் 25 (செவ்வாய்கிழமை) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும், பாத்திமாவின் கார்டில் க்யூஆர் குறியீட்டுடன் யுபிஎஸ்சியின் வாட்டர் மார்க் இருந்துள்ளது. அதே சமயம் மக்ரானியின் அட்டையில் எந்த க்யூஆர் குறியீடும் இல்லாமல் சாதாரண காகிதத்தில் பிரிண்ட் அவுட் போன்று ஒட்டிருந்தது.

    இந்நிலையில், தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184வது ரேங்க் ஆயஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×