என் மலர்
நீங்கள் தேடியது "புகைப்பிடித்தல்"
- சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
- தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகரம் முதல் குக்கிராமம் வரை சிறுவர் முதல் முதியோர் வரை அனைவரும் கடந்து செல்லும் பொது இடங்களில், சாலையோரங்களில், இருட்டான பகுதிகளில் புகைப்பிடிப்பதாலும், மது அருந்துவதாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் உடல்ரீதியாக மன ரீதியாக பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பத்தினரும் உடல்ரீதியாக மன ரீதியாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
இச்சூழலில் பொது இடத்தில் புகைப்பிடிக்கவும், மது அருந்தவும் தடை இருந்தும் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.
எனவே எவரும் பொது இடங்களில் புகைப்பிடிக்காமல், மது அருந்தாமல் இருக்க தமிழக அரசு நடைமுறையில் உள்ள சட்டத்தை நாள்தோறும் முறையாக சரியாக கடைபிடித்து பொதுமக்களின் உடல்நலனைக் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது.
- பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் கர்நாடக அரசு இயற்றியுள்ள இந்தச் சட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் முன்னோடி மாநிலம் என்று கூறிக்கொள்ளும் தமிழகம், பல நூறு முறை வலியுறுத்தியும் கூட இத்தகைய சட்டங்களை இயற்ற மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
உலகில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் சில லட்சம் பேருக்கு மட்டும் தான் அப்பழக்கம் உள்ளது. அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டும் தான் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள்.
அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் தான் இந்தியாவில் புகைக்க தடை விதிப்பது அவசியம் ஆகும்.
தேசிய அளவில் புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டம் கடந்த 2021-ம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டு விட்ட போதிலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழக அரசோ பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தையே இன்று வரை முறையாக செயல்படுத்த மறுக்கிறது. அதனால், பெண்களும், குழந்தைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், புகைப்பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்தும் சட்டத்தை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
இந்த வரம்பை ஆண்டுக்கு ஒரு வயது வீதம் உயர்த்துவதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டை புகைப்பிடிக்கும் வழக்கமில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டு விட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். நாடித்துடிப்பும் சீராகும்.
* புகைப்பிடிப்பதால் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சீரற்ற நிலை உருவாகும். அந்த பழக்கத்தை முழுமையாக கைவிடும் பட்சத்தில் 8 மணி நேரத்திலேயே ஆக்சிஜன் அளவு இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். ரத்தத்தில் இருக்கும் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு அளவும் குறைய தொடங்கிவிடும்.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்துவிடுபட்ட 48 மணி நேரத்திற்குள் உடலில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிவிடும். நுரையீரல் சீராக செயல்பட தொடங்கி சளித்தொல்லை குறையும். சாப்பிடும் உணவின் சுவையிலும், வாசனையிலும் மாற்றத்தை உணரலாம்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். அதற்கான சிகிச்சைகளை தொடரும்போது படிப்படியாக சுவாச பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் ஒட்டுமொத்தமாக ரத்த ஓட்டம் சீராகும்.
* மூன்று முதல் ஒன்பது மாதங்களில் நுரையீரலின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும். சளி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்.
* ஓராண்டு கழித்து புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும். பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.






