search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பூர கொடியேற்று விழா
    X

    கொடியேற்று விழா நடந்தது.

    ஆடிப்பூர கொடியேற்று விழா

    • யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
    • வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×