search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Praggnanandhaa"

    • தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.
    • அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

    சர்வதேச செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக 3 இந்திய வீரர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி நான்காம் இடத்திலும், தமிழக வீரர்களாக குகேஷ் ஏழாவது இடத்திலும் பிரக்ஞானந்தா எட்டாம் இடத்திலும் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா தனது மதிப்பீட்டை 10 புள்ளிகள் அதிகரித்து முதல் முறையாக உலகின் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

    தற்போது முதல் 11 இடங்களில் 4 இந்தியர்களும், 22 இடங்களில் 5 இந்தியர்களும், 29 இடங்களில் 6 இந்தியர்களும், 37 இடங்களில் 7 இந்தியர்களும், 46 இடங்களில் 8 பேரும் உள்ளனர்.

    அர்ஜூன் மற்றும் அரவிந்த் இருவரும் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

    • நார்வே செஸ் தொடரில் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இந்தத் தொடரில் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.

    நார்வே:

    நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் கார்ல்சன் பாபியானோவை வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 54 லட்சமும், நகமுராவுக்கு ரூ.27 லட்சமும், பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல், மகளிர் பிரிவில் சீனாவின் ஜுவெஞுன் முதலிடம் பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் வைஷாலி 4வது இடமும், கோனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்.

    நார்வே செஸ் தொடரில் 3-வது பிடித்ததற்கு பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    • மாக்னஸ் கார்ல்சென், காருனாவை தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார்.
    • பிரக்ஞானந்தாவை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சென்னை சாம்பியன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல்முறையாக உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள மாக்னஸ் கார்ல்சென், காருனாவை தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார்.

    உலகின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் சென்னை சாம்பியன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா.
    • மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்தியன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். கருவானா கேண்டிடேட்ஸ் சாம்பியனும் ஆவார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், ஃபாபியோனாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார். செஸ் உலகமே இவரின் திறமையை பார்த்து வியக்கிறது என கூறியுள்ளார்.


    • 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
    • மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் வைஷாலி வென்றார்.

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    தொடர்ந்து, மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.

    இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார்.

    நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவுக்கும், அவரது சகோதரி வைஷாலிக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.

    அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
    • தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.

    இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.


    இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.

    நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
    • கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

    இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    • சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
    • பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். அவரது 7-வது டிராவாகும்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.

    11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். பேபியானோ 6 புள்ளியுடன் 4-வது இடத்திலும், அலிசேரா பிரவுசியா (பிரான்ஸ்) 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்) 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி. பல்கேரிய வீராங்கனை நூர்சிபால் சலிமோவை தோற்கடித்தார். இதன் மலம் அவர் 5.5 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான சென்னையை சேர்ந்தவருமான வைஷாலி 11-வது சுற்றில் ரஷியாவை அலெக்சான்ட்ரா சோரியாச்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 6 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

    • பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது.

    இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் 4 முதல் 6-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    9-வது ரவுண்டு முடிவில் ஹம்பி 4 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், வைஷாலி 2.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    • சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார்.
    • 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 7-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை சந்தித்தார். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் எதிர்பாராதவிதமாக 40-வது நகர்த்தலுக்கு பிறகு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த அவர் 2-வது இடத்துக்கு பின்தங்கினார்.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    7 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா ) 4.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். குகேஷ், பேபியானோ , பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். விதித் குஜராத்தி 3 .5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை லீ டிங்ஜிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி உக்ரைனை சேர்ந்த அன்னா முசிச்சுக்குடன் டிரா செய்தார்.

    6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி, ஹம்பி தலா 2.5 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களில் உள்ளனர்.

    • 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.
    • 6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 6-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் டிரா செய்தார். சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, அஜர் பைஜானை சேர்ந்த நிஜாத் அபாசோவ்வை எதிர் கொணடார். அதில் 45-வது காய் நகர்த்தலுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

    அதே போல் மற்றொரு இந்திய வீரரான விதித் குஜராத்தி, 6-வது சுற்றில் பிரான்சின் அலிரேசா பிரோஸ்ஜாவை தோற்கடித்தார்.

    6 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி , குகேஷ் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 3.5 புள்ளியுடன் 3 முதல் 4-வது இடத்திலும், விதித் குஜராத்தி 3 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய 6-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.

    பெண்கள் பிரிவில் 6-வது ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 7 முதல் 8-வது இடத்திலும் உள்ளனர்.

    • பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசிய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் நடப்பு உலகச் சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தியதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதன்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இளம் வயதிலேயே சதுரங்க உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கி அதில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா அவர்கள், உலகளவில் அடுத்தடுத்து பல்வேறு வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    ×