என் மலர்
நீங்கள் தேடியது "ஜேஇஇ தேர்வு"
- சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார்.
- அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார்.
இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது ரேங்க், ஐஐடி டெல்லியில் பி.டெக் பட்டம் பெற்று 21 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று ஐஏஎஸ் அதிகாரி ஆனவர் பஞ்சாபை சேர்ந்த காஷிஷ் மிட்டல்.
சமூகத்தால் சாதனைகளாக கருதப்படும் மேற்கூறிய அனைத்தையும் உதறிவிட்டு காஷிஷ் தேர்ந்தெடுத்த பாதை இந்துஸ்தானி இசை ஆகும்.
காஷிஷ் 1989 ஆம் ஆண்டு ஜலந்தரில் ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீஷ் குமார் மற்றும் சங்கீதா மிட்டல் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இசை காஷிஷின் இரத்தத்தில் ஊறிப் போனது. எட்டு வயதில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். 11 வயதில், பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற ஹர்வல்லப் சங்கீத சம்மேளனத்தில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார்.
சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார். பள்ளி நாட்களிலும், ஐஐடியில் தனது பரபரப்பான வாழ்க்கையிலும் அவர் இசையை கைவிடவில்லை.
காஷிஷின் ஆரம்ப இலட்சியம் சிவில் சர்வீஸ். அவரது தந்தை ஒரு ஐபிஎஃப் அதிகாரி. அதுவே அவருக்கு உத்வேகம் அளித்தது. ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸுக்கு முயற்சித்தார். அதனால், தனது 21 வயதில், முதல் முயற்சியிலேயே காஷிஷ் ஐஏஎஸ் பெற்றார்.
சண்டிகரின் கூடுதல் துணை ஆணையர், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் துணை ஆணையர், நிதி ஆயோக்கின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த பிறகு அவர் பதவி விலகினார். அப்போதும் கூட, இசையை தன்னுடன் வைத்திருந்தார்.

இசை மற்றும் கல்வி, வேலை வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் முயன்றார். ஆனால், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற முழுமையான அர்ப்பணிப்பு அவசியம் என்பதை காஷிஷ் உணர்ந்தார். அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார். 2019 இல் தனது சிவில் சர்வீஸ் பணியை உதறிவிட்டு முழு நேர இசைக் கலைஞராக மாறினார்.
காஷிஷ், இந்துஸ்தானியில் கயாலுடன் தொடர்புடைய 'ஆக்ரா கரானா' (Agra Gharana) இசை வகையை மிகவும் விரும்பினார். இப்போது காஷிஷ் டெல்லியில் பல இடங்களில் 'ஆக்ரா கரானா'வை நிகழ்த்துவதைக் காணலாம்.
அவர் இப்போது அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஏ கிரேடு கலைஞராக உள்ளார். காஷிஷ் இந்தியா முழுவதும் பல இசை விழாக்களில் பாடியுள்ளார். சமூக ஊடகங்களிலும் தனது பாடல்களை காஷிஷ் வெளியிடுகிறார். அவை அதிக பார்வைகளை பெற்று வருகின்றன.
'இசை போன்ற கலைகள் ஒரு நித்திய பயணம். அதற்கு நாம் தகுதியான விலையை வழங்க வேண்டும்' என்று காஷிஷ் கூறுகிறார்.
- பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிறது.
திண்டுக்கல்:
பிளஸ்-2 மாணவர்களுக்கு ஜே.இ.இ மெயின்தேர்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது என மத்திய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு இன்றுமுதல் ஜனவரி 13, 19, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் 27-ந்தேதி தேசிய நுழைவுத்தேர்வுக்கான ஜே.இ.இ மெயின்தேர்வும் வருகிறது. இதனால் அந்த நாளில் எந்த தேர்வுக்கு தயாராவது என்பதில் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனவே கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து ஆராய்ந்து திருப்புதல் தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- ஜேஇஇ தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
- தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது.
திருச்சி:
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ரோகிணி கூறுகையில்,
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் பழங்குடியினர் அரசு பள்ளியில் படித்தேன். ஜேஇஇ (JEE) தேர்வெழுதி 73.8 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
திருச்சி என்ஐடியில் (NIT) சீட் பெற்று, கெமிக்கல் பாடத்தை தேர்வு செய்துள்ளேன். தமிழக அரசு எனது அனைத்து கட்டணங்களையும் செலுத்த முன்வந்துள்ளது. எனக்கு உதவிய முதலமைச்சருக்கு நன்றி. எனது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஊழியர்களால் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
- 2024 ஜேஇஇ தேர்வில் பழங்குடியின மாணவி சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
- “கல்வி ஆகச்சிறந்த செல்வம்” அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.
2024 ஜேஇஇ (JEE) தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி-ல் (NIT) சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர்.
ஜேஇஇ (JEE) தேர்வில் மாணவி ரோகிணி 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி என்ஐடி-ல் (NIT) மாணவி ரோகிணி வேதிப் பொறியியலும், சுகன்யா உற்பத்தி பொறியியலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்ற சுகன்யாவிற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "JEE நுழைவுத்தேர்வில் வென்று திருச்சி NIT யில் பயில போகும் அன்புத்தங்கை சுகன்யா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள். "கல்வி ஆகச்சிறந்த செல்வம்" அது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தங்கை தம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது.
- படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஜேஇஇ தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவி பற்றி அதானி குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் கவுதம் அதானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"உங்கள் அனைவருக்கும் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உள்ளது - தோல்வியை ஒருபோதும் இறுதி இலக்காகக் கருதாதீர்கள். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இரண்டாவது வாய்ப்பை அளிக்கிறது..." என்று தெரிவித்து உள்ளார்.
மாணவியின் மரணம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், "எதிர்பார்ப்புகளின் சுமையில் ஒரு நம்பிக்கைக்குரிய மகள் இப்படிச் செல்வதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது".
அந்த மாணவி தனது பெற்றோருக்கு "அவர்களின் கனவுகளை நிறைவேற்றாததற்கு" "மன்னிக்கவும்" என்று ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார்.
வாழ்க்கைப் பாடத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், பெற்றோர்கள் தங்களிடமிருந்தும் தங்கள் குழந்தைகளிடமிருந்தும் அழுத்தங்களை விலக்கி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
"வாழ்க்கை எந்தத் தேர்வையும் விடப் பெரியது - பெற்றோர்கள் இதைப் புரிந்துகொண்டு தங்கள் குழந்தைகளுக்கும் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி தனது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் மனம் திறந்து கூறி உள்ளார். அதில்,
"நான் படிப்பில் மிகவும் சாதாரணமாக இருந்தேன்". மேலும் "படிப்பிலும் வாழ்க்கையிலும் பல முறை தோல்வியடைந்தேன்".
"ஆனால் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது" என்று கூறினார்.






