search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Maanila Congress"

    • விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.
    • மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழை தொடங்கி இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள வடிகால்களை முறையாக கண்காணித்து, சரி செய்து, தயார் நிலையில் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்துகொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும்.

    குறிப்பாக டெல்டா மாவட்டப்பகுதிகளில் காவிரி பாசனப் பகுதிகளில் வடிகால்கள் மண் எக்கல் அடித்து நீர் வடிவதற்கு வழியில்லாமல் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மண்ணை தூர்வாரி மழைநீர் வடிவதற்கான வகையில் ஏற்பாடு செய்து கொடுத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கடந்த கால பருவ மழையின் போது விவசாய நிலங்கள், பயிர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு முன்னேற்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே மழைக்காலப் பாதிப்பில் இருந்து விவசாய நிலங்களை, பயிர்களை, விவசாயிகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பணியாகும்.

    மேலும் தமிழக அரசு தொடர்ந்து மழைப்பெய்ய இருக்கின்ற வேளையில் மழை வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் மது கடைகளை படிப்படியாக மூடுவதற்கான சரியான தருணமாகும். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மதுவில்லா தமிழகத்தை செயல்படுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு எனது தலைமையில் ஒரு கோடி கையெழுத்து பெற பட்டது. அதை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு அதிகரித்து வருகிறது. இதற்கு டாஸ்மார்க், போதை பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கிறது.

    மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து உள்ளனர். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடும் விதத்தில் அக்டோபர் 2-ந்தேதி முதல் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    நிபா வைரஸ் கேரளாவில் அதிகரித்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையும் குமரி மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    கிராமங்கள், நகரங்களில் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். போதை பொருள் பழக்கத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். பள்ளி- கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு நன்னெறி வகுப்புகள் அவசியமாகும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஏப்ரல், மே மாதத்தில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது. சொத்து வரியை உயர்த்துவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கைவிட வேண்டும்.

    முதல்வரின் வெளிநாட்டு பயணம் ஆக்கபூர்வமான பயணமா என்பது கேள்விக்குறி தான். நம்மைவிட சிறிய மாநிலங்களானான கர்நாடகா, தெலுங்கானா முதல்வர்கள் வெளிநாட்டு பயணத்தின் முலம் அதிக முதலீடுகளை பெற்று வந்துள்ளனர். மீனவர்கள் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. பல ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காப்பீடு திட்டம், வீடு கட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டுதலுக்குரியதாகும். த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த பணி நடைபெறும். மாவட்ட, மாநில நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடித்து அக்டோபர் 20-ந் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இந்த உறுப்பினர் சேர்க்கை 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

    த.மா.கா. உறுப்பினரின் குரலும் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது மாநில அரசு தான். மத்திய அரசு என்று ஏமாற்றக்கூடாது. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது மதுக்கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு வருகின்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் தான் என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களிலேயே அதிக அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழகத்தில் தான் என்பது வேதனையான செயலாகும்.

    தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வாக்காளர்களை ஏமாற்றி வருகிறார்கள்.



    தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது பற்றி கேட்கிறீர்கள். புதிய கட்சிகளாக இருந்தாலும் சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி மக்கள் அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய கட்சிகளாக இருந்தாலும் புதிய கட்சிகளாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளை பொருத்தே வரும் காலங்களில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களை அழைத்து மாநாடு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. புதிராக உள்ளது. எல்லா கட்சிகளுக்குமே கூட்டணி மற்றும் ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதை வெளிப்படையாக கூற தயங்குகிறார்கள். அது கூட்டணி கட்சியின் மீது உள்ள மரியாதையா, பயமா என்று தெரியவில்லை. கோவையில் நடந்த ஜி.எஸ்.டி. மாநாட்டில் நிதி மந்திரி, தொழில் அதிபர்கள், வியாபாரிகளை அழைத்து கருத்துக்களை கேட்டார்.

    அந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான அரசியல் செய்ய வேண்டுமே தவிர காழ்ப்புணர்ச்சியுடன் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடுசெய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் எந்தெந்த மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சரியாக நிதி வழங்கி வருகிறது. நிறைவேற்றாத திட்டங்களுக்கு தான் நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி வழங்கவில்லை என்று கூறினால் நானே டெல்லியில் மத்திய அரசை வலியுறுத்த தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
    • கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு, சென்னை உட்பட மாநிலம் முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதியை 100 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி ஆணை வெளியிட்டிருப்பது நியாயமில்லை.

    சென்னையில் 8,900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10 சதவீதம் ஆகும்.

    எனவே தமிழக அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ள கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்தது முறையல்ல.
    • தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் உள்ளிட்ட 12 சங்கங்களின் பொருளாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்காக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்தது முறையல்ல.

    இந்நிலையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் உள்ளிட்ட 12 சங்கங்களின் பொருளாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை.
    • தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.

    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலேயே எதிர்கொள்வோம்.

    2026-ம் ஆண்டில் வளமான தமிழகத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வதிலும், தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.

    இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும். அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறி விட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதலமைச்சர் மக்கள் தேவையை நிறைவேற்ற தவறி விட்டார்.

    மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

    மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. எந்தெந்த மாநிலத்திற்கு நிதி தேவையோ அந்தந்த மாநிலத்திற்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல.
    • நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    மேலும் தமிழக முதலமைச்சர், புது டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.

    முதலமைச்சர் என்ற முறையில் ஏற்கனவே அறிவித்தபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை கேட்பது அவரது கடமை என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

    கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    ஹரிஹரன் ஏற்கனவே தமாகா மாநில மாணவரணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பதுவார்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் வெடிவிபத்தால் பலநூறு அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தை காக்கும் நோக்கில் குறைவான ஊதியத்தில் தங்கள் உயிரையே பணையம் வைத்து பட்டாசு தயார் செய்யும் ஆபத்தான தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

    பதுவார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய உயர்சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோன்ற வெடி விபத்துகள் மீண்டும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.
    • தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்ருக்கு ரூ.130-ம் அறிவித்திருப்பது போதுமானதல்ல. அதாவது இயற்கைச் சீற்றம், பொருளாதாரமின்மை, உழவுக்கான கூலி, விதை நெல் விலை, நடவுக்கூலி, அறுவடைக்கூலி, உரம் போன்ற பல்வேறு காரணங்களால் நெல் விவசாயத்தில் முதலீடு செய்த பணம் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

    அது மட்டுமல்ல நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்றும் கொள்முதல் செய்திட அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தி.மு.க தேர்தல் நேரத்தில் அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்பதை மூன்றாண்டு கடந்தும் நடைமுறைப்படுத்த முன்வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2025-2026-ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும்.

    எனவே தமிழக அரசு 2024-2025 நடப்பாண்டிலேயே குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும்.

    மேலும் தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களின் தண்ணீர் தேவை மிக மிக முக்கியமான ஒன்று.

    மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சியானது தமிழக டெல்டா விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும்.

    அப்படி இருக்கும் போது கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சரின் செயல்பாடானது நடுநிலையானதாக, விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    மேலும் கர்நாடகம்- தமிழ்நாடு ஆகிய இரு மாநில நலனை, உறவை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வரும் நாட்களில் மேகதாது அணை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை தவிர்க்க வேண்டும்.

    எனவே மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமை, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியாயம் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
    • எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் 23 இந்தியா கூட்டணிகள் சேர்த்து பெற முடியாத மத்திய ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி தனிப்பெரும்பான்மை என கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைந்துள்ளது. மத்திய அரசு அனைத்து மக்களின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது.

    வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. எங்களால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை பெற முடியவில்லை என்றாலும் கூட, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பெற்றிருக்கிறோம். அந்த சதவீதத்தின் அடிப்படையிலே பா.ஜனதா தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை நான் பாராட்டுகிறேன். இந்த சதவீதம் என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதனை நோக்கியே எங்களது பயணம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
    • வாகன ஓட்டுநர்களிடமும், பொதுமக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு பஸ்களாலும், தனியார் பஸ்களாலும் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று உயிரிழப்புகள், படுகாயமடைதல் ஏற்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக அரசுப்பஸ்சில் மக்கள் பயணம் செய்யும் போது பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பஸ்சை இயக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு பஸ்களில் உள்ள குறைகள் சரிசெய்யப்படாததால் தான் விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    மிக முக்கியமாக போக்குவரத்தில் உள்ள விதிமுறைகளை அரசுப் பஸ், தனியார் பஸ், கல்வி நிலையங்களுக்கான பஸ் என அனைத்து வகையான பஸ் ஓட்டுநர்களும் முறையாக, சரியாக கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்து வகையான பஸ்களும் இயக்கப்படும் பாதைகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டுநர்களிடமும், பொதுமக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×