search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ips"

    • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
    • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

    • பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்
    • தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்

    நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.

    அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை கதை முன்னேற துடிப்பவர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் அரியானாவை சேர்ந்த விஜய் வர்தன்.

    இவர் அரியானாவின் சிர்சாவில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.

    பின்னர் இந்திய நிர்வாக சேவைகளுக்கான போட்டி தேர்வான யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுத விரும்பினார். கடினமான தேர்வான அதற்கு தயாராவதற்காக டெல்லி சென்றார்.

    அப்பொழுதே அவர் சுமார் 35 முறை பல அரசாங்க வேலைகளுக்கான தேர்வுகளை எழுதினார். ஆனால் அவற்றில் தோல்வியையே கண்டார்.

    ஆனாலும் மனம் தளரவில்லை. மீண்டும் முயன்று யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதி 2018ம் வருடம் 104வது இடத்தை பிடித்து வெற்றி கண்டு ஐபிஎஸ் அதிகாரியானார். அவர் அத்துடன் திருப்தி அடையவில்லை.

    தனது வெற்றி தோல்விகளை ஆராய்ந்த விஜய் வர்தன், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்.

    மீண்டும் அந்த தேர்வை எழுதி 2021ல் தேர்ச்சி பெற்று, தற்போது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றுகிறார்.

    தோல்விகள் அனைத்தும் அவரது நம்பிக்கையை குறைக்கவில்லை. தனது இலக்கில் கவனம் செலுத்தி, தனது திறமைகளை மட்டுமே நம்பினார். அவரது விடாமுயற்சியின் விளைவு, அவர் இப்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார்.

    "எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்" என்பதுதான் இளைஞர்களுக்கு விஜய் வர்தன் கூறும் அறிவுரை.

    • தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
    • உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.

    இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார். 

    உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சூர்ய குமார் சுக்லா, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அவர் கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற இருக்கும் சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுக்லா எழுதியுள்ள கடிதத்தில், “பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என கூறியுள்ளார்.

    ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் ஓ.பி.சவுத்தரி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள அம்மாநில சட்டசபை தேர்தலில் அவர் அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #CentralGovt
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 குடிமைப் பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி. தேர்வு நடத்துகிறது.

    தற்போது இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும்போதே பணி மற்றும் கேடர் ஒதுக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ். பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

    புதிய முறைப்படி 100 நாள் அடிப்படை பயிற்சிக்கு பிறகு பணி, கேடர் ஒதுக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்படுகிறது. எந்த மாநிலத்தில் சேவையாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கேடர் எனப்படுகிறது.

    100 நாள் பயிற்சியின் போது எடுக்கும் மதிப்பெண்கள், பணி, கேடர் ஒதுக்கீட்டு கணக்கில் கொள்ளப்படும். இந்த புதிய முறையால் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். #CentralGovt
    ×