என் மலர்
நீங்கள் தேடியது "Praggnanandhaa"
- மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அர்ஜூன் எரிகைசி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
- முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார்.
நியூயார்க்:
ரூ.1.21 கோடி பரிசு தொகைக்கான ஜூலியஸ் பேர் ஜெனரேசன் கோப்பை ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசி கால்இறுதியில் அமெரிக்காவை சேர்ந்த 15 வயதான கிறிஸ்டோபர் யோவுடன் மோதினார்.
4 விரைவு ஆட்டங்களில் இருவரும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றனர். இதனால் வெற்றியை தீர்மானிக்க டை பிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் டிரா செய்தார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 3.5-2.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
அர்ஜூன் எரிகைசி அரை இறுதியில் வியட் நாம் நாட்டை சேர்ந்த லயம் குவாங்லியுடன் மோதுகிறார்.
குவாங்லியம் கால் இறுதியில் 2.5-1.5 என்ற பள்ளிக்கணக்கில் அமெரிக்காவின் ஹன்ஸ் நீமனை தோற்கடித்தார்.
சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா கால்இறுதியில் ஜெர்மனியின் வின்சென்ட் ஜெய்மரை எதிர் கொண்டார். இதில் பிரக்ஞானந்தா 1-3 என்ற கணக்கில் தோற்றார்.
முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவிய பிரக்ஞானந்தா அடுத்த இரு ஆட்டங்களையும் டிரா செய்தார். கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டை பிரேக்கருக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனால் கடைசி ஆட்டத்தில் அவர் 42-வது நககர்த்தலின் போது தோற்றார்.
வின்சென்ட் கெய்மர் அரை இறுதியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல் செனை (நார்வே) சந்திக்கிறார். கார்ல்சென் கால் இறுதியில் அமெரிக்காவின் அரோனியனை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
- முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது.
- சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தாலிக்கு எதிரான நேற்றைய 4-வது சுற்று ஆட்டத்தில் 'டிரா' செய்தார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-
முதல் போட்டியில் எனது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 2-வது போட்டியில் வெற்றி பெற்றாலும் நான் ஒழுங்காக விளையாடவில்லை. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் சரியாக விளையாடினால் பதக்கத்தை வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த மாதம் நடந்த மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட ஜாம்பவான்களை வீழ்த்தி பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்தார்.
- நார்வே செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் பிரக்ஞானந்தா 49-வது நகர்த்தலில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னை:
நார்வேயில் நடைபெற்ற குரூப் ஏ ஓபன் செஸ் போட்டித் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம்வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் 9 சுற்றுக்கள் நடந்த இந்தப் போட்டியில் 6 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் டிரா என 7.5 புள்ளிகள் பெற்று பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும், புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் நேற்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு நான் தலைவர் ஆனதில் இருந்தே என்னைப்பற்றி பல யூகங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை, தமிழக தலைமை மாற்றம் என்கிற அந்த யூகத்துக்கு மிகச்சரியான விளக்கத்தை அளித்து எனது பலத்துக்கு மேலும் பலம் சேர்த்த தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்திப்பதற்கு தான். அவரது வருகை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெறுவதற்கு ஊக்கமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஆலோசனை சொல்லும் வாய்ப்பாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனைப் படைத்தார்.
பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இளம்வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பாரட்டுக்கள் தெரிவித்தார். இது தொடர்பாக ராஜ்பவனின் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்ஞானந்தாவுக்கு கவர்னர் நினைவு பரிசு அளித்தார். மற்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து பல சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் ஆகியோர் உடன் இருந்தனர். கவர்னரிடம் வாழ்த்துகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்தான். #PragGnanandhaa
சென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா குறைந்த வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று முத்திரை பதித்துள்ளார்.
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உலகின் 2-வது வீரரான அவரை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவை அவர் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சாதனையை விட சிறுவனின் கனவை ஊக்குவித்த தந்தையின் செயல் பாராட்டுக்குரியது என்று ரமேஷ் பாபுவிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். அதோடு மாணவன் பிரக் ஞானந்தாவுக்கு முழுமையான ஆதரவையும் அளிக்க தயாராக இருப்பதாக அவரிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.
இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் பாபு தனது மகனை பார்க்க அழைத்து வருவதாகவும் கமல்ஹாசனிடம் தெரிவித்து இருக்கிறார். #ChessGrandmaster #Praggnanandhaa #Kamalhaasan #MakkalNeedhiMaiam
