என் மலர்
நீங்கள் தேடியது "டி குகேஷ்"
- இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும்.
- முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் 25.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
அதே சமயம் உலக செஸ் சாம்பியனான குகேஷ் இந்த செஸ் தொடரில் கடைசி இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு, ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்படும். அதே சமயம் கடைசி இடம் பிடித்த குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசாக கிடைக்கும்.
- சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக ஹிகாரு நகமுரா வெற்றி பெற்றார்.
- வெற்றி பெற்ற பிறகு குகேஷின் ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த குகேஷ் முதல் போட்டியில் கார்ல்சனுடன் தோல்வியடைந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தார். இதனையடுத்து நகமுரா மற்றும் கருவானாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் அவர் வலுவாக மீண்டு வந்தார்.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு அவரது ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார். இதை பார்த்த குகேஷ், சிரிப்புடன் அதனை கடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தற்போது நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.
- 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார்.
- 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார்.
ஸ்டாவஞ்சர்:
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
இந்நிலையில் இந்த போட்டியில் 8-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் நகமுராவுடன் மோதினார். இந்த போட்டியில் குகேஷை வீழ்த்தி நகமுரா வெற்றி பெற்றார். 3-வது சுற்றில் ஏற்பட்ட தோல்விக்கு நகமுரா பழிவாங்கியுள்ளார். இந்த போட்டி கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது.
இன்னும் இரண்டு சுற்றுகள் மீதமுள்ள நிலையில், குகேஷ் 11.5 புள்ளிகளுடன் நகாமுராவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் அமெரிக்க ஜிஎம் கருவானா, எரிகைசியிடம் தோல்வியடைந்த போதிலும், 12.5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தார்.
கார்ல்சன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் எரிகைசி 10.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.
- 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா வீரரை எதிர்கொள்ள இருக்கிறார்.
பிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் தலா 8 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.
ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறுபவர் உலக சாம்பியனுடன் மோதுவார்.
14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 14-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த 17 வயதான கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கடைசி சுற்றில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார்.
கறுப்பு நிற காய்களுடன் குகேஷ் விளையாடினார். 71-வது காய் நகர்த்தலுக்கு பிறகு போட்டி 'டிரா'வில் முடிந்தது. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பேபியானோ காருனா (அமெரிக்கா)- இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) ஆகியோர் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.
இதனால் குகேஷ் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் மொத்தமுள்ள 14 சுற்றுகளில் குகேஷ் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றார். 8 ஆட்டங்களில் 'டிரா' செய்தார். ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வியை தழுவினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற புதிய வரலாற்றை குகேஷ் படைத்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையும் குகேஷ் பெற்றார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று இருந்தார்.
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக சீனாவை சேர்ந்த டிங்லிரனுடன் மோதுகிறார்.
உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாட உள்ள இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு கேரி காஸ்பரோயு (ரஷியா) 22-வது வயதில் உலக செஸ் சாம்பியன் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது. அதை குகேஷ் முறியடித்து உள்ளார்.
டிங்லிரன்-குகேஷ் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டிக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த ஆண்டு இறுதியில் போட்டி நடைபெறலாம் என்று தெரிகிறது.
மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 14-வது சுற்றில் அஜர்பைஜான் வீரர் நிஜாத் அப்சோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி பிரான்சை சேர்ந்த பிரவுசியாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது.
ஹிகாரு நகமுரா 8.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், இயன் நெபோம்னியாச்சி 8.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், பேபியானோ 8.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடத்தையும், விதித் குஜராத்தி 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும் பிடித்தனர். பிரவுசியா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அப்சோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா சகோதரி வைஷாலி கடைசி சுற்றில் ரஷிய வீராங்கனை கத்ரினா லாங்கோவை தோற்கடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பியும் கடைசி சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹம்பி 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், வைஷாலி 7.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்தனர். சீன வீராங்கனை டான்ஜோங்கி 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கு மோதுகிறார்.
- FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள்.
சென்னை :
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்ட குகேஷ், அதில் டிரா செய்து 14 சுற்றுகள் கொண்ட போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக விளையாடுவதற்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவரும் பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம்வீரர் என்ற வரலாற்றை வெறும் 17 வயதில் படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக, சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
Congratulations to @DGukesh on an incredible achievement! ?
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024
At just 17 years old, he's made history as the youngest-ever challenger in the #FIDECandidates and the first teenager to claim victory.
Best of luck in the battle ahead against Ding Liren for the World Chess… https://t.co/L2SEfj4yw6 pic.twitter.com/T70gM66PPX
- கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
- 17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்திருக்கிறது.
செஸ் போட்டியில் உலக சாம்பியனுடன் விளையாடப்போகும் வீரரைத் தேர்வு செய்யும் கேண்டிடேட்ஸ் செஸ் கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டின் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இளம் வயதில் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருப்பது வரலாற்று சிறப்புக்குரியது.
17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர்.
- நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும்.
சிங்கப்பூர்:
தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 12 சுற்றுகள் முடிந்துள்ளது. இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இதில் 3-வது மற்றும் 11-வது சுற்றில் குகேசும், முதலாவது மற்றும் 12-வது சுற்றில் லிரெனும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தது.
இந்த நிலையில் ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று 13-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடினார். பரபரப்பாக சென்ற இந்த சுற்று கடைசியில் டிராவில் முடிந்தது.
நாளை 14-வது சுற்று ஆட்டம் நடைபெறும். இந்த சுற்றும் ஒரு வேளை டிராவில் முடிந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
- 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
- சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குகேஷ் கலந்து கொண்டார். அப்போது 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
தான் குகேஷின் தீவிர ரசிகை எனக்கூறியபடி தன் கைகளால் செய்யப்பட்ட தலையணை ஒன்றை அவரிடம் காண்பித்து 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்கிறார். சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 20 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் குகேஷை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு சார்பாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், குகேஷ் ஆகியோர் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

நாளை தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு.
- செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குகேஷ், "எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்" என்று தெரிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு சென்னை கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடந்தது.
- குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
சென்னை:
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 சுற்று முடிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 7.5 புள்ளிகள் எடுத்து சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னையைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் உலக சாம்பியன் பட்டத்தை குறைந்த வயதில் வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன், இந்தப் பட்டத்தை வென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதையடுத்து, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குகேஷுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் செஸ் வீரர் குகேஷ் மற்றும் அவரது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி கவுரவித்தார்.
அப்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று தெரிவித்தார்.






