என் மலர்
நீங்கள் தேடியது "உலக செஸ் போட்டி"
- அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
- டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோல்வி.
11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.
2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.
3-வது சுற்றின் 2-வது ஆட்டத்தின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
அர்ஜூன் எரிகைசி உஸ்பெகிஸ்தான் வீரர் வோசிடாவை முதல் ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வென்றார். 2-வது ஆட்டத்தில் அவர் 'டிரா' செய்தார்.
சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அர்மேனிய வீரர் ஹோவன்னிசியை எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தை 'டிரா' செய்த அவர் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 42-வது நகர்த்த லுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்தது.
அரிகிருஷ்ணா பெல்ஜியம் வீரர் டேனியலுடன் முதல் ஆட்டத்தில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார். இதேபோல பிரணவும், லாத்வியா வீரருடன் முதல் போட்டியில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார்.
விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 3 வீரர்கள் 2-வது ஆட்டத்திலும் 'டிரா' செய்தனர். இதனால் இன்றைய டை பிரேக்கரில் ஆடுகிறார்கள். இதில் வெற்றி பெற்றால் 4-வது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.
உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
- சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
- ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை:
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் அவர் மோதுகிறார். உலக போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். குகேஷ்-டிங் லிரன் மோதும் உலக செஸ் போட்டி நவம்பரில் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலை வர் டி.வி. சுந்தர் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம்.மாணிக்கம், அகில இந்திய செஸ் சம்மேளன முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், வேலம்மாள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.எம்.வேல்மோகன், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று டி.குகேஷை பாராட்டினர்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து 'டி.குகேஷ் பேசும்போது சீன வீரர் டிங் லிரனுடன் மோதும் உலக செஸ் போடடியில் எனது சிறந்த நிலையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
- போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
- 22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை, டிச.31-
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பைக் கான 15-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை ஓபன் செஸ் போட்டி ஏ, பி மற்றும் சி என 3 வகை பிரிவுகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 2 ஆயிரத்துக்கு மேல் ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முன்னணி வீரர்கள் ஏ பிரிவில் இடம் பெறு வார்கள். 2 ஆயிரம் ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் பி பிரிவிலும், 1800 ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் சி பிரிவி லும் ஆடுவார்கள்.
ஏ பிரிவினருக்கான போட்டி எழும்பூரில் உள்ள ராம்தா ஓட்டலில் நடை பெறும். 'பி' பிரிவினருக்கும், (2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை) 'சி' பிரிவினருக்கும் (6-8), நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 சர்வதேச மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர் கள் இந்த போட்டியில் பங்கேற்பதை உறுதி செய் துள்ளனர்.
ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ் இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக உள்ளார். ஈரோட்டை சேர்ந்த இனி யன், சித்தார்த் ஜெகதீஷ் (சிங்கப்பூர்), ஷியாம் சுந்தர் (சென்னை) ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் உள்ளனர்.
'ஏ' பிரிவில் 167 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 44 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் கள். கொலம்பியா, பெலா ரஸ், கிர்கிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவர்கள் விளையாடுகிறார் கள்.
10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெறும். மொத்த பரிசு தொகை ரூ.40 லட்சமாகும். 'ஏ' பிரிவில் ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. சாம்பி யன் பட்டம் பெறுபவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.3 லட்சமும் கிடைக்கும்.
சென்னை ஓபன் சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை சக்தி குரூப் நிறுவனத்தின் சேர்ம னும், தமிழ்நாடு செஸ் சங்க தலைவருமான எம்.மாணிக் கம் தொடங்கி வைக்கிறார். பீடே முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர், இந்தியாவின் முதல் சர்வ தேச மாஸ்டர் மானுசெல் ஆரோன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள் கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி தெரி வித்துள்ளார்.
* * *இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் வென்று இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிச்சேல் கேட்ச் பிடிப்பதை படத்தில் காணலாம்.






