search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carlsen"

    • உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
    • பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகு:

    பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது.

    இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியின் 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. டைபிரேக்கரின் முதல் ஆட்டத்தில் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் டிரா ஆனதால் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    இந்நிலையில் செஸ் உலக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா 29-வது இடத்தில் இருந்து 20-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர்களான குகேஷ் 8-வது இடத்திலும், விஸ்வநாதன் ஆனந்த் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    • உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2 சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடந்தது.
    • சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.

    பாகு:

    பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.

    பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை. 11-வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக 'வெட்டு' கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.

    இந்நிலையில் டைபிரேக்கர் ஆட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.

    இதன் மூலம் ரைபிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.

    • நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்
    • 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம், ஆனந்த் தோல்வி அடைந்தார்

    ஒஸ்லோ:

    உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 5-வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றின் 50வது நகரில் கார்ல் சென்னை விழ்த்தி ஆனந்த் வெற்றி பெற்றார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து அவர் முதலிடத்தில் உள்ளார்.

    கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். வெஸ்லி சோ மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

    முன்னதாக இந்த தொடரின் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த், 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.  

    நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென், பாபியானோ காருனா இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். #WorldChessChampionship #Carlsen #Caruana
    லண்டன்:

    நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 12 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு மகுடம் கிட்டும்.

    முதல் 2 சுற்றுகள் டிரா ஆன நிலையில் 3-வது சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இந்த ஆட்டம் 4¼ மணி நேரம் நீடித்தது. இந்த முடிவு திருப்தி அளித்தாலும், தனது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்று கார்ல்சென் கூறினார். #WorldChessChampionship #Carlsen #Caruana
    ×