search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pragnananda"

    • 13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
    • மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 13-வது சுற்று நேற்று நடந்தது

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் பிரான்ஸ் வீரர் அலிரேசா பிரவுசியாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த ஆட்டத்தில் 63-வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அவர் பெற்ற 5-வது வெற்றியாகும்.

    பிரவுசியாவிடம் ஏற்க னவே தோற்று இருந்தார். இதற்கு குகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த வெற்றி மூலம் அவர் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 13-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோவுடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா இந்த சுற்றில் தோல்வியை தழுவினார். அவருக்கு ஏற்பட்ட 3-வது தோல்வியாகும்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி அஜர்பை ஜான் வீரர் நிஜாத் அப்சோ வாவிடம் டிரா செய்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் இயன் நெபோம்னியாச்சி ( ரஷியா)- ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) மோதி னார்கள். இந்த ஆட்டமும் டிரா ஆனது.

    13 சுற்றுகள் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி, ஹிகாரு நகமுரா , பேபி யானோ ஆகிய 3 வீரர்கள் தலா 8 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    பிரக்ஞானந்தா 6 புள்ளி களுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5. 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரவுசியா (4.5 புள்ளி) 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் ( 3.5 ) கடைசி இடத்திலும் உள்ளனர்.

    இன்று கடைசி சுற்று ஆட்டம் நடக்கிறது. குகேஷ் இந்த ரவுண்டில் ஹிகாரு நகமுராவுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் பிரக்ஞானந்தா-நிஜாத் அப்சோவ், விதித் குஜராத்தி, பிரவுசியா இயன் நெ போம்னியாச்சி, பேபியானோ மோதுகிறார்கள் .

    பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி சீனாவை சேர்ந்த டிங்ஜி லீயை 13-வது சுற்றில் தோற்கடித்தார். மற்றொரு இந்தியரான ஹம்பி உக்ரைன் வீராங்கணை அனாவுடன் டிரா செய்தார்.

    வைஷாலி, ஹம்பி ஆகியோர் தலா 6.5 புள்ளி களுடன் 3 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

    • மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார்.
    • பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடை பெற்று வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 5-வது ரவுண்டு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 87-வது நகர்த்தலுக்கு பிறகு கடும் போராட்டத்துக்கு பிறகு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு கிட்டத்தட்ட 6 மணி நேரம் தேவைப்பட்டது.

    மற்றொரு சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா ரஷியாவை சேர்ந்த இயன் நெபோம்னியாச்சியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இன்னொரு இந்திய வீரர் விதித் குஜாராத்தி அமெரிக்காவின் பேபியானோவுடன் மோதிய போட்டியும் டிரா ஆனது.

    5 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 2.5 புள்ளியுடன் 4 முதல் 5-வது இடத்திலும், விதித் குஜாராத்தி 2 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் வைஷாலி, ஹம்பி ஆகியோர் எதிர் அணி வீராங்கனைகளுடன் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது. 5 ரவுண்டு முடிவில் வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களிலும், ஹம்பி 2 புள்ளிகளுடன் 6 முதல் 8-வது இடங்களிலும் உள்ளனர்.

    • 'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மின்சார காரை பரிசாக வழங்கினார்.
    • கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

    உலகக் கோப்பை 'செஸ்' போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடந்தது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

    'செஸ்' வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தாவை 'எக்ஸ்' வலைதளத்தில் பாராட்டினார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசு வழங்கப்போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று'செஸ்' சாதனை வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்து 'மஹிந்திரா XUV 400' மின்சார காரை மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசாக வழங்கினார். அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    கார் பரிசு வழங்கிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு பிரக்ஞானந்தா குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    • கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
    • தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

    சென்னை:

    கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.

    இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.

    பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.

    இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.

    1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

    ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)

    பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).

    • வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
    • உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்.

    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    இந்நிலையில், வைஷாலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள் தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள்.

    உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    • இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
    • தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.


    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
    • இன்று நடந்த டைபிரேக்கரில் நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்சென் வென்றார்.

    சென்னை:

    பிடே உலக கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

    இந்த இறுதிப்போட்டியின் முடிவில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், உலக கோப்பை செஸ் போட்டியில் 2-வது இடம்பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரக்ஞானந்தா, உங்களின் பிரமிக்கவைக்கும் புத்திக்கூர்மை மிக்க ஆட்டங்களால், ஒவ்வோர் இந்தியரின் இதயத்தையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நீங்கள் மறுமலர்ச்சி தன்னம்பிக்கை இந்தியாவின் பிரதிபலிப்பு. இந்த தேசம் உங்களை மிகவும் நேசிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா.
    • உங்களது வெற்றி வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்.

    'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனும் (நார்வே) மோதினர்.

    இந்த இறுதிப்போட்டியின் முடிவில், முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், செஸ் உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2023ம் ஆண்டின் செஸ் உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னையின் பெரும் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உலகின் நம்பர் 2 வீரரான நகமுரா மற்றும் நம்பர் 3 வீரரான கருவானாவை தோற்கடித்து, இறுதிப் போட்டிக்கான பயணம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

    இறுதி முடிவு இருந்தபோதிலும், உங்கள் சாதனை 140 கோடி கனவுகளுடன் எதிரொலித்தது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது பிரக்ஞானந்தா!

    நீங்கள் பெற்ற வெள்ளிப் பதக்கம் மற்றும் செஸ் உலகக்கோப்பை போட்டிக்கான நுழைவு ஆகியவை வரவிருக்கும் தலைமுறையினரை ஊக்குவிக்கும் மைல்கற்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • ஜொலித்துக் கொண்டே இருங்கள் என்றார்.

    உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

    அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.

    அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.

    இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    செஸ் உலகக்கோப்பை போட்டியில் தங்களின் அபாரமான செயல்திறனுக்காக தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கும் எனது வாழ்த்துக்கள்.

    ஜொலித்துக் கொண்டே இருங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்று போட்டி நடைபெற்றது.
    • இதில் பிரக்ஞானந்தா 76-வது காய் நகர்த்தலில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.

    சென்னை:

    186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    11 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியா 2-வது அணி உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியது.

    10-வது சுற்று ஆட்டத்தில் இந்தியா 2 அணியில் உள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா உஸ்பெகிஸ்தான் வீரர் சிந்தரோவ் ஜாவோகிருடன் மோதினார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 77-வது நகர்த்தலில் சிந்தரோவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    • 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
    • கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார். 


    இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×