என் மலர்
நீங்கள் தேடியது "Chess"
- மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்று நடைபெற்றது.
- தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
ஃபிடே உலகக் கோப்பை 2025 செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் விளையாடுகிறார்கள்.
மொத்தம் 8 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியின் முதல் சுற்றில், இந்திய வீரர் எஸ்.எல். நாராயணன் பெருவின் ஸ்டீவன் ரோஜாஸை எதிர்கொண்டார்.
போட்டியில் முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்த நிலையில் டைபிரேக்கரில் நாராயணன் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
நாராயணனைத் தொடர்ந்து, தீப்தயன் கோஷ் மற்றும் அரோண்யக் கோஷ் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.
- இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும்.
- முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் 25.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
அதே சமயம் உலக செஸ் சாம்பியனான குகேஷ் இந்த செஸ் தொடரில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும். அதே சமயம் கடைசி இடம் பிடித்த குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசாக கிடைக்கும்.
- சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார்.
- வெற்றி பெற்ற பிறகு குகேஷின் ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த குகேஷ் முதல் போட்டியில் கார்ல்சனுடன் தோல்வியடைந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தார். இதனையடுத்து நகமுரா மற்றும் கருவானாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் அவர் வலுவாக மீண்டு வந்தார்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு அவரது ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார். இதை பார்த்த குகேஷ், சிரிப்புடன் அதனை கடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.
- அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
- ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்த அமெரிக்க கிராண்ட் மாஸ்டர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் செக்மேட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில் நடைபெற்ற இப்போட்டியல் இந்தியா- அமெரிக்கா மோதியது.
இதில், அமெரிக்க அணி 5-0 என்ற கணக்கில் இந்தியா அணியை வீழ்த்தியது.
நேற்றைய கடைசி ஆட்டத்தில், அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா, இந்திய கிராண்ட் மாஸ்டரான உலக சாம்பியன் குகேஷ் டோமராஜுவை தோற்கடித்தார்.
இதையடுத்து, ஹிகாரு நாகமுரா, குகேஷின் கையில் இருந்த KING-ஐ பிடிங்கி அங்கிருந்த கூட்டத்தின் மீது விசிறியடித்தார். பின்னர், ரசிகர்ளை பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்தார்.
அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நாகமுரா ஹிகாருவின் செயலை கண்டு குகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
- வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
- கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நமது சென்னைப் பெண் வைஷாலிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி வெறும் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், இப்போது உலக அரங்கில் தங்கள் கனவுகள் பிரதிபலிப்பதைக் காணும் எண்ணற்ற இளம் பெண்களுக்கும் ஒரு கொண்டாட்டமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், " வைஷாலி ரமேஷ்பாபுவுக்கு வாழ்த்துக்கள். இது ஒரு சிறப்பான சாதனை என்றும் அவரது ஆர்வமும், அர்ப்பணிப்பும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
- இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
- அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார்.
- இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
FIDE உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சீனாவின் டான் ஜாங்கியுடன் மோதினார். இந்த போட்டியில் 1.5 - 0.5 என்ற கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு திவ்யா முன்னேறினார்.
இதன்மூலம் மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். மேலும், இதன் மூலம் Candidates தொடருக்கும் திவ்யா தேர்வாகி உள்ளார்
மற்றொரு அரையிறுதி போட்டியில் கோனேரு ஹம்பி, சீனாவின் டிங்ஜி லீயுடன் மோதினார். இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஹம்பி இப்போது டை-பிரேக்கரில் டிங்ஜி லீயை எதிர்கொள்வார்.
- அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும்.
- போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பீடே விளக்கம் அளித்துள்ளது.
- கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இப்போட்டியில் ஹம்பி வெற்றி பெற்றார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
முதல் முறையாக கொனேரு ஹம்பி, வைஷாலி , திவ்யா, ஹரிகா ஆகிய 4 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் விளையாடிய 2 ஆவது காலிறுதி போட்டி டிராவில் முடிந்தது. இதன் காரணமாக மகளிர் செஸ் உலக கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி பெற்றார்
சென்னை கிராண்ட்மாஸ்டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது போட்டியில் வைஷாலி தோல்வியை தழுவி வெளியேறினார்.
மற்றொரு கால் இறுதியில் இந்திய வீராங்கனைகளான ஹரிகா-திவ்யா தேஷ்முக் மோதினார்கள். முதல் போட்டி 'டிரா' ஆனது. 2-வது ஆட்டமும் 60-வது நகர்த்தலின் போது 'டிரா' வில் முடிந்தது. இருவரும் தலா 1 புள்ளியுடன் சம நிலையில் உள்ளனர். இன்று 'நடைபெறும் டை பிரேக்கரில் வெற்றி பெறும் வீராங்கனை அரை இறுதிக்கு முன்னேறுவார்.
இன்னொரு கால் இறுதி யில் லீடிங்பி (சீனா) 2-0 என்ற கணக்கில் டிஜாக் னிட்ஜியை (ஜார்ஜியா) தோற்கடித்தார். ஹம்பி அரை இறுதியில் லீடிங்சியை எதிர்கொள்கிறார்.
- அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் Freestyle செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
- இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார்.
- இன்று 2-வது போட்டியை ‘டிரா’ செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி ஆட் டங்கள் நேற்று தொடங்கியது. முதல் முறையாக 4 இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கொனேரு ஹம்பி கால் இறுதியில் சீனாவை சேர்ந்த சாங்கை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். 53-வது நகர்த்தலின் போது யுக்சின் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனால் ஹம்பி வெற்றி பெற்றார். அவர் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளார். இன்று 2-வது போட்டியை 'டிரா' செய்தாலே ஹம்பி அரையிறுதிக்கு தகுதி பெறுவார்.
சென்னை கிராண்ட்மாஸ் டரான வைஷாலி சீன வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான டான் ஜோங்கியை சந்தித்தார்.இந்த ஆட்டம் 72-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு கால்இறுதியில் இந்திய வீராங்கனைகள் திவ்யா-ஹரிகா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, தொடக்கத்தில் முந்தினார். பின்னர் 31-வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இருவரும் 0.5-0.5 என சம நிலையில் இருந்தனர்.
- ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
- ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.
உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
இதன்மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.






