search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veena"

    • பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
    • வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சி நடந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் வளரும் இசை கலைஞர்கள் மன்றம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 37-ம் ஆண்டு தியாகபிரம்ம இசை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடந்தது.

    நிகழ்ச்சிக்கு இசைக்கலை ஞர்கள் மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபக்ரமேஷ் முன்னிலை வகித்தார்.

    விழாவில் திருப்பனந்தாள் மோகன்தாஸ் குழுவினரின் மங்கள இசை விழா மற்றும் கும்பகோணம் இசை வாத்திய கலைஞர்கள் சார்பில் கச்சேரி ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து, உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளும், ஸ்ரீநிதி ரக்சனாராய், சுசித்ரா பார்த்தசாரதி, பிரியா பிரதீப் குமார், வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சியும் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, மதுரிமா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் பாட்டு கச்சேரியும், கிருஷ்ணசாமியின் வயலின், தியாக பிரம்ம இசை விழா, ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதனையடுத்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை குடந்தை வளரும் இசை கலைஞர்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, சுவாமிமலை ஐம்பொன் சிலை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றதாகும்.
    • தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில்

    கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சி யம் மட்டுமல்லபல்வேறு கலைகளின் வாழ்விட மாகவும், பிறப்பிடமாகவும் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    அதாவது தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் பெயிண்ட்ஸ், கருப்பூர் பெயிண்ட், கலைத்தட்டு, திருபுவனம் பட்டு, சுவாமிமலை ஐம்பொன் சிலை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, நெட்டி வேலைபாடுகள் ஆகிய 10 பொருட்கள் புவிசார் குறியீடுபெற்றது ஆகும்.

    இந்த நிலையில் இந்த கலை களையும், கலைஞர்களை ஊக்குவி க்கவும், அவர்க ளை உலகம் அறியும் வகையில் செய்யவும் சென்னை அண்ணா நகர் வி .ஆர் .மாலில் முதல் கட்டமாக வருகிற 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்களில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனையகம்- கண்காட்சி நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சென்னையில் உள்ள உங்கள் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். தஞ்சை மாவட்டத்தின் புகழ் உலக நாடுகளுக்கு பரவட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
    • வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மது ராஜ் இயக்கத்தில் பிரித்விராஜன் - வீணா நடிப்பில் வெளியாகி இருக்கும் தொட்ரா படத்தின் விமர்சனம். #ThodraReview #PrithiviRajan #Veena
    ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாயகன் பிரித்விராஜன் கல்லூரியில் படித்துக் கொண்டே பேப்பர் போடும் வேலை பார்த்து வருகிறார். நாயகி வீணாவும் அதே கல்லூரியிலேயே படிக்கிறார். ஒருநாள் பேப்பர் போடும் போது நாயகியை பார்க்கும் பிரித்விராஜனுக்கு, கண நேரத்தில் வீணா மீது காதல் வந்து விடுகிறது. வீணா பின்னாலேயே சென்று தனது காதலை சொல்ல முயற்சி செய்கிறார்.

    ஒருகட்டத்தில் பிரித்விராஜனின் காதலை புரிந்து கொள்ளும் வீணாவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். வீணாவின் அப்பா கஜராஜ் மற்றும் அண்ணன் எம்.எஸ்.குமார் ஜாதிக் கட்சியை சேர்ந்தவர்கள். ஜாதி வெறியோடு இருக்கும் இவர்கள் வேறு ஜாதியை சேர்ந்த இருவர் இணைவதையே தடுத்து வருகின்றனர்.



    இந்த நிலையில், வீணாவின் காதல் எம்.எஸ்.குமாருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து உடனடியாக வேறு ஒருவருடன்  திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்திற்கு முன்பாக வீணா, பிரித்விராஜனுடன் ஓடிவிடுகிறார். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் கஜராஜ் இறந்துவிடுகிறார்.

    பின்னர் திருமணமான தனது தங்கையை பிரித்விராஜனிடம் இருந்து பிரித்து விடுகிறார் எம்.எஸ்.குமார். கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? எம்.எஸ்.குமாரின் ஜாதி வெறிக்கு முடிவு வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    பிரித்விராஜ் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்தாலும், இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. கேரளாவை சேர்ந்த நாயகி வீணா திரையில் பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரமும் ரசிக்கும்படியாக வந்துள்ளது. 



    எம்.எஸ்.குமாரின் நடிப்பு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது, மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. கஜராஜ், ஏ.வெங்கடேஷ் உள்ள மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர்.

    தனது முதல் படத்திலேயே ஜாதியினால் ஏற்படும் பிரச்சனைகளை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மதுராஜ். ஜாதியால் ஏற்படும் பிரச்சனைகள், அதனால் பாதிக்கப்படுபவர்களை மையப்படுத்தி காதல் படமாக கதை நகர்கிறது. ஜாதி வெறி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியாக படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள். அதுவும் உண்மை கதையை மையப்படுத்தி கதையை உருவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஆர்.என்.உத்தமராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கம் ரகம் தான். பின்னணி இசையின் மூலமும் வலுசேர்த்திருக்கிறார். செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கிராம சாயலை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    மொத்தத்தில் `தொட்ரா' ஜாதியை விடுறா. #ThodraReview #PrithiviRajan #Veena

    ×