search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Long life"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
    • தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.

    கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.

    அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.

    `(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.

    `பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.

    `எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.

    பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.

    இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.

    மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.

    அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.

    இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

    இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)

    எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    ×