search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiebreaker"

    • ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
    • அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும்.

    பாகு:

    சென்னையை சேர்ந்த இளம்கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சென் மோதும் பீடே உலக கோப்பை செஸ் இறுதிப்போட்டி அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது.

    இறுதிப்போட்டி 2 ஆட்டங்களை கொண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டி 'டிரா' ஆனது. 35-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. பிரக்ஞானந்தா-கார்ல் சென் மோதிய 2-வது கிளாசிக்கல் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

    வெள்ளைநிற காய்களுடன் விளையாடுவது கார்ல்செனுக்கு சாதகமானது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த ஆட்டமும் 'டிரா' ஆனது. 1 மணி நேரம் நடந்த இந்தப்போட்டி 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு 'டிரா' ஆனது.

    இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு டைபிரேக்கர் இன்று நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி நடக்கிறது. டைபிரேக்கர் 2 ஆட்டங்களை கொண்டது.

    ரேப்பிட் வகையிலான டைபிரேக்கர் ஆட்டத்தில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். அதுபோக ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் கொடுக்கப்படும். அவ்வாறு 2 டைபிரேக்கர் ஆட்டங்களும் 'டிரா' ஆகும் பட்சத்தில் அடுத்து 2 ஆட்டங்கள் விளையாடப்படும்.

    இதில் இருவருக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 3 வினாடிகள் கூடுதலாக கிடைக்கும்.

    தமிழக வீரர் பிரக்ஞானந்தா நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்செனை வீழ்த்தி புதிய வரலாறு படைப்பாரா? என்று இந்தியா முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு நுழைந்த ஒரே இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்று இருந்தார். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைப்பார்.

    ×