search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karate"

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்.
    • முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட் அடைய 10 ஆண்டுகள் வரை ஆகும்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜே.கே.எஃப். (JKF) டான் கிரேடிங் தேர்வுகளில் இந்தியா சார்பில் பங்கேற்று, கராத்தேவில் மிக உயர்ந்த அங்கீகாரமான பிளாக் பெல்ட்களைவென்று இளம் இந்திய வீரர்கள் அசத்தியுள்ளனர்.

    அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தை சேர்ந்த சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

    ஜே.கே.எஃப். என அழைக்கப்படும் ஜப்பான் கராத்தே கூட்டமைப்பின் சர்வதேச நிபுணர்களால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய கராத்தே அமைப்பாக இது போற்றப்படுகிறது.

    தனது மாணவர்கள் பிளாக் பெல்ட் வென்றது பற்றி பேசிய சென்செய் டைசன், "ஒரு மாணவர் முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட்டை அடைய ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாக் பெல்ட் எங்கிருந்து ஒருவர் பெறுகிறார் என்பது மிகவும் முக்கியம். எனது அனைத்து மாணவர்களும் ஜேகேஎஃப் அமைப்பிடமிருந்து பிளாக் பெல்ட்களைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

    • இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.
    • ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார்.

    தஞ்சாவூர்:

    உலக சிட்டோ ரியு கராத்தே கூட்டமைப்பு ஜகார்த்தா இந்தோனேசியாவில் 10-வது சர்வதேச அளவிலான சிட்டோ ரியு கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

    இதில் தஞ்சாவூர் டிராகன் சிட்டோ ரியு கராத்தே பள்ளியின் வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர்.

    ஆண்கள் குமித்தே பிரிவில் தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவன் அபி பாலன் தங்கம் பதக்கம் வென்றார். பெண்கள் குமித்தே பிரிவில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரி தேவதர்ஷினி வெண்கலம் வென்றார்.

    சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி சந்திப் குமார், கோச் கரண், பொன்னியின் செல்வன் ஆகியோர் இறுதிச்சுற்று வரை சென்றனர்.

    மேலும் போட்டியில் வடுவூர் நிவேதா, தஞ்சாவூர் பவதாரிணி, அரியலூர் நடராஜன், தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஜெய்தேவ், வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி ஜெய் ஜோஷிகா ஆகியோர் போட்டியில் பங்கு பெற்றனர்.

    வெற்றி பெற்ற வீரர் ,வீராங்கனைகளை தலைவர் அருண் மச்சையா, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் பாராட்டினர்.

    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    • மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டிக்கு மாணவர்கள் தேர்வு நடைபெற்றது
    • போட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர்.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் சார்பாக மாநில அளவில் நடைபெறும் சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் கலந்துகொள்வதற்கான போட்டித்தேர்வு வேலாயுதம்பாளையம் மலைநகரில் உள்ள கராத்தே பயிற்சி மையத்தில் நடைபெற்றது. கராத்தே போட்டித்தேர்வில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 வயது முதல் 14 வயது வரை உள்ள ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கராத்தேவில் ஈடுபட்டனர். இதில் கியோஷி சரவணன் மற்றும் ரென்சி செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கராத்தே போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். மாவட்ட அளவில் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளை கராத்தே பயிற்சி சீனியர் மாணவர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
    • பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்க ளுக்கு தகுதி அடிப்படையில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா நடந்தது.

    பள்ளி தாளாளர் முகை தீன் இபுராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட கென்சிகாய் கொஜீ ரியூ சுராத்தே பயிற்சியாளர் சசி குமார் வரவேற்றார். கராத்தே ஆசிய பயிற்சி யாளர் கியேசி சேகர் முன்னிலை வகித்தார்.

    விழாவில் 3 மாதம் பயிற்சி பெற்ற 43 பேருக்கு மஞ்சள் பெல்ட், 6 மாதம் பயிற்சி பெற்ற 18 பேருக்கு ஆரஞ்சு பெல்ட் 6 பேருக்கு பச்சை பெல்ட். 1 வருடம் பயிற்சி பெற்ற 8 பேருக்கு நீல பெல்ட். ஒரு வருடத்திற்கு மேல்பயிற்சி பெற்ற 8 பேருக்கு கரு நீல பெல்ட், 2 வருடம் பயிற்சிபெற்ற 12 பேருக்கு பிரவுன்பெல்ட் வழங்கப்பட்டது.

    பள்ளி தாளாளர் எம் எம்.கே.முகைதீன் இபுராகிம், ஆசிய பயிற்சியாளர் கியேசி சேகர் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் நன்றி கூறினார்.

    • 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
    • பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் குரல் இசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலை பயிற்சி வகுப்புகள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும் , கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பரதநாட்டியம் , கிராமிய நடனம்,, குரல் இசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரல் இசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடக்கிறது.

    இந்த போட்டிகள் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்டோர், 9 முதல் 12 வயதிற்கு உட்பட்டோர், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.

    இதில் கலந்து கொள்ளும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் காலை 9 மணிக்கு வர வேண்டும். இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களை ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

    தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய கலை நடனங்கள் ஆடலாம். பக்க வாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சம் ஐந்து நிமிடம் நடனம் ஆட அனுமதிக்கப்படும்.

    குறலிசை போட்டியில் கர்நாடக இசை, தேசிய பாடல்கள் , சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். ஓவியப்போட்டி தொடங்கப்படும் போது ஒவ்வொரு வயதினருக்கும் தனித்தனியாக தலைப்புகள் அறிவிக்கப்படும். ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது
    • இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது

    முசிறி:

    முசிறி புடோகன் கராத்தே பயிற்சி பள்ளியில் தகுதி பட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கராத்தே மாஸ்டர் செவன்த் டான் அசோக்ராஜ் தலைமை வகித்தார். சீனியர் மாணவர்கள் உமாராஜா, தமிழரசன், சுகுமார், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் தமிழரசன், செங்கனிசெல்வி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். விழாவை முன்னிட்டு முசிறி, தா.பேட்டை, தொட்டியம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்களுக்கு பயிற்சியும், போட்டிகளும் நடத்தப்பட்டது.

    பின்னர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கராத்தே மாஸ்டர் அசோக்ராஜ் கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு, நீலம் உள்ளிட்ட பல்வேறு நிற பட்டைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். இப்பயிற்சி பள்ளியில் கராத்தே வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் முசிறி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.


    • அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது.
    • சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெற செய்த மாஸ்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    புதுவை உப்பளம் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கில் அகில இந்திய கராத்தே டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

    அதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்பார்க் அகாடெமியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டி களில் இம்மாணவர்கள் 13 தங்க பதக்கமும், 12 வெள்ளி பதக்கமும், 17 வெண்கல பதக்கமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    தேசிய அளவில் புதுச்சேரி மாணவர்கள் முதலிடமும் தமிழ்நாடு மாணவர்கள் (நாகப்பட்டினம்) 2வது இடமும் கர்நாடகா மாநிலம் 3-வது இடத்தை யும் பெற்றுள்ளனர்.

    குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக பயிற்சி அளித்து மாணவர்களை வெற்றி பெறச் செய்த மாஸ்டர் பாண்டியனுக்கு பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி தொடங்கி வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் சிறப்பு கட்டா பயிற்சி முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் ருக்மா சரவணன் தலைமை தாங்கினார்.காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதுரையில் இருந்து வருகை புரிந்த பிளாக் பெல்ட் 3-வது டான் பயிற்சியாளர் தன நாராயண பிரபு குழுவினர், சிறப்பு பயிற்சி அளித்தனர். இதில் சிவகங்கை மாவட்ட கராத்தே சங்க நிர்வாகிகள் வீரசேகர், தியாகராஜன், சிரஞ்சீவி, சந்தீப், அயயாரு, சண்முகவேல், கஸ்பாரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழை ஜே.சி.ஐ. காரைக்குடி கிங்ஸ் இயக்க தலைவர் ராஜீவ் வழங்கினார்.சங்க செயலாளர் சென்டாய் சுகுமார் நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே தனியார் கல்லூரியில் உலக சோட்டோகான் கராத்தே பெடரேஷன் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது. 6 வயது முதல் 20 வயது வரை பங்கேற்ற மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியை உலக சோட்டோகான் பெடரேஷன் அமைப்பின் தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். செயலாளர் பால்பாண்டி முன்னிலை வைத்தார். துணைத் தலைவர் அவனமுத்து வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கேரளாவைச் சேர்ந்த விபூஷணன் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    செயற்குழு உறுப்பினர்கள் நவாஸ்ஷெரிப், சுபாஷ், விக்னேசன், ஹரிகரன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருமங்கலம் மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

    திருமங்கலம்

    கொடைக்கானலில் 6-வது தேசிய அளவிலான ஓப்பன்கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் திருமங்கலம் உலக ஷோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் சார்பில் 22 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கட்டா மற்றும் குமிட்டே பிரிவுகளில் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நந்தினி, டயானா, மனீஷா, கிருஷ்ணகிஷோர், கோகுல்பதி, கருத்திக் ஆகியோர் தங்கப்பதக்கமும், தாரணி, சஞ்சுஷிரி, தரண்கார்த்திக், பாலபிரணவ், தங்கேஸ்வரன், சூரியபிரகாஷ் ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கராத்தே சம்மேளத்தின் தமிழ்நாடு பிரிவு மாநில பிரதிநிதி பால்பாண்டி, கராத்தே மாஸ்டர்கள் நவாஷ், சுபாஷ், விக்னேஷன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டினர்.

    ×