என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில் தியாகபிரம்ம இசை விழா
- பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
- வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சி நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள சங்கர மடத்தில் வளரும் இசை கலைஞர்கள் மன்றம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில் 37-ம் ஆண்டு தியாகபிரம்ம இசை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பஞ்சரத்ன கீர்த்தனை விழா கடந்த 2 நாட்களாக நடந்தது.
நிகழ்ச்சிக்கு இசைக்கலை ஞர்கள் மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தீபக்ரமேஷ் முன்னிலை வகித்தார்.
விழாவில் திருப்பனந்தாள் மோகன்தாஸ் குழுவினரின் மங்கள இசை விழா மற்றும் கும்பகோணம் இசை வாத்திய கலைஞர்கள் சார்பில் கச்சேரி ஆகியவை நடந்தது.
தொடர்ந்து, உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளும், ஸ்ரீநிதி ரக்சனாராய், சுசித்ரா பார்த்தசாரதி, பிரியா பிரதீப் குமார், வெங்கடேஷ், சுபாஷினி ஆகியோரின் வீணை நிகழ்ச்சியும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மதுரிமா ராமகிருஷ்ணன், ஸ்ரீமதி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் பாட்டு கச்சேரியும், கிருஷ்ணசாமியின் வயலின், தியாக பிரம்ம இசை விழா, ஸ்கந்த சுப்பிரமணியன் மிருதங்கம், கிருஷ்ணசாமி கடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
இதனையடுத்து ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை குடந்தை வளரும் இசை கலைஞர்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்