என் மலர்
விளையாட்டு

சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 22 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்பு
- போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
- 22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை, டிச.31-
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பைக் கான 15-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 9-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
சென்னை ஓபன் செஸ் போட்டி ஏ, பி மற்றும் சி என 3 வகை பிரிவுகளில் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் 2 ஆயிரத்துக்கு மேல் ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முன்னணி வீரர்கள் ஏ பிரிவில் இடம் பெறு வார்கள். 2 ஆயிரம் ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் பி பிரிவிலும், 1800 ரேட்டிங் புள்ளிகளுக்கு கீழ் சி பிரிவி லும் ஆடுவார்கள்.
ஏ பிரிவினருக்கான போட்டி எழும்பூரில் உள்ள ராம்தா ஓட்டலில் நடை பெறும். 'பி' பிரிவினருக்கும், (2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை) 'சி' பிரிவினருக்கும் (6-8), நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
22 நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 17 கிராண்ட் மாஸ்டர்கள், 27 சர்வதேச மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர் கள் இந்த போட்டியில் பங்கேற்பதை உறுதி செய் துள்ளனர்.
ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆரோன்யக் கோஷ் இந்தப் போட்டியின் முதல் நிலை வீரராக உள்ளார். ஈரோட்டை சேர்ந்த இனி யன், சித்தார்த் ஜெகதீஷ் (சிங்கப்பூர்), ஷியாம் சுந்தர் (சென்னை) ஆகியோர் அதற்கு அடுத்த வரிசையில் உள்ளனர்.
'ஏ' பிரிவில் 167 வீரர், வீராங்கனைகள் பங்கேற் கிறார்கள். இதில் 44 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் கள். கொலம்பியா, பெலா ரஸ், கிர்கிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந் தவர்கள் விளையாடுகிறார் கள்.
10 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெறும். மொத்த பரிசு தொகை ரூ.40 லட்சமாகும். 'ஏ' பிரிவில் ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. சாம்பி யன் பட்டம் பெறுபவருக்கு ரூ.4 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.3 லட்சமும் கிடைக்கும்.
சென்னை ஓபன் சர்வ தேச கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை சக்தி குரூப் நிறுவனத்தின் சேர்ம னும், தமிழ்நாடு செஸ் சங்க தலைவருமான எம்.மாணிக் கம் தொடங்கி வைக்கிறார். பீடே முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர், இந்தியாவின் முதல் சர்வ தேச மாஸ்டர் மானுசெல் ஆரோன் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்து கொள் கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி தெரி வித்துள்ளார்.
* * *இலங்கை அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்திலும் வென்று இருந்ததால் அந்த அணி தொடரை கைப்பற்றியது. இலங்கை வீரர் குஷால் மெண்டீஸ் அடித்த பந்தை நியூசிலாந்து வீரர் மிச்சேல் கேட்ச் பிடிப்பதை படத்தில் காணலாம்.






