என் மலர்
நீங்கள் தேடியது "World Cup chess"
- 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நடந்தது.
- ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார்.
கோவா:
11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் 4-வது சுற்றில் அதிவேகமாக காய் நகர்த்தும் டைபிரேக்கர் நேற்று நடந்தது. ரஷியாவின் டேனில் துபோவுடன் மோதிய இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தை டிரா செய்தார். அடுத்த ஆட்டத்தில் 53-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். முடிவில் பிரக்ஞானந்தா 1.5-2.5 புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார். கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்த பிரக்ஞானந்தா இந்த தடவை 4-வது சுற்றுடன் நடையை கட்டியிருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி டைபிரேக்கரில் 2 ஆட்டங்களிலும் ஹங்கேரியின் பீட்டர் லெகோவை பதம் பார்த்து (3-1) கால்இறுதிக்கு முந்தைய 5-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதேபோல் இந்தியாவின் ஹரிகிருஷ்ணா சுவீடனின் நில்ஸ் கிரான்ட்லிசை வீழ்த்தினார்.
- 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது.
- பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள்.
பனாஜி:
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
4-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ரஷிய வீரர் டேனியல் டுபோவுடனும், அர்ஜூன் எரிகைசி அங் கேரி வீரர் பீட்டர் லிகோவு டனும், பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீ டனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகு வாங்குடனும் மோதினார்கள். 5 வீரர்களும் முதல ஆட்டத்தில் 'டிரா'செய்தனர்.
நேற்றைய 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகியோர் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பிரணவ், கார்த்திக், வெங்கட்ராமன் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் தோற்று வெளியேறினார்கள்.
பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, அரி கிருஷ்ணா ஆகிய 3 பேரும் இன்றைய டை பிரேக்கரில் மோதுகிறார்கள். இதில் வெற்றி பெற்று 5-வது சுற்றுக்கு நுழைவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
- தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார்.
- இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார்.
கோவா:
'பிடே' 11-வது உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் 2 ஆட்டங்கள் இடம் பெறும். எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், விதித் குஜராத்தி 3-வது சுற்றுடன் நடையை கட்டினர்.
இந்த நிலையில் போட்டியின் 4-வது சுற்றில் முதல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஒரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, ரஷியாவின் டேனில் துபோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. 41-வது நகர்த்தலில் டிரா கண்டார். இவர்கள் இருவரும் இன்று மீண்டும் மோத உள்ளனர். இதில் வெற்றி பெறும் வீரர் 5-வது சுற்றுக்கு முன்னேறுவார். இதிலும் சமநிலை நீடித்தால் ஆட்டம் டைபிரேக்கருக்கு நகரும்.
மற்றொரு இந்திய முன்னணி வீரர் அர்ஜூன் எரிகைசி, ஹங்கேரி கிராண்ட்மாஸ்டர் பீட்டர் லெகோவை சந்தித்தார். 20-வது நகர்த்தலிலேயே இருவரும் டிராவுக்கு ஒப்புக் கொண்டனர். இதே போல் கார்த்திக் வெங்கட்ராமன், பிரணவ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர். இன்று 4-வது சுற்றில் 2-வது ஆட்டம் நடைபெறும்.
- 11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
- நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
பனாஜி:
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம் பெற்றனர். 2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, பிரணவ், அரி கிருஷ்ணா, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 5 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தியான் கோஷ் ஆகிய 5 வீரர்களும் 3-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.
இன்று ஓய்வு நாளாகும். 4-வது சுற்று ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று முதல் ஆட்டமும், 12-ந்தேதி 2-வது ஆட்டமும், தேவைப்பட்டால் 13-ந்தேதி டை பிரேக்கரும் நடைபெறும். இந்த சுற்றில் மொத்தம் 32 வீரர்கள் ஆடுவார்கள்.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 4-வது சுற்றில் ரஷிய வீரர் டேனியல் டுபோவுடன் மோதுகிறார். அர்ஜூன் எரிகைசி அங்கேரியை சேர்ந்த பீட்டர் லிகோவை சந்திக்கிறார்.
பிரணவ் உஸ்பெகிஸ் தான் வீரர் நோடிர் பெக்குடனும், அரிகிருஷ்ணா சுவீடனை சேர்ந்த நில்ஸ் கிராண்டிலியசுடனும், கார்த்திக் வெங்கட்ராமன் வியட்நாம் வீரர் லீம் லெகுவாங்குடனும் மோதுகிறார்கள்.
- அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.
நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.
மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
- உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் திவ்யா தேஷ்முக்- கோனெரு ஹம்பி மோதுகின்றனர்.
- இதன்மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது.
பதுமி:
'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, சீனாவின் லீ டிங்ஜி இடையிலான அரைஇறுதியின் முதல் இரு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இருவரும் தலா 1 புள்ளியுடன் சமநிலை வகித்தனர். இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் சுற்று நேற்று நடந்தது.
டைபிரேக்கரிலும் முதல் இரு ஆட்டங்கள் 'டிரா' ஆனது. அடுத்த இரு ஆட்டங்களில் இருவரும் தலா ஒன்றில் வெற்றி பெற்றனர். இதனால் மேலும் இரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இதன் முதலாவது ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கோனெரு ஹம்பி 70-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் 2-வது ஆட்டத்தில் கருப்புநிற காய்களுடன் ஆடிய ஹம்பி எதிராளியை மிரட்டினார். 33-வது நகர்த்தலில் ராஜா, ராணி இரண்டுக்கும் குதிரை மூலம் 'செக்' வைத்தார். அத்துடன் தோல்வியை லீ டிங்ஜி ஒப்புக் கொண்டார்.
மொத்தம் 8 ஆட்டங்கள் நீடித்த இந்த அரைஇறுதியில் கோனெரு ஹம்பி 5-3 என்ற புள்ளி கணக்கில் டிங்ஜியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தார். 38 வயதான ஹம்பி உலக செஸ் போட்டியில் இறுதிப்போட்டியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். மேலும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
இறுதி ஆட்டத்தில் கோனெரு ஹம்பி, சக நாட்டவரான திவ்யா தேஷ்முக்கை சந்திக்கிறார். இதன் மூலம் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா முதல்முறையாக வெல்வது உறுதியாகி விட்டது. இறுதிசுற்று இரு ஆட்டங்களை கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் நாளை நடக்கிறது.
- அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும்.
- போட்டி நடைபெறும் நகரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
பீடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், 2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என பீடே அறிவித்துள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை உலக கோப்பை செஸ் போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் பீடே விளக்கம் அளித்துள்ளது.
- பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
- இரு ஆட்டங்களும் ‘டிரா’ ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது.
பாகு:
உலக கோப்பை செஸ் போட்டி தொடர் அஜர்பை ஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78-வது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.
அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47-வது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது.
இரு ஆட்டங்களும் 'டிரா' ஆனதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம் இன்று நடக்கிறது.
மற்றொரு அரை இறுதியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் 1.5-0.5 என்ற கணக்கில் நிஜாத் அபா சோவை (அஜர்பைஜான்) வீழ்த்தினார்.
- உலக கோப்பை செஸ் போட்டிக்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.
- இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சென் விளையாட உள்ளனர்.
உலக கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வருகிறது. இதற்கான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் மோதுகின்றனர். இந்த போட்டியை இந்திய மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கினறனர்.
இந்நிலையில் பிரக்ஞானந்தா கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். தற்போது பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் அடுத்த ஆண்டு உலகின் டாப் 8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் கேண்டிடேட் செஸ் போட்டியில் விளையாட உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் வெல்லும் பட்சத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனுடன் மோதும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெறுவார்.
- ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
- அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும்.
பாகு:
சென்னையை சேர்ந்த இளம்கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டி 2 ஆட்டங்களை கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.
வெள்ளைநிற காய்களுடன் விளையாடுவது கார்ல்செனுக்கு சாதகமானது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. 1 மணி நேரம் நடந்த இந்தப்போட்டி 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு 'டிரா' ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி நடக்கிறது. டைபிரேக்கர் 2 ஆட்டங்களை கொண்டது.
ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும்.
இதில் இருவருக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 வினாடிகள் கூடுதலாக கிடைக்கும்.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்செனை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பாரா? என்று இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைப்பார்.
- உலகக் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, கார்ல்சென் மோதிய 2 சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இன்று டைபிரேக்கர் நடந்தது.
- சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.91 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்.
பாகு:
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் வெற்றி பெறும் வீரர் உலக சாம்பியன் ஆகிவிடுவார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது.
பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். சாதுர்யமாக காய்களை நகர்த்தி அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு எதிராளியிடம் இருந்து பெரிய அளவில் நெருக்கடி எதுவும் வரவில்லை. 11-வது நகர்த்தலுக்குள் ராணியையும், இரு குதிரையையும் இருவரும் பரஸ்பரமாக 'வெட்டு' கொடுத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய இன்று டைபிரேக்கர் கடைபிடிக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு 'ரேபிட்' முறையில் நடக்கும் டைபிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் ஒவ்வொரு வீரருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும். அத்துடன் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 10 வினாடி அதிகரிக்கப்படும். இதிலும் சமநிலை தொடர்ந்தால் தலா 10 நிமிடங்கள் கொண்ட மேலும் இரு ஆட்டங்களில் மோதுவார்கள். அதன் பிறகு 5 நிமிடம் கொண்ட ஆட்டங்கள், 3 நிமிடம் ஆட்டம் என்று முடிவு கிடைக்கும் வரை நீடிக்கும்.
இந்நிலையில் டைபிரேக்கர் ஆட்டத்தின் முதல் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.
இதன் மூலம் ரைபிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
- இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார்.
- கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர். இறுதிப்போட்டி இரு கிளாசிக்கல் ஆட்டத்தை கொண்டது. இறுதிப்போட்டியின் முதலாவது சுற்று 35-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
இவ்விரு வீரர்களுக்கு இடையேயான இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று இன்று மாலை தொடங்கியது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதனையடுத்து நடந்த 2-வது சுற்று டிரா ஆனது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், ரேபிட் முறையில் 2 போட்டிகள் நடைபெறும் சூழல் இருந்தது. ஆனால் 2-வது சுற்று ஆட்டத்திலும் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த உலக கோப்பை செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சனுக்கு இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கடும் சவால் விடுத்திருந்தார்.
முதல் டைபிரேக்கர் சுற்றில் முதல் 10 நிமிடங்கள் சிறப்பாக விளையாடிய அவர் கடைசி 10 நிமிடத்தில் தடுமாறினார்.இதனை சுதாரித்து கொண்ட கார்ல்சன் அவரை வீழ்த்தினார்.
இதற்கு முன் மூன்று முறை பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். முதன்முறை 2016-ல் தோற்கடித்த பொழுது 10 வயது வீரராக இருந்தார். இதனைத் தொடர்ந்து, 2018-ல் நடைபெற்ற விரைவான செஸ் போட்டியில் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார். கடந்த 2022-லும், பிரக்ஞானந்தா மூன்றாவது முறையாக கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.






