என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சோழர்கால ஆட்சியின் பெருமையை பிரதமர் மோடியின் வருகை நாட்டுக்கு பறைசாற்றும்: ஜி.கே.வாசன்
    X

    சோழர்கால ஆட்சியின் பெருமையை பிரதமர் மோடியின் வருகை நாட்டுக்கு பறைசாற்றும்: ஜி.கே.வாசன்

    • முதலாம் ராஜேந்திர சோழன் வரலாறு போற்றுதலுக்குரியது.
    • பாரதப் பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதலாம் ராஜேந்திர சோழன் வரலாறு போற்றுதலுக்குரியது. சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான ராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான ராஜேந்திர சோழன் தீர்க்கதரிசி.

    தமிழ்நாட்டு மக்கள் நலன் காக்க, தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல காரணகர்த்தாவாக விளங்கும் பாரதப் பிரதமர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை புரிவது மிகவும் பொருத்தமானது.

    தமிழ்நாட்டிற்கு பாரதப் பிரதமரின் வருகையானது கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று பெருமைக்கும், தமிழகத்தின் பண்டையக் கால மன்னர்களின் புகழுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தமிழ்நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கும் துணை நிற்கும். ராஜேந்திர சோழ மன்னரின் வரலாற்றை இன்றும் நாம் அறிந்து இன்புறுவதற்கு ஏற்ப அவரைப் போற்றி புகழ் பாடுவதற்காக பாரதப் பிரதமர் வருவதை தஞ்சை தரணி மட்டுமல்ல தமிழ்நாடே வரவேற்று, சோழர் காலத்து ஆட்சியை, ஆன்மிகத்தை பறைசாற்றுவோம் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×